Friday 14 March 2014

தம்பி !! " எதையும் தாங்கும் இதயம் வேண்டும் " இந்த வாசகத்தின் உண்மைப் பொருள் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ?








     பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் 



                          ரஹீம் !!



அஸ்ஸலாமு அலேக்கும் !!             



அளவற்ற அருளாளனும் நிகரற்ற 


கொடையாளனுமாகிய எல்லாம் 


வல்ல " அல்லாஹ்வின் " அன்புக் 


கருணையினால் மட்டுமே இந்தக் 


கட்டுரை உங்களுக்குப் படித்திடக் 


கிடைத்து உள்ளது அன்பர்களே !!       



நம் தாயகமாம் தமிழகத்தில் உள்ள 



அரசியல் கட்சிகளுள் தலைவர்கள் 



பலமும் தொண்டர்களின் சக்தியும் 



ஒருங்கே அமையப்பெற்றுள்ள ஒரே 



ஒரு இயக்கம்தான் திராவிட 



முன்னேற்றக் கழகம் ஆகும். அதன் 



நிறுவனர் தலைவர் பேரறிஞர் 



C.N.அண்ணாத்துரை ஆவார். ஒரு 



நாளைக்குஒரேஒருவேளைமட்டுமே 


உணவு உட்கொள்ளும் வழக்கத்தை 



இவர் வெகுபல ஆண்டுகளுக்கு முன்



தனது வாழ்வினில் கடைப்பிடித்து 



வாழ்ந்து வந்தவர். பகல் 



மணியிலிருந்து இவரது உறக்கம் 



ஆரம்பம் ஆகும். சரியாக இரவு எட்டு 


மணிக்கு விழித்திடும் பழக்கம்உள்ள 



இவர் அதன் பின்னர் தன்னைத்தயார் 



செய்து பொதுக்கூட்டங்களுக்குச் 



சென்று உரைநிகழ்த்தி அதன் பின் 



அறைக்குத்திரும்பும் இவர் இரவில்  



11 மணிக்குத் துவக்கிடும் சீட்டு 



விளையாட்டு (ரம்மி-32௦) என்பது 



மறுநாள் பொழுது விடிந்து அதன் 



பின்பும் நீடித்து பகல்12 மணி வரை 



சீட்டு விளையாட்டுத்தான். அப்படி 



விளையாடும்போது (ஒரு குழுவில் 6 



நபர் முதல் 9 பேர்கள் வரையிலும் 



இருப்பார்கள்) அப்படி விளையாடி 



வரும்போதுஒருகை கலைத்துப்



போட்டு அடுத்த கை அதனை எடுத்து 



விளையாடும் போது உடனே அடித்து 



விடுகிறார்  என்று  வைத்துக் 



கொள்ளுங்கள். இந்த அடியை சீட்டு 



விளையாட்டு நிபுணர்கள் என்ன 



சொல்வார்கள் என்றால் GATE TICK 



என்றே அழைப்பார். அப்படி ஒருவர் 



அடித்திடும் போது எஞ்சிய எட்டுப் 



பெரும் சுத்தமக full தான். அதாவது96 



பாயிண்டுகள் தந்ததாகக் 



கருதப்படும். அந்த நேரத்தில் 



எதிர்த்து விளையாடும் ஒருவர் 



போக ஏனைய வீரர்கள்  மன 


ரீதியாகச் சோர்ந்துவிடுவார். 



அப்போது தம்பி !!நீ !! கலங்கிடாமல் 



இரு !! இப்போது உனக்குத் தேவை --



உன்னிடம்இருந்திடவேண்டியதுஇது:



அதுதான் தம்பி !!                                     



         "  எதையும் தாங்கும் இதயம்  "  !!                 


இந்த மன நிலை இருக்கும் 



வரையில் நீ எந்தவிதமான 



இக்கட்டையும் சந்திக்கும் ஆற்றல், 



வல்லமை உனக்கு உண்டு.எனவே நீ



தொடர்ந்து முயற்சித்தால் எளிதில் 



எப்படியும் வெற்றி பெற முடியும். 



