Tuesday 25 June 2013

பூரண மது விலக்கு கொள்கை இங்கே நடைமுறைக்கு ஒத்துவருமா?





உடல்மண்ணுக்கு!! உயிர் தமிழுக்கு!!


தமிழனாக வாழ்ந்திடுங்கள்!!   


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!


தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும் பொழுது!!  


உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என் 


இனிய தமிழ் மக்களே!!உங்கள் 


அனைவருக்கும் என் இனிய அதி 


காலை வணக்கம்.(நேரம்: 12.11A.M.) 


இன்றைய தினம் நம் தமிழ் நாட்டில் 


பெரும்பாலும் எல்லா அரசியல் கட்சி  


யினராலும் பேசப்படும் பொது 


விஷயம்  இந்த "பூரணமதுவிலக்கு"


என்பது.  ஆனால் இதில் மிகவும் 


நகைப்புக்கு உரிய விஷயம் நம் 


தமிழ்நாட்டு காங்கிரஸ் பேரியக்க 


நிர்வாகிகளும் இந்த போராட்ட 


களத்தில் குதித்துஇருப்பதுதான். 


மற்ற மாநிலக் கட்சிகளான பா.ம.க., 


ம.தி.மு.க., தே.மு.தி.க., இது போன்ற 


இந்தியத் திருநாட்டில் வேறு எங்கும் 


கிளைகள், பிற அமைப்புகள்,எதுவும் 


இல்லாத இவர்கள் போராட்டம் 


நடத்துகிறார்கள் என்றால் அது 


ஏற்றுக் கொள்ளக்கூடிய 


ஒன்றுதான்.ஆனால் ஒட்டுமொத்த 


இந்தியாவில் 75 சதவீத நிலப் 


பரப்பில் மாநிலங்களில் ஆளும் 


பொறுப்பில் இருக்கும் இந்த தேசிய 


கட்சி,அடுத்து இதன் தம்பி பா.ஜ.க. 


அன்பர்களே !! தமிழில் ஒரு 


பழமொழி ஒன்று உண்டு. என்ன 


என்றால் "ஆளோடு ஆளாக 


அழுதாளாம் ஓவாய்ச்சி "என்று. அது 


போல அந்த இரண்டு தேசியக் 


கட்சிகளும் காங்கிரஸ்,பா.ஜ.க., 


இவைகளும் இங்கே பூரண மது 


விலக்கு அமல் படுத்த வேண்டி 


போராடுவதைப் பார்த்து " சிரிப்பு 


தான் வருகுதையா " என்ற பாட 


வேண்டியதுதான். பேரறிஞர் 


அண்ணா சொல்லுவார். தம்பி !! நீ 


அடுத்தவனை நோக்கி உன் 


ஆள்காட்டி விரல் நீட்டி குற்றம் 


சுமத்திடும்போது உன்னை நோக்கி 


உனது ஏனைய மூன்று விரல்களும் 


நீட்டிக்கொண்டு இருக்கின்றன தம்பி. 


உன்னை சரிசெய்து விட்டு,திருத்தி 


விட்டுஅடுத்தவன்மீதுகுற்றம் சுமத்து 


என்று சொல்லுவார். அதற்கேற்ப 


நான் இந்த 2 தேசியக் கட்சிகளையும் 


பார்த்துக் கேட்க விரும்புகிறேன். 


நீங்கள் அரசாளும் மாநிலங்களில் 


உள்ள கள்ளு,சாராய,மற்றும் ஒயின் 


கடைகளை இழுத்துப் பூட்டு போட்டு 


பூட்டியபின் அங்கே பூரண மது 


விலக்கு கொள்கையை 


வெற்றிகரமாக அமல் செய்து 


நடத்திய பிறகு இங்கே வா. முழு 


உத்வேகத்தோடு உனது 


போராட்டங்களை துவக்கு. வெற்றி 


பெறு. வாழ்த்துகிறோம் நாங்கள். 


இந்த போராட்டத்தை உங்கள் 


ஊர்களில் செய்யாமல் இங்கே வந்து 


செய்வேன் என்று சொல்வது எனக்கு 


அவ்வளவு சரியாகப் படவில்லை 


தோழர்களே. ஒரு ஊரில் இதே 


மாதிரி ஒரு மாபெரும் மக்கள் 


சக்தியை திரட்டி பரிபூரண 


மதுவிலக்கு கொள்கையை அமல் 


படுத்து என மாநில அரசாங்கத்தை 


கேட்டு ஊர்வலம்,மாநாடு என அந்த 


கட்சியினர் நடத்தினார்களாம். 


