Friday, 7 February 2014

மறைந்த சினிமா பின்னணிப் பாடகர் மதுரை T.M.சௌந்திரராஜனின் ஆரம்பகால நினைவுகள்.








உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!










உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 



என் உயிரினும் மேலான அன்புத் 



தமிழ் உடன்பிறப்புகளே !! உங்கள் 



அனைவருக்கும் எனது இதயம் 



கனிந்த வணக்கம்.



அன்பர்களே !!



உங்களில் பலருக்குத் தெரிந்து 



இருக்க நியாயம் இல்லை.ஆகவே 



அதனை இப்போது உங்கள் 



அனைவரின் சிந்தனைக்கு 



விருந்தாகப் படைப்பதில் நான் 



மிகவும் பெருமைப்படுகிறேன்.



மதுரையைச் சேர்ந்த  தொகுளவ



மீனாட்சி அய்யங்கார். இதுதான் 



T.M. என சுருக்கப்பட்டு அவரது 



பெயரான சௌந்தரராஜன் 



என்பதோடு இணைக்கப்பட்டு 



T.M.சௌந்திரராஜன் என்று 



எல்லோராலும் அழைக்கபட்டார் 



இவர். இவர் முதன்முதலாக 



பின்னணிப் பாடகராக  சினிமாவில் 



அறிமுகம் செய்யப்பட்ட படம்தான் 



" கிருஷ்ண விஜயம் " எனும் படம்.  



இப்படத்தில் நான்கு பாடல்கள் 



இவரால் பாடப்பட்டது. தமிழ் 



உச்சரிப்பு மிகவும் தெளிவாக 



இருந்ததினால் இவரது பாடல்கள் 



படத்திற்கு மிக நன்றாக இணையும் 



என்கின்ற நம்பிக்கை தமிழ் சினிமா 



படத்தயாரிப்பாளர்கள் மத்தியில் 



உருவான காலம் அது. அப்போது 



மிகவும் பிரசித்தி பெற்று உச்சாணிக் 



கொம்பில் இருந்தவர்தான் பிரபல 



திருச்சி லோகநாதன் ஆவார். 



இவரிடம் சென்று " தூக்குத்தூக்கி " 



படத் தயாரிப்பாளர்கள் எட்டுப் 



பாடல்கள் பாடித் தரவேண்டும் என 



கேட்டபோது லோகநாதன் என்ன 



சொன்னார் என்றால், இது தற்போது 



சாத்தியப் படாது. ஏன் எனில் நான் 



தற்போது ஏறத்தாள இருபதுக்கு 



மேல் தயாராகிக்கொண்டு உள்ள 



படங்களுக்கு பாடல் பாட ஒப்பந்தம் 



செய்யப்பட்டுள்ளதாகவும், தவிர 



தற்போது தான் ஒரு பாடலுக்கு 



5௦௦ ரூபாய் (தற்போதைய இதன் 



மதிப்பு 5௦௦௦௦ ஆயிரம் ரூபாய்க்கு 



மேலாகும்) உடனே இந்தப் படத்தின் 



இசை அமைப்பாளர் G.இராமநாதன் 



அடங்கப்பா,என்னலோகு இவ்வளவு 



கேக்கிற,என்றவுடன்,அண்ணே இப்ப 



மதுரையிலிருந்து ஒரு பையன் பேரு   


சௌந்திரராஜன்அவனைநீங்கபோய் 


பாருங்க. பாவம் பையன் ரொம்பவும் 



கஷ்டத்திலே இருக்கான். இதைக் 



கேட்டவுடன், அவர்கள் T.M.S. என்ற 



பையனை அழைத்து பேசினார்கள்.



எட்டுபாடலுக்கும்மொத்தமாகபணம் 



இரண்டாயிரம் என ஒப்பந்தம் நாம 



போட்டுக்கொள்ளலாமாஎன்றுஅவர் 



சௌந்திரராஜனிடம் கேட்டவுடன் 



அவர் அடைந்த மகிழ்ச்சிக்குஎல்லை 



என்பதே இல்லை என ஆனது. ( ஏன் 



எனில்அதுவரைசௌந்திரராஜனின்



வருமானம்என்னதெரியுமா ?மதுரை 



பஜனைமடங்களில்பாடியதற்கு



சௌந்திரராஜன் பெற்ற சம்பளம் 



சன்மானம்,காபிஓட்டல்காராச்சேவு 



மற்றும் காபி இத்துடன் பக்கோடா 



இதுமட்டுமே.)     முதலில்   எட்டு



பாடல்களில் மூன்று பாடல்கள் 



கம்போஸ் ஆனது. 



அந்த " தூக்குத் தூக்கி "  படத்தின் 



கதாநாயகன் சிவாஜியோ என்னசார் 



இது புது ஆளைப் போய் 



பாடச்சொல்றீங்களே 



எப்படி இருக்கும்? பேசாம நம்ம 



C.S. (சிதம்பரம் ஜெயராமன்) 



அவர்களைபோடலாமே என்றவுடன் 



அவரிடம் இசை அமைப்பாளர் 



G.இராமநாதன் சிவாஜியிடம்,  தம்பி, 



இவர் குரல், உங்களுக்கு மிகவும் 



இயல்பானதாக இருக்கும். 



நீங்களே பாடுவதுபோல 




மிகவும் இயற்கையாக இருக்கும்என 



பக்குவமாகபேசி,பாடலைப்போட்டுக் 



காட்டியவுடன், சிவாஜி முகத்தில் 



மிகவும் மகிழ்ச்சி. அனைத்து 



பாடல்களையும் 



இவரையேபாடிடச்சொன்னார்.



இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட 



மக்கள் திலகம் M.G.R. 



சவுந்திரராஜனை நேரில் அழைத்து 



பாடச் சொல்லி கேட்டவுடன் இவரை 



"  மலைக்கள்ளன் "  படத்தில் 



பிரபலமான பாடலான " இன்னும் 



எத்தனை காலம்தான் 



ஏமாற்றுவார் இந்த நாட்டிலே "என்ற 



MGRன்முதல் கொள்கை விளக்கப் 



பாடலைப் பாடிய பெருமை T.M.S.யே 



சாரும். இந்தப் பாடலில் இருந்து 



சௌந்திரராஜனுக்கு சுக்கிர திசை 



ஆரம்பம் ஆனது. இதுதான் 


மதுரை T.M.சௌந்திரராஜன் 



ஆரம்பகாலக் கதையின்சுருக்கமான 



விபரம் ஆகும். 



மீண்டும் எனது அடுத்த கட்டுரையில் 



உங்கள் அனைவரையும் நான் 



சந்திக்கிறேன்.



நன்றி  !!  வணக்கம் !!




அன்புடன். மதுரை T.R.பாலு.




(தகவல்கள் நன்றி :- தி இந்து (தமிழ்) 



௦7-௦2-2௦14.வெள்ளிக்கிழமை )

1 comment:

  1. Play Roulette Online at Proven Casinos
    We list the best roulette casinos to play roulette 슬롯 나라 online for real money! Find top real 온라인슬롯머신 money roulette 룰렛 배당 games and start 도박장 winning. 하이 포커

    ReplyDelete