அதனால்தான் தம்பி நான் 



உங்களக்கு இந்தத் தாரக 



மந்திரத்தை உபதேசம் 



செய்கின்றேன் என்றாராம்பேரறிஞர் 



அண்ணா.அதன்படிநாம்வாழ்வோமா.                                        


நன்றி !! வணக்கம் !!                                     



அன்புடன் மதுரை T.R. பாலு.

Monday 10 March 2014

மனித மனம் !! அதன் உள்ளேதான் எத்தனை வகையான குணங்கள் அடங்கி உள்ளது ? மறைந்த பொதுவுடமைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பார்வையிலே !!






பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் 



                          ரஹீம் !! 



அஸ்ஸலாமு அலேக்கும் !!                   



அளவற்ற அருளாளனும் நிகரற்ற 


கொடையாளனுமாகிய 


அல்லாஹ்வின் கருணையால் 


இந்தக்கட்டுரை இங்கே உங்கள் 


அனைவருக்கும் எழுதிடப் 


படுகின்றது அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !!                                             



குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் 


என்றொரு கருத்து இங்கு வெகு 


காலமாக உலவிக்கொண்டுதான் 


உள்ளது. ஆனால் அவனிடம் இந்த 


குரங்கு குணம் மட்டும் அல்ல, 


இன்னும் எத்தனைவகையான 


குணங்கள் இந்த மனிதனுள் அடங்கி 


இருக்கிறது என்பதனை மறைந்த 


பொதுவுடமைக் கவிஞர் 


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 


தனது இந்த பாடலில் வெகு அழகாக 


சித்தரித்துள்ளார். இதோ அந்த 


பாடல். இடம் பெற்ற படம் புரட்சி 


நடிகர் என்று முத்தமிழ் அறிஞர் 


தலைவர் கலைஞர் அவர்களால் 


பட்டம் சூட்டப்பட்ட மறைந்த M.G.R. 


நடித்து அந்தக்காலம் வெளிவந்த 


" சக்கரவர்த்தித் திருமகள் "  என்ற 


திரைப்படத்தில் இடம் பெற்ற அந்தப் 


பாடல் இங்கே கீழே தரப்பட்டு 


உள்ளது. அதனை நீங்கள் படித்து 


மகிழ்ந்திடலாம் அன்பர்களே !!         




உறங்கையிலே பானைகளை 


உருட்டுவது பூனைக் குணம் !!       


காண்பதற்கே உருப்படியாய் 


இருப்பதெல்லாம் கெடுப்பதுவே 


குரங்கு குணம் !!                                         


ஆற்றில் இறங்குவோரைக் கொன்று 


இறையாக்கல் முதலைக்குணம்.              


                            ஆனால்                                 


இத்தனையும் மனிதரிடம் 


மொத்தமாய் வாழுதடா !!                     



மனிதன் பொறக்கும்போது பொறந்த 


குணம் போகப் போக மாறுது !!             


எல்லாம் இருக்கும்போது பிரிந்த 


குணம் இறக்கும்போது சேருது !!


                                 (மனிதன் பொறக்கும்)


பட்டப்பகல் திருடர்களை 


பட்டாடைகள் மறைக்குது !! -ஒரு 


பஞ்சையைத்தான்  எல்லாம் சேர்ந்து 


திருடன் என்றே உதைக்குது !!


                                (மனிதன் பொறக்கும்) 


காலநிலைய மறந்து சிலது 


கம்பையும் கொம்பையும் நீட்டுது !!


புலியின் கடுங்கோபம் 


தெரிஞ்சிருந்தும்  வாலைப் புடிச்சு 


ஆட்டுது !!


வாழ்வின் கணக்குப் புரியாம ஒன்னு 


காசைத்தேடிப் பூட்டுது !!


ஆனா காதோரம் நரைச்ச முடி கதை 


முடிவைக்காட்டுது !!                           


