Wednesday, 13 March 2013

உண்மையான உறவுகள் யார் யார் ?





உண்மையான உறவு என்பது எது? ?





இறைவனால் படைக்கப்பட்ட இந்த பூமியில்


எத்தனை எத்தனையோ ஜீவ ராசிகள்


பிறக்கின்றன! வாழ்கின்றன!!மடிகின்றன!!!


ஆனால் அவை அத்தனையையும் விட மனிதப் 


பிறவியே உயர்வான பிறவி  என்று 

கருதப்படுகிறது. எதனால்? 


சற்று சிந்திப்போமா!!

நேயர்களே. இந்த உயர்வுக்கு காரணம் 

மனிதபிறவி ஒன்றில் மட்டுமே உறவுகள் என்பது 

பிண்ணி  பிணைந்து இருக்கின்றது, 


நம் மனிதபிறப்பில் மட்டுமே

அப்பாஅம்மாஅக்காஅண்ணன்,தம்பி,தங்கை,மாமன் 

மச்சான்,சகலர், இதுபோல இன்னும்

எத்தனையோ உறவுகள் நம்மிடம்  மட்டுமே

இருப்பதனால் அந்த உயர்வு நமக்கு

கிடைத்துள்ளது. 

அப்படி பெற்ற அந்த

உறவுகளில் நமக்கு உண்மையான உறவு எது 

என்பதே இன்றைய கேள்வி? 

இதற்கு சங்ககால 

இலக்கியங்கள் பல்வேறு பாடல்கள் மூலம் 

நமக்கு உண்மைகளை வெளிச்சம் போட்டு 

காட்டுகிறது.. 

அந்த வகையில் ஒரு பாடலை 

உங்கள் முன் சமர்பிக்கிறேன்-

""அற்ற குளத்து அருநீர் பறவைபோல்

உற்றுளித்தீர்வார் உறவல்ல-அக்குளத்தில்

நெட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறவோர் உறவே உறவு!!
...
 .. ...
அதாவது குளம் நிறைய நீர் இருக்கும் போது 

அதில் ஏகப்பட்ட நீர்வாழ் உயிரினங்களான மீன் 

நண்டு என பல்வேறுஇனங்கள் 

வாழ்ந்திடும்அப்போதுஎல்லா பறவை இனங்களும்

அக்குளத்தின் அருகில் உள்ள மரங்களில் 

கூடுகட்டி வாழ்ந்துவரும்  எதற்காக என்றால்  

தத்தமது உணவுதேவைகள் அக்குளத்தில்

கிடைத்துவிடுவதனால்..ஆனால்.

அதேசமயம்,விதிவசத்தால் அந்த குளம் வற்றி 

நீர் அனைத்தும் வறண்டு உயிரினங்களான மீன்

நண்டு ஏதும் இல்லை எனில் பறவைகூட்டங்கள் 

நீர்நிறைந்தவேறுகுளம்தேடிச்சென்றுவிடும்ஆனால் 

அதே குளத்தில்,வாழும் 

தாவர இனங்களான  நெட்டி கொடிகள்,தாமரை 

செடிகள் போன்றவைகள் குளத்தில் நீர் எவ்வளவு 

உயரம் உள்ளதோ அப்போதும் சரி நீர் மட்டம் 

குறையக்குறைய அந்த செடிகளும் கூடவே 

இருந்து நீர் முற்றிலும் வற்றிய நிலைவரினும் 

தரையோடுதரையாக மண்ணோடு மண்ணாகி

அந்த மண்ணில் ஈரம் காய்ந்து போகும் வரை 

வாழ்ந்து பின் மக்கி மறைந்துவிடும். அதுபோல 

கஷ்டம் வந்தாலும் நம்முடன் கூட இருந்து அந்த 

கஷ்டத்தில்  பங்குஎடுத்து இறுதிவரை நம்முடன் 

கூட  இருக்கும் உறவுகள் மட்டுமே

உண்மையான உறவு என நம் முன்னோர்கள் 

கூறிச்சென்றுள்ளார்கள். நாமும் 

அதைகடைபிடித்து நம் வாழ்வில் உண்மை 

உறவுகளை அறிந்து செயல்படுவோம். நன்றி!

வணக்கம்!!மதுரை T R.பாலு.மீண்டும் சந்திப்போம் 

அதன் பிறகு எப்பொழுதும்  சிந்திப்போம்!!
 

            
  

No comments:

Post a Comment