Sunday, 17 March 2013


பழி ஓரிடம்!! பாவம் ஓரிடம்!!



உலகெங்கணும் வாழ்ந்து வரும் என்

உயிரினும் மேலான அன்புத் தமிழ் 

நெஞ்சங்களுக்கு எனது அன்பு நிறைந்த 

வணக்கம்.


மேலே சொன்ன கருத்து பொதுவாக ஒருவர்  

தீங்கு இழைத்துவிட்டு சென்று விடுவார். 

ஆனால் அந்த தீங்கு வேறு ஒருவர் 

தலையில் விழும். அந்தநிலையைத்தான் 

மேற்சொன்ன பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என 

கூறுவார்.


இதற்கு நாம் வேறு எங்கும் உதாரணம் தேடி 

செல்ல  வேண்டிய அவசியம் இல்லை.

அது நம் முகத்திலேயே உள்ளது.நமது 

எதிரியை நமக்கு பிடிக்காதவரை பார்த்து 

வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு அவருக்கு 

கோபத்தைஉண்டாகிவிட்டுநாக்குசுகமாகஉள்

சென்றுஅமர்ந்துவிடுகிறது.


ஆனால்பாதிக்கப்படும் அந்த நபர் விடுகின்ற 

அடியில் கொடுக்கின்ற குத்தில் உடைவது 

என்னவோ ஒன்றும் அறியாத பல்தான். 

அதனால் தான் வள்ளுவன் சொன்னது:-


யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
    
சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு.... ..
..
அதாவது நீ உனது வாழ்கையில் எதை 

காப்பாற்றாமல்இருந்தாலும்பரவாயில்லை.

உனக்கு கேடு இல்லை.உனது நாக்கை 

காப்பாற்றாமல் இருந்தால் உனக்கு வாழ்வில் 

மிகபெரும் இழுக்கு உன்னை தேடி வரும்.நீ 

உணர்ந்து கொள்.என்று வான் புகழ் 

வள்ளுவன் சொன்னதை நாம் 

இனியாகிலும்நமதுவாழ்வில்கடைபிடிப்போமா

நேயர்களே.வணக்கம்.

No comments:

Post a Comment