 

                             (மனிதன் பொறக்கும்)



புரளிகட்டிபொருளைகட்டும்சந்தை!! 


பச்சைப் புளுகை விற்று  சலுகை 


பெற்ற மந்தை !!


இதில் போலிகளும் காலிகளும் 


பொம்மலாட்டம் ஆடுகின்ற 


விந்தை!! 


சொன்னால் நிந்தை !!



உப்புக்கல்லை வைரம் என்று 


சொன்னால் 


நம்பி ஒப்புக்கொள்ளும் மூடருக்கு 


முன்னால் !!


நாம் உளறி என்ன ?கதறி என்ன ?


ஒன்றுமே நடக்க வில்லை !!


தோழா !!  ரொம்ப நாளா !!                                             


அன்பு உள்ளங்களே !! எப்படி நமது 


பொதுஉடமைக் கவிஞர் அன்பர் 


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 


இந்த சமூகத்தை, அதில் ஒளிந்து, 


மறைந்து,கிடக்கின்றஉண்மைகளை 


வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளார் 


இந்தப் பாடலில் என்று பார்த்தீர்களா 


நேயர்களே !!                                           



மீண்டும் நாம் அடுத்த "எண்ணத்தில் 


தோன்றியவை " பதிவில் 


அனைவரும் சந்திப்போம்.                 


நன்றி !! வணக்கம் !!                                 



அன்புடன் மதுரை T.R. பாலு.

Saturday 8 March 2014

பிறந்தவுடன் தாயைக் கொன்றுவிட்டு ஜெனிக்கும் இனங்கள் எவை ? எவை ?






துணிந்துநில் !!                                     தொடர்ந்துசெல் !!

 

                       தோல்வி கிடையாது தம்பி !!



உள்ளதைச் சொல் !!                         நல்லதைச் செய் !!  


                        தெய்வம் இருப்பதை நம்பி !!  




       பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர்


  

                                ரஹீம் !!                                                                                         


அஸ்ஸலாமு அலேக்கும் !!



அளவற்ற அருளாளனும் நிகரற்ற 


கொடையாளனுமாகிய


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் 


திருப்பெயரை வணங்கி,தொழுது, 


மனத்தில் பூஜித்து, நான் இந்தக் 


கட்டுரையை  எழுதுகின்றேன்.





உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்ற எனது 


அன்புத்தமிழ்நெஞ்சங்களே/உடன்பிறப்புகளே !!



உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த 


வாழ்த்துக்கள்.அந்த வாழ்த்துக்களோடு 


இணைந்த இதயம் கனிந்த நல்வணக்கங்கள் !!   


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணை 


மிகுந்த அன்பினால், இந்த கடலால் சூழப்பட்ட 


உலகமதில், படைக்கப்பட்ட அனைத்து ஜீவ


இராசிகளுள், பிறக்கும்போதே தாயை, தன்னை 


சுமந்து பெற்ற அந்த உத்தம குலத் திலகத்தை 


கொன்று இந்த உலகத்தைவிட்டே அனுப்பியபின் 


ஜெனிக்கும் இனங்கள் எவை ? எவை?                         



அன்பர்களே !!                                                                           


இதுதான் இன்றைய கட்டுரையின் தலைப்பு 


ஆகும்.                                                                                           



இந்த விஷயத்தை பற்றி விரிவாகவும் அதே 


சமயம் சற்று விளக்கமாகவும் ஆராய்ந்து தனது 


நூலான " சிலப்பதிகாரம் " என்ற ஐம்பெரும் 


காவியங்களுள் ஒன்றினில் இளங்கோஅடிகளார் 


மிகத் தெளிவாகவே குறிப்பிட்டு இருப்பார். இதை 


மாற்றான் ஒருவன் பெற்ற பெண்ணின்மேல்/


கன்னியின்மீது (ஏற்கனவே திருமணமாகி 


மனைவியோடு வாழ்ந்துவரும் ஒரு 


ஆடவனுக்கு) ஆசை/பிரேமம்/காதல் வரும்நேரம் 


எப்போது என்ற அந்த யதார்த்தமான 


சிந்தனையுடன் ஒப்பிட்டு இளங்கோ அடிகளார் 


மிக அழகாக சித்தரித்து எழுதி இருக்கும் அந்த 


வரலாற்றுச் சிறப்புமிக்க பாடலை முதலில் நாம் 


பார்ப்போமா அன்புத் தமிழ் நெஞ்சகளே !!             


