Friday, 15 March 2013

இலவசத்தினை ஏற்க மறுத்திடுவீர் !!


இலவசம் என்றால் இப்படி!
காசு என்றால் அப்படி!!
என்ன கொடுமையடா!!!


அனைவருக்கும் வணக்கம்.

பொதுவா நம் மக்கள் கிட்ட ஒருகெட்ட பழக்கம் உண்டு.
அதுவும் சமீபகாலமா ஒட்டு வாங்கி பிழைப்பு நடத்தும் நமது பெருமைமிகு
அரசியல்வாதிகளால் மக்களுக்கு பெருமையுடன் வழங்கப்பட்டுள்ளது இந்த இலவசம் மட்டுமே !!

நான் அதைப்  பற்றி எழுதவோ பேசவோ வரல்லை.இது ஒரு கதை:-

ஒரு நாள் ஒரு கப்பல் நிறைய பாரசீக நாட்டு பேரழகிகள்,பார்த்தாலே 
மனம்மயங்கும்.அப்படி ஒரு  அழகோ அழகு

நம்ம நாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.
கடற்கரையில் பார்தால் ஒரே கூட்டம்.அலை மோதியது.அப்போது  அந்த கப்பலின்
சொந்தக்காரர் சொன்னார். அழகிகள் வேண்டும் என்பவர்கள்எல்லோரும்வாருங்கள்.
வந்து வரிசையாக நில்லுங்கள்  என்று சொல்ல ஒருவர்
வந்தார்.அவர் என்ன வேண்டும் என்று சொன்னார் என்றால்:-

எங்க தாத்தாவுக்கு ஒருத்தி தேவை !
எங்க அப்பாவுக்கு ஒருத்தி  தேவை !!
எனக்கு ஒருத்தி தேவை !!
அப்புறம் என்னோட தம்பிக்கு ஒருத்தி தேவை !!

ஆகமொத்தம் நாலு அழகிகள் வேண்டும் எனசொல்ல கப்பல்காரர் சரி அதுக்கு
என்ன தந்தால்போச்சு என்று  சொல்லிட்டு நான்கு பேருக்கும் தலா  ஒரு
அழகிக்கு ருபாய் பத்தாயிரம் வீதம் நாலுபேருக்கு மொத்தம் நாற்பதாயிரம்
பணத்தை எடு என சொன்னாராம்.உடனே அழகியை வாங்க வந்தவர்.
சுதாரித்துக் கொண்டு என்னாங்க இது நீங்க இலவசமா தருவீங்கன்னு இல்ல
நினச்சேன். சரி சரி  பரவா  இல்லை.
உண்மையை சொல்றேன்.நீங்க யார்கிட்டேயும் சொல்லாதீங்க
.
எங்க தாத்தாவுக்கு வயசு ரொம்ப ஆயிட்டுது.
எங்க அப்பாவுக்கு எங்க அம்மா இருக்காக.
எனக்கு இப்போதைக்கு  கல்யாண ஆசை இல்லை.
என் தம்பி ரொம்ப சின்ன பயல்.
அப்படின்னு சொல்லிட்டாராம்.

பாருங்களேன் மனித மனதில் தோன்றும் எண்ணச்சிதறல்களை.!!
இலவசம் என்றால் ஒன்று காசு என்றால் இப்படி.என்ன கொடுமையடா
இந்த கதை எனது அன்புத்  தந்தை அவர்கள் நான் சிறுவனாக இருந்தபோது
அவரது நண்பர்களிடம் கூறிடும்போது நான் ஒளிந்து இருந்து கேட்ட
கதைகளுள் இதுவும் ஒன்று. .
மீண்டும் அடுத்த கட்டுரை விளக்கத்தில் சிந்திப்போம் நேயர்களே.
நன்றி வணக்கம் மதுரை T.R.பாலு  

No comments:

Post a Comment