Friday, 15 March 2013

நல்ல விஷயங்களைத் தொடர்ந்து செய்க !!


எதுவும் நெடுகிலும் நடக்கணும்!!



பொதுவா நம்மகிட்ட ஒரு கெட்ட பழக்கம் உண்டு.

அது என்ன என்றால் நல்ல விஷயங்கள் எல்லா வற்றையும்  நாம கொஞ்ச நாள் மட்டுமே அல்லது    கொஞ்ச மாதம் மட்டுமே  செய்வது.

அப்புறம் அதை கை விட்டுவிடுவது இப்படியே தான் நாம் எப்பொழுதும் வாழ்ந்துகொண்டு வருகிறோம்.

எந்த விஷயத்தையும் நாம ஆரம்பிப்பதற்கு முன்னர் நன்றாக ஆராய்ந்து இது
நம்மால் நீண்டகாலத்திற்கு நடைமுறை படுத்த முடியுமா இது சாத்தியமா
என்று யோசித்து முடிவு எடுத்து செயல் படுத்தவேண்டும்.

சும்மா ஒரு மாசம் இரண்டு மாசம் மட்டும் கடைப்பிடித்துவிட்டு அப்புறம்
கைவிட்டு விட்டோம் என்றால் ஊரார் கைகொட்டி சிரிப்பார்கள்.திருவள்ளுவர்
சொன்னார்-:
        அதிகாரம்:- தெரிந்து செயல்வகை.
        குறள் எண்:-  467.

        எண்ணித்துணிக கருமம் துணிந்தபின்
        எண்ணுவம் என்பது இழுக்கு.. .. .. .. ..

அதனாலே யோசித்து முடிவு எடுக்கவேண்டும்.முடிவு எடுத்து பிறகு அதை
கைவிடக்கூடாது. நன்றி.வணக்கம்.மீண்டும் அடுத்த கட்டுரைல்யில் நாம்
சந்திப்போம்.நன்றி.வணக்கம். மதுரை T.R.பாலு.


No comments:

Post a Comment