 பாடல் இதோ உங்கள் பார்வைக்கு :-                           




நண்டு சிப்பி வேல்கதலி  !!                                                   


நாசமுறுங்கால் --  தான்                                                     


கொண்ட கருவே அழிக்கும்                                               


கொள்கையது போல்  !!                                                         


பண்டு தனம் கல்வி மனம்                                                 


பாழடையும் நாள் மனம்                                                       


பாவையர்மேல் நாடுமென   !!                                  


படித்து உணர்ந்தும்  நான்                                                     


கொண்டவளைத்தான் துறந்து                                         


மாதவி சதம் என நினைத்தேனே !!     



என அந்தப்பாடலில்தான் எவ்வளவு  உலகின் 



யதார்த்தமான விஷயங்களை உள்ளடக்கி 



அங்கே இளங்கோ அடிகளார் தம் கவித்துவத்தை 



வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை 



நாம் பார்த்து படிக்கின்றபொழுது நான் எல்லாம் 



அன்பர்களே !!சத்தியமாக உணர்ச்சி பொங்கிட 



வியர்வைக்கால்கள் விரைத்து நிற்க எனது 



(மயிர்கூச்செறிய) ஆழ்மனமதில் ஒரு உத்வேகம் 



பிறக்கின்றது என்று சொன்னால் அது ஒன்றும் 



மிகையான சொல் அல்ல அன்புத் தமிழ் 



நெஞ்சங்களே/உடன்பிறப்புகளே !!                               




பாடல் விளக்கம் இதோ உங்கள் பார்வைக்கு :- 



எப்படி, நண்டு அதன் குஞ்சு அது பிறக்கும் 


பொழுதில் தனது தாயின் வயிற்றைக் கிழித்து 


வெளிவருவதன் மூலமாக தாயைக் 


கொல்கிறதோ, அதுபோல ,                                               



எப்படி கடலில் வாழ்ந்திடும் பாசி இனங்களுள் 


ஒன்றான சிப்பி அது தனது வயிற்றினுள் சுமந்து 


கொண்டு உள்ள விலைமதிப்பற்ற 


போக்கிஷமாம் " முத்து " தாயின் 


வயிற்றிலிருந்து வெளிவரும்போது சிப்பியை 


அறுத்து எடுத்ததனால் தாயை மரணக்குழியில் 


தள்ளிடுகிறதோ அதுபோல,                                             



எப்படி, வாழை மரம் தனது கன்றினை அது 


ஈனுகின்ற பொழுது எப்படி தாய் மரத்தை 


அடியோடு வெட்டிவீழ்த்தி பின்னர் எடுத்து 


விடுகிறார்களோ, அதன் மூலம் தாயின் 


சமாதிக்கு கட்டிடம் கட்டுகிறதோ  அதுபோல                                                  


இந்த ஜீவ ராசிகள் செயல் படுகின்றது.


அது போலவே நான் (கோவலன்) எனது 


புகழ்,பெருமை, நான் சம்பாதித்த செல்வம், நான் 


கற்ற கல்வி,எனது அருமையான அமைதி 


தழுவிடம் நல்ல மனம் பாழடையும் நாள் எனக்கு 


எப்போது வருகிறது என்று சொன்னால் நான் 


எப்போது பிரபலங்களின் மேல் ஆசைப்பட்டு, 


காமமுற்று, அவளை அடைந்திடவேண்டும் 


என்கின்ற வெறியுடன் எவன் ஒருவன் 


செயல்படுகிறானோ, அதேபோலவே, நான், 


கொண்டவள், எனது அன்புமனைவி,இல்லத்தரசி 


கண்ணகியைத் துறந்து ஆடல் அரசி மாதவியை 


எனது உண்மையான் சொந்தம் என என்று 


நினைத்தேனோ அக்கணமே இந்தத் 


திருவிளையாடல் எண்ணங்கள் கோவலனின் 


உள்ளத்தில் இருந்து பீறிட்டுக் கிளம்புகிறது!!           


