Monday, 18 March 2013

மதுவிலக்கு இங்கே சாத்தியமாகுமா?


மீண்டும் மதுவிலக்கு -- -- சாத்தியப்படுமா -- -- ஒரு சிந்தனை!


அனைவருக்கும் வணக்கம். இன்றைய தினக் ஒரு

 சமூக சிந்தனையின் 

அடிப்படையில் உங்கள் பார்வைக்கு தரும் கட்டுரை 

மதுவிலக்கு பற்றியது

மீண்டும்தமிழ்நாட்டில்மதுவிலக்குஅமல்படுத்தபட

வேண்டும்என்றுபாட்டாளிமக்கள் கட்சி தொடங்கி 

வைத்த போராட்டம் அதைஅடுத்து  மறுமலர்ச்சி 

தி.மு.க.அதோடு இணைந்து  போராடியதை 

தொடர்ந்துதற்போதுகாங்கிரஸ் கட்சியும் 

இன்றைய தினம்போராட்டகளத்தில்குதித்துள்ள 

காட்சியை பார்க்கும் போது அழுவதா இல்லை 

சிரிப்பதஎன்றுதெரியவில்லை.

பாட்டாளி மக்கள் கட்சி ம.தி.மு.க. இவைகள் 

மாநில கட்சிகள் 

தமிழகத்தை தவிர வேறு எங்கும் கிளைகள் 

இல்லாத ஒரு கட்சிகள் அதன் 

போராட்டத்தை நாம் ஏற்றுகொள்ள இயலும்.

ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு என்ன அருகதை 

உள்ளது இப்படி ஒருபோராட்டம் நடத்த? 

காங்கிரஸ் ஆட்சி புரியும் ஏனைய மாநிலங்களில் 

போய் தமிழக காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் 

நடத்த தயாரா அல்லது 

நடத்தத்தான் முடியுமா?

சரி இப்பொது தொடங்கிய பிரச்சினைக்கு நாம்

வருவோம். 1972ஆம் ஆண்டு அப்போதைய 

தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் 

மதுவிலக்கு கொள்கை கைவிடப்பட்ட விஷயம் 

இன்றைய இளைஞாகள் அறிய நியாயம் 

இல்லை.அபோது மதுவிற்பனை தனி நபர்களுக்கு 

ஏலம்மூலமாக கொடுக்கப்பட்டு அதன் மூலமாக 

அரசுக்கு கிடைத்த வருமானம்வெறும் 3,200 கோடி 

ரூபாய்கள் மட்டுமே. 

ஆனால் தற்போது நிலைமையே வேறு. தற்போது 

உள்ள தமிழக அரசு மது விற்பனையை அரசே 

ஏற்று டாஸ்மாக் மூலமாக நடத்துவதால் வரும் 

வருமானம் 26000 கோடி ரூபாய்களை தாண்டி 

எங்கோ சென்று கொண்டிருகிறது. உண்மையை 

சொல்லபோனால் அரசாங்கம் நடப்பதே 

மது விற்பனை தொகையை வைத்துதான்.

நிலைமை இப்படி இருக்கும் போது எப்படி 

சாத்தியம் மதுவிலக்கு கொள்கையைதமிழகத்தில் 

மீண்டும் அமல்செய்வது.எல்லாம் அந்த 

ஆண்டவனுக்கே வெளிச்சம்.  

No comments:

Post a Comment