மாநாடு நடக்கும் இடத்தினை சுற்றி 


இருக்கும் 35க்கும் மேலான 


மதுபானக் கடைகளில் 


விற்பனைக்கு காலை எட்டு மணிக்கு 


கனரக வாகனத்தினில் வந்து 


இறங்கிய டாஸ்மாக் நிறுவன 


சரக்குகள் அரை மணி நேரத்தினில் 


விற்றுத் தீர்ந்தனவாம் இது எப்படி 


இருக்கு ?  ஆக நாம இப்ப இந்த 


கட்டுரையின் பாதிப் பகுதிக்கு 


வந்து நிற்கிறோம் என் அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !! தமிழ் இனத் 


தலைவர் கலைஞர் அவர்கள் அந்தக் 


காலத்தில் மிகமிக அதிகமாகவே 


பல யோசனைகள் செய்து சிந்தித்து 


ஆராய்ந்து கள்ளச்சாரய ஆலை 


அதிபர்களது சித்து 


விளையாடல்களினால் எத்தனை 


எத்தனை மனித உயிர்கள் இந்த 


நாட்டினில் பறி போயின எத்தனை 


பேர்கள் தங்களது விழிப் பார்வை 


உணர்வுகளை இழந்து தவித்து 


குருடர்களாக மாறி இருந்தார்கள் 


என்பதை மனதில்வைத்து மேலும் 


தமிழகத்தைச் சுற்றி உள்ள 


அனைத்து மாநிலங்களிலும் 


கள்ளு,சாராய,ஒயின் கடைகளில் 


விற்பனை படு ஜோராக நடப்பதை 


கண்டு அந்தக் காலங்களில் தண்ணி 


அடிப்பதற்காகவே பக்கத்து 


மாநிலங்களான கேரளா,ஆந்திரா, 


கர்நாடகா மற்றும் பாண்டிச்சேரி 


ஆகிய மாநிலங்களுக்கு நம் தமிழ் 


நாட்டில் இருந்து ஒவ்வொரு 


வெள்ளிகிழமைகளிலும் மாலை 


மகிழுந்து எடுத்துக் கொண்டு அங்கு 


சென்று கூட்டம் கூட்டமாக 


தமிழர்கள் சென்று மகிழ்ச்சியாக 


இருப்பதைக் கண்டு வெறும் 


வருமானத்திற்காகவோ அல்லது 


விளம்பரத்திற்காகவோ ஒரு 


தலைமுறை வரை மது என்றால் 


என்னஎன்றுஅறியாமல் இருந்த 


தமிழர்கள் மத்தியில் கனத்த 


இதயத்துடன் இந்த பூரண மது 


விலக்கு கொள்கையை விட்டு 


விலகி வேறு வழி இல்லாமல் 


இங்கே மிகவும் மன வேதனையுடன் 


அதனை நடைமுறைபடுத்தி 


இருந்தார் தலைவர் கலைஞர் 


அவர்கள். ஆனால் இன்று என்ன 


ஆச்சு? மாண்புமிகு இந்நாள் 


முதல்வர் அவர்கள் வருமானத்தை 


குறிபார்த்து மது என்ற அரக்கனின் 


ஒட்டு மொத்த விற்பனை 


குத்தகையை அரசாங்கமே ஏற்றுக் 


கொண்டு அதற்கு "டாஸ்மாக்" என 


பெயர் வைத்து சில ஆயிரம் 


கோடிகளாக இருந்த பாவத்தின் 


வருமானத்தினை பன் மடங்கு 


உயர்த்திய பெருமையும் அருமையும் 


அம்மையார் அவர்களையே சாரும். 


அதில் சந்தேகமே இல்லை. 