என்று அந்தப் பாடலில் வெகு அழகுற இளங்கோ 


அடிகளார் தனது கருத்துக்களைப் 


பதித்துஇருப்பது  இந்த உலகம் உள்ளவரையில் 


நடக்க இருக்கும்  இதுதான் உண்மை 


உண்மையிலும் உண்மை.                       



அன்பர்களே !!  ஒரு மிகவும் அருமையான 


நல்லதொரு கருத்துச் செறிவுள்ள ஒரு காவியப் 


பாடலை அதன் விளக்கத்துடன் இன்று உங்கள் 


அனைவருக்கும் வழங்கிய மனத்திருப்தியுடன் 


"எண்ணச்சிறகுகள் " பதிவு செய்த நல்ல 


மனதுடன் உங்கள் அனைவருக்கும் அன்பு 


வணக்கங்களை பதிவு செய்து நன்றி பாராட்டி 


விடைபெறுகின்றேன்.                                                         



நன்றி !! வணக்கம் !!                                                               



அன்புடன் மதுரை T.R. பாலு. 

Wednesday 5 March 2014

சிதம்பரம் கோவிலை தீட்சிதர்களுக்கு மீண்டும் கிடைத்திட ஆவன அனைத்தையும் செய்தது தமிழக அரசு !!ஒரு வெள்ளை அறிக்கை கட்டுரை !!







அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!




உங்கள் அனைவருக்கும் வணக்கம்.


சிதம்பரம் ஸ்ரீ நடராஜப்பெருமான்


திருக்கோவிலை மீண்டும் அந்த


தீட்ஷிதட்களின் கையில் கிடைக்கச்


செய்திட எல்லா உதவிகளையும் செய்து


பெருமை படைத்தது நமது தமிழக அரசு. 



என்ன கரணம் ?. 



எல்லாம்" அவாள் " செய்த கைங்கரியம்.



ஆம் அன்பர்களே !! இன்றையதினம் இந்த 



நாட்டினில் உள்ள ஏனைய சாதி ஜனங்களுக்கும் 



இந்த " அவாளுக்கும் " உள்ள ஒரே வேறுபாடு 



என்ன என்றால், எந்த சூழலிலும் இவர்கள் இந்த 



சாதிப்பிரிவினர்கள் மட்டும் தங்களுக்குள் 



எந்தவிதமான சமரசத்திற்கும் இடம்தராமல் 



நினைத்ததை அடைந்தே தீரும் ஒரு வக்கிரபுத்தி 



படைத்த ஒரே இனம்தான் இந்த " அவாள் " இனம் 



என்பது ஊர் அறிந்திட்ட உண்மை மட்டுமல்ல 



அன்பர்களே !! இந்த அகில உலகமே தெரிந்த ஒரு 



விஷயம்தான். அந்த அடிப்படையில் நம் தமிழக 



அரசின் தலைமைப் பீடம் அந்த " அவாள் " என்ற 



வகுப்பின் ஒரு பிரிவினர்தான் என்பது அந்த 



ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாளே அறிந்த 



ஒன்று. அந்த அடிப்படையில்தான் நம் தமிழக 



அரசுக்குச் சாதகமாக, இந்து 



அறநிலையத்துறைக்கு சாதகமாக, சென்னை 



உயர்நீதிமன்றம் வழங்கிய நல்லதொரு 



தீர்ப்பினை எதிர்த்து சிதம்பரம் தீட்சிதர்கள் 



இந்திய உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு 



செய்து வழக்காடிட முடிவெடுத்து 



செயல்படும்போது நல்ல திறமைமிக்க, மூத்த, 



அனுபவம்மிக்க வழக்கறிஙர்களை வாதாடிட



அணுகாமல் ஏதோ தேங்காய்மூடி வக்கீல்களை 



வைத்து மேல்முறையீடு வழக்கை சந்தித்ததன் 



எதிர்கொண்டதன் விளைவு ? உச்ச நீதிமன்றம் 



தீட்சிதர்களுக்கு சாதகமாக இங்கே தீர்ப்பு 



வழங்கிடப் பட்டுள்ளது என்பதே உண்மை ஆகும். 



