தொடர்ச்சி...பாகம் எண். 2.கோவில் அய்யருக்கு குடும்பம் பெருத்துப் போன கதை தெரியுமா ? உங்களுக்கு !!
நாளைக்கு
புதன்கிழமை. பொன் கிடைச்சாலும்
புதன் கிடைக்காதுன்னு
சொல்லுவாங்க பெரியவங்க. அப்ப
நாளையிலே இருந்து கோவில்
பொறுப்பை ஏத்துக்கிடும். ஐந்து
வேளை அபிஷேகம், ஆராதனை,
பூஜை புனஸ்காரம் எல்லாமே
கரெட்டா பண்ணனும் சாமி. நான்
வாறன்.
அய்யர்:- ஷேமமாப் போயிட்டு
வாங்கோ. நாளையிலேருந்து டூட்டி
ஜாயின் பண்ணிடுறேன். சும்மா
ஜமாய்ச்சுறலாம். பூஜ, புனஸ்காரம்
அபிஷேகம் ஆராதனை எல்லாமே.
ஆமா ஆராதனத்தட்டுலே சில்லற
நிறைய விழுமோல்லியோ ? இல்ல
சித்த சும்மாத்தான் கேக்கிறேன்.
தல:- யோவ். அய்யரே நீர்விவரமான
சாமிதான்யா. கரெட்டா சில்லறை
விஷயத்துலே ரொம்ப கருத்தா
இருக்கேயே சாமி.
அய்யரு:- இருக்காதோ பின்னே.
பணம் இல்லன்னா அவன்
பிணந்தானே என்ன நான் சொல்றது
சரியோ ?இல்ல தப்போ ?
தல :- அய்யா சாமி ஆளை விடும்.
எனக்கு நேரமாச்சு. நாளைக்கு
காலயிலே 6.௦௦ மணிக்கெல்லாம்
பூஜைய ஆரம்பிச்சுரும். நான்
வாறன்.
அய்யர்:- சரிங்கோன்னா.நானும்
போயிட்டு வாறன். நமஸ்காரம்.
நன்னா ஷேமமா இருங்கோ.
நமசிவாய. எல்லாருக்கும் நல்ல
புத்தியைக் கொடுப்பா.
நாடகம் காட்சி எண் .2 நாளை
மாலை 6.3௦ மணிக்கு மீண்டும்
தொடரும்.
********************************************************************************
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
காட்சி எண் :- 2.
காட்சியில் பங்கேற்போர்:-
பஞ்சாயத்து தலைவர், அவரது
குடும்பம், கோவில் அய்யர், ஊர்
பொதுமக்கள் மற்றும் பலர்.
அய்யர் :- என்ன தேவர்வாள்
புள்ளையாருக்கு அபிஷேகம்,
அலங்காரம் எல்லாம் நன்னா
செஞ்சாச்சு பூஜைய எப்ப
ஆரம்பிக்கலாம் ? யார் பேருக்கு
அர்ச்சனை ? சொல்லுங்க ?
தலைவர்:- வேற யாரு பேருக்கு
செய்யப்போரீர். எல்லாம் என்
பேர்தான் பேரு பருத்திவீரன். சிவ
கோத்திரம். பரணி நட்சத்திரம்.
பண்ணுங்கோ.
(அர்ச்சனை முடிந்தது.
எல்லோருக்கும் பிரசாதம்
தரப்பட்டது. தலைவர் வீட்டிற்குக்
கிளம்புகிறார்.)
மாதம் 3 முடிகின்றது.
(கோவிலிலேயே தங்கி அய்யர் 5
வேளை பால் அபிஷேகம் உட்பட
அனைத்தும் வரிசைக்கிரமமாக
நடத்தப்படுகிறது. நாட்கள்
செல்கிறது. ஒரு நாள் தலைவர்
கோவிலுக்கு வருகிறார்)
தலைவர் :- என்ன சாமி. எப்படி
போகுது. எல்லாம் ஒழுங்கா
நடக்குதா ? சொல்லு சாமி
எதுனாச்சும் குறை இருந்தா ?
அய்யர் :- அது இல்லனா !! நாம 5
வேளை பால் அபிஷேகம்
செய்யிறோமோஇல்லையோ
தல :- ஆமா .அதுக்கு என்ன இப்போ.
அய்யர் :- அது பால் நிறையத்
தேவைப்படறது.
தல :- ஆமா தேவைப்படும். அதுக்கு
என்ன இப்போ ?
அய்யர் :- இங்கே வர்ற பால். பாலா
அது. அது வெறும் வெள்ளைத்
தண்ணீர். புள்ளையாரை நிந்தனை
செஞ்சா மாதிரி. அதனாலே .......
தல :- அதனாலே ...சொல்ல வரத்தை
சட்டு புட்டுன்னு சொல்லும் அய்யரே.
அய்யர் :- அதால நான் என்ன
சொல்றேன்னா பேசாம ஒரு
சீமைப்பசுவைக் கொண்டு வந்து
கோவில் தொழுவத்துலே கட்டிடும்.
நல்ல கட்டிப்பாலை நாமஅபிஷேகம்
செஞ்சா நமக்கு புண்ணியம்
தேவர்வாள்.
தல :- சரி அய்யரே. நாளைக்கே நான்
சீமைப்பசுவைக் கட்டிடுவேன். ஆனா
ஒன்னு. நீர்தான் மாட்டைப்
பாத்துக்கிடணும். என்ன சரியா?
அய்யர்:- சரிங்க தேவர்வாள்.
அப்படியே செய்றேன்.பேஷா.
தல:- நாளைக்கு காலைலே 5
மணிக்கு எல்லாம் மாடு வந்துரும்.
இப்ப, அய்யா சாமி ஆளை விடும்.
எனக்கு நேரமாச்சு. நாளைக்கு
காலயிலே 6.௦௦ மணிக்கெல்லாம்
பூஜைய ஆரம்பிச்சுரும். நான்
வாறன்.
அய்யர்:- சரிங்கோன்னா.நானும்
போயிட்டு வாறன். நமஸ்காரம்.
நன்னா ஷேமமா இருங்கோ.
நமசிவாய. எல்லாருக்கும் நல்ல
புத்தியைக் கொடுப்பா.
தொடரும்.
****************************************
****************************************
காட்சி எண் :- 3.
பங்கேற்போர் :-
No comments:
Post a Comment