இன்றைக்கு இந்தியாவில் மது 


விற்பனை என்பது இல்லாத 


மாநிலமே இல்லை எனலாம் 


(குஜராத் தவிர) அந்தக் காலத்தில் 


வேடிக்கைகாக சொல்வேன் என் 


நண்பர்களிடம். 1967க்கு முன்பு நான் 


சொன்னது. அப்போது நமது 


மாநிலத்திற்கு மதராஸ் என்று 


பெயர். நாமும் குஜராத்தும் தான் 


பூரண மதுவிலக்கு கொள்கைதனை 


மிகவும் மன இறுக்கத்துடன் 


கண்டிப்பாககடைப்பிடித்து வந்தோம் 


பரிபூரண மதுவிலக்கு கொள்கை 


அதன் காரண கர்த்தா யார் என்று 


கேட்டால் மகாத்மா காந்தி. இவர் 


பெயரை ஆங்கிலத்தில் எழுதிப் 


பார்த்தால் MAHAATHMAA   GANDHI    


என்று வரும். அதில் முதல் M என்பது 


நமது மதராஸ் மாநிலமும் அது G 


என்பது குஜராத் மாநிலமும் என்று 


வேடிக்கையாக நான்குறிப்பிட்ட 


காலம் அது. அப்போது என்வயது 13.  


நான் எதற்காக இதை இங்கே 


குறிப்பிடுகிறேன் என்று சொன்னால் 


அந்த அளவுக்கு காந்தியின் பெயரை 


அவரது கட்சியினரே மறந்து 


இருந்தாலும் கூட அதனை மதித்து 


நினைத்து இருந்த இரண்டு 


மாநிலங்கள் ஒன்று மதராஸ் ஆகிய 


நாம். இரண்டாவது குஜராத். சரி 


நேயர்களே இப்போது நாம் கட்டுரை 


அதன் முக்கால் பக்கத்தை நெருங்கி 


விட்டோம். பூரண மதுவிலக்கு 


கொள்கை இங்கே நடைமுறைக்கு 


ஒத்துவருமா?/அது சாத்தியப் படுமா? 


இதுமட்டுமே நம் முன் உள்ளகேள்வி! 


இதற்கு என் சிற்றறிவுக்கு உட்பட்டு 


நான் தரும் பதில்  " நிச்சயமாக, 


உறுதியாக, ஆணித்தரமாக 


சொல்கிறேன்அன்பர்களே"முடியவே 


முடியாது"!!  ஏன் என்றால் முதலில் 


அரசு தரப்பில் பாப்போம். அரசுக்கு 


வரும் நிதி ஆதாரங்களில் 9௦ 


சதவீதம் இந்த மது விற்பனையின் 


மூலம் மட்டுமே வருகிறது. இதனை 


இழக்க எந்த அரசாங்கமும் முன் 


வருமா? அப்படியே முன் வந்தாலும் 


இந்த இழப்படி எப்படி ஈடு கட்ட 


முடியும். அப்படியே ஈடு கட்டுகிறோம்  


என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் 


கொள்வோம் (உறுதியாக முடியவே 


முடியாது)அப்படி என்றால் ஏறத்தாழ 


நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக  


மதுவோடு பழகி அதனைத்  தனது 


தோழனாக நினைத்து வாழ்ந்து 


வரும் மக்களுக்கு என்ன பதில் இந்த 


அரசு சொல்லிட முடியும். 1971 இந்த 


மதுவிலக்கு தளர்த்தப்பட்ட வருடம் 


என நினைக்கிறேன். அன்று 2௦ வயது 


உள்ள ஒருவருக்கு இன்று 62 வயது 


ஆகிறது. அதற்கு முந்திய வயது 


உள்ளவர்கள் அனைவரும் இறந்து 


விட்டார்கள் என்று ஒரு பேச்சுக்கு 


வைத்துக் கொண்டாலும் அந்த 


வயதிற்கு பின்னால் உள்ள மக்கள் 


வயது 59 தொடங்கி கொஞ்சம் 


கொஞ்சமாக குறைய 


ஆரம்பிப்பார்கள் வயதில். மாலை 


நேரம் வந்துவிட்டால் மதுவினை 


மனம் நாடிடும் பழக்கம் உள்ள அந்த 


மக்களுக்கு என்ன செய்திட முடியும்.