தமிழ் நாட்டினில் உள்ள தாழ்த்தப்பட்ட, 



பிற்படுத்தப்பட்ட இன மக்களை மீண்டும் அதல 



பாதாளத்தின் குழியில் தள்ளுவது ஒன்றே தனது 



இலட்சியமாக எண்ணி செயல்படும் தமிழக 



அரசே !! இங்கு நீதி இருக்கின்றதா ? 



அந்தக்காலத்தில் கலைஞர் திரு மு.கருணாநிதி 



அவர்கள் கதை,திரைக்கதை,வசனம் எழுதி 



வெளிவந்த " பூம்புகார் " திரைக்காவியத்தில் 



மறைந்த கொடுமுடி B. சுந்தராம்பாள் ஒரு பாடல் 



ஒன்று பாடி இருப்பார். அந்தப் பாடல் என்ன 



என்றால், அது இதுதான் :-                                                   



 நீதியே நீயும் இருக்கின்றாயா ? இல்லை                   



நீயும்அந்தக்கொலைக்களத்தில்உயிர்விட்டாயா? 



என்று ஒரு பாடல் பாடி இருப்பார். அந்தப் பாடல் 



இந்தத் தமிழகத்தில் மீண்டும் உயிர் பெற்று 



உள்ளது. இது தற்காலிகமானதுதான். இறுதி 



வெற்றி என்றுமே உண்மைக்கும் நேர்மைக்கும் 



நீதிக்கும் நியாயத்திற்கும் சத்தியத்திற்கும்தான் 



அதைத்தான் நாம் இன்வரும் எதிர்காலத்தில் 



பார்த்திட இருக்கின்றோம் என்று சொல்லி 



கட்டுரையை இந்த அளவினில் நிறைவு 



செய்கிறேன் என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! 




நன்றி !! வணக்கம் !!                                                               



 அன்புடன் மதுரை T.R. பாலு.


Sunday 2 March 2014

சென்னை என்று ஏன் பெயர்வந்தது ? காரணம் தெரியுமா உங்களுக்கு ?










        பிஸ்மில்லாஹ் ஹிர்ரெஹ்மானிர் ரஹீம் !!   



அஸ்ஸலாமு அலேக்கும் !!                                                 



அளவற்ற அருளாளனும் நிகரற்ற 



கொடையாளனுமாகிய எல்லாம் வல்ல 



இறைவன் அல்லாஹ்வின் திருப்பெயரை 



உச்சரித்து அவனை மனதுக்குள் வணங்கி, 



அதன்பின் தொழுது, "பிஸ்மில்லாஹ் " என்று 



சொல்லி, இந்தக் கட்டுரையை நான் எழுதிடத் 



துவங்குகின்றேன். இந்தக் கட்டுரை முழுவதும் 



மிகவின்  சுவையாகவும் இனிமையாகவும் 



உங்கள் அனைவருக்கும் தருவேன் என்று 



எண்ணுகின்றேன். இன்ஷா அல்லாஹ்.                     



அன்பர்களே !!                                                                         



முன்பு ஒரு காலத்திலே இந்த சென்னை என்று 



பிற்காலத்தில் பெயர் மாற்றம் செய்திடப்பட்ட 



நகரமானது முன்பு மதராஸ் பட்டணம் என்றேநம் 



அனைவராலும் அழைக்கப்பட்டு வந்திருந்தது 



அன்பர்களே. அப்போது திருப்பதி நம் வசம் 



இருந்தது. இந்த மதராஸ் ஆந்திராவின் வசம் 



இருந்தது. அது போலவே கன்னியாகுமரி, 



நாகர்கோவில் போன்ற அனைத்து பகுதிகளும் 



மலைமாநிலமான கேரளாவின் வசம் இருந்தது. 



அதன் பிறகு மொழிவாரி மாநிலம் 



பிரிக்கப்படுகின்ற பொழுது திருப்பதி 



ஆந்திராவிற்கும் அதற்குப் பதிலாக மதராஸ் 



நமக்கும் இதே போல் கன்னியாகுமரி, 



நாகர்கோவில் நமக்கும், நம்வசம் இருந்த 



மூனார், தேவிகுளம் பீர்மேடு, குமுளி போன்ற 



நகரங்கள் கேரளாவிற்கும் தாரைவார்க்கப் 



பட்டது. எப்படி கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை 



வார்க்கப்பட்டதோ அதுபோல. தமிழன் என்று 




ஒரு இனம் உண்டு. தனியே அதற்கு ஒரு குணம் 



உண்டு என்று சொல்வார்கள். அது என்ன குணம் 



என்று கேட்டால் அது தான் இளிச்சவாய்த்தனம் 



என்று சொன்னால் அதுவே மிகவும் பொருத்தம் 



நிறைந்த ஒரு நல்ல தமிழ்ச் சொல்லாகும்.   



 அப்படி மதராஸ் என்ற பெயருடன் அந்த நகரம் 



இருந்து வருகையில் அந்த நகரசபையின் 



தலைவராக திரு சென்னப்ப முதலியார் என்று 



ஒரு தர்மிஷ்டன் இருந்தார். மிகவும் நல்ல 



மனிதர். கணக்கில் அடங்காத சொத்துக்கள் 



உள்ளவர். அதுபோலவே இல்லை என்று 



வருவோர் அனைவருக்கும் இல்லை என்று 



சொல்லிடாமல் அவரவர் தேவை அறிந்து 



மனமுவந்து தர்மம் செய்து வாழ்ந்து வந்தார். 



தனது சொத்துக்களில் பெரும்பகுதியை இவர் 



மதராஸ் நகரசபைக்கு தானமாக எழுதித் தந்தார். 



இவரது தார்மீக,தர்ம குணத்தை அறிந்த அந்த 



நகரசபை உறுப்பினர்கள் அனைவரும் ஒரு 



தீர்மானத்தை அந்த நகரசபையின் பொதுக்குழுக் 



கூட்டத்தில் கொண்டு வந்தனர். தீர்மானம் என்ன 



என்றால்  இனிமுதற்கொண்டு இந்த நகரம் 



சென்னை என்று அழைக்கப்படவேண்டும் என்று 



இதை அப்போதைய ஆங்கிலேய அரசாங்கமும் 



ஏற்றுக்கொண்டது. அன்று முதல் அது சென்னை 



என்றே பெயர் மாற்றம் செய்திடப்பட்டு அதன் 



நாடு  சுதந்திரம் பெற்ற பின் (இப்போது 



நடப்பதுபோலவே)நீ எப்படி மாற்றுவது பெயரை ? 



அதை நான் அல்லவோ செய்திடவேண்டும்என்ற 



அடிப்படையில் சென்னை என்பது மீண்டும் 



மதராஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதன் 



பின் மாநிலத்திற்கு மதராஸ் மாநிலம் என்று 



இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் 



செய்திடப்பட்டு இப்போதுதான் கடந்த ஒரு 



அநேகமாக பத்து ஆண்டுகளாக மதராஸ் என்பது 



சென்னை என்று பெயர் மீண்டும் மாற்றம் 



செய்திடப்பட்டது. இந்தத் தகவல் உங்கள் 



அனைவரின் கனிவான கவனத்திற்கு !!                     





நன்றி !! வணக்கம் !!                                                                 





அன்புடன் !! மதுரை TR பாலு.