திருட்டுத்தனமாக கள்ளச் சாராய 


உற்பத்தியாளர்கள்,விற்பனை 


செய்பவர்கள் என அங்கிங்கு 


எனாதபடி நம் நாட்டின் ஒவ்வொரு 


கிராம ஊராட்சி, பேரூராட்சி, 


நகராட்சி,மாநகராட்சி,சென்னை 


போன்ற பெருநகரங்களில் 


ஒவ்வொரு சந்து பொந்துகளிலும் 


புற்றீசல் போல கள்ளச்சாராயம் 


ஆறாகப் பெருக்கெடுத்து அதனால் 


ஏற்படும் சாவுகளுக்கு,கண் பார்வை 


இழப்புகளுக்கு, இங்கே போராட்டம் 


நடத்திடும் பாட்டாளி மக்கள் 


கட்சி,மறுமலர்ச்சி திராவிட 


முன்னேற்றக் கழகம்,தேசிய 


முற்போக்கு திராவிட கழகம்,தேசிய 


காங்கிரஸ் கட்சி,பாரதீய ஜனதா 


கட்சி ஆகிய கட்சிகள் பொறுப்பு 


ஏற்றுக் கொள்ளத் தயாரா? நான் 


கேட்கிறேன் கேள்வி? போராட்டம் 


நடத்துபவர்களை எல்லாம்அழைத்து  


ஒரு வட்ட மேஜை மாநாடு 


நடத்துவோம். அதில் அவர்களிடம் 


இந்த கேள்விகளை முன் 


வைப்போம். அன்பர்களே உங்களது 


போராட்டம் ஏற்புக்கு உரியது. 


தாய்மார்களின் கண்ணீரைத் 


துடைக்க இந்த நாட்டு 


இளைஞர்களின் நலத்தில் 


முற்றிலும் அக்கறை உள்ள 


உங்களை நாங்கள் இதய பூர்வமாக 


வரவேற்கிறோம்.ஆண்டுக்கு 


ஏறத்தாழ 3௦ ஆயிரம் கோடிகளுக்கு 


மேலாக வருமானம் பெற்றுத் தரும் 


இந்த மதுவை ஒழிக்க நாங்கள் 


தயார். ஆனால் இந்த இழப்பை 


ஈடுகட்டும் வகையில் மக்களுக்கு 


மேலும் வரிச்சுமையை சிறிதும்


அதிகரிக்காமல் வரவினை 


தருவதற்கு என்ன திட்டம் 


உங்களிடம் உள்ளது.அது 


நடைமுறைக்கு சாத்தியம் ஆகுமா?


கள்ளச்சாரயத்தினை உற்பத்தி 


செய்திடும் கயவர்களை காவல் 


துறையின் கண்காணிப்பில் இந்த 


நாட்டில் முற்றிலும் தடுத்து  


அவர்கள் தயாரிக்கும் கள்ளச் 


சாராயத்தினை நாட்டிற்குள் 


வரவிடாமல் ஒழித்திட இயலுமா? 


அதற்கு உங்களிடம் என்ன திட்டம் 


உளது?அதுஇங்கே நடைமுறைக்கு 


சாத்தியம் ஆகுமா? என்று 


கேட்போம். இழப்பீடு தொகையை 


வரியினை கூடாமல் பெற முடியாது 


என்று சொன்னால் ஒவ்வொரு 


ஆண்டும் போராட்டம் நடத்தும் 


கட்சிகள் ஆகிய நீங்களே கூட 


மொத்தமாக அரசுக்கு தந்து 


விடுங்கள் என்று சொல்லிவிட்டு 


திரும்பி பார்த்தால் அங்கே ஒரு 


கட்சிப் பிரதிநிதி கூட 


இருக்கமாட்டார்.அனைவரும் 


துண்டைக் காணோம்.துணியைக் 


காணோம் என 


சென்றிடுவார்கள்.இதில் ஐயம் ஏதும் 


இல்லை அன்பர்களே. எனவே 


இறுதியாக நான் என்ன சொல்லி 


இந்த மிக நீண்ட கட்டுரையை 


முடிக்க இருக்கிறேன் என்று 


சொன்னால் குடிப்பழக்கம் என்பது 


தீயது,குடும்பத்திற்கு கெட்டது 


மட்டுமே செய்திடக் கூடியது. நம் 


உடலுக்கு,குடலுக்கு தீங்கு 


விளைவித்து நாளடைவில் நம்மை 


போதை பழக்கத்திற்கு அடிமை 


ஆக்கிடும் நாம் இந்த கெட்ட 


பழக்கத்தை விட்டு ஒழிக்க 


வேண்டும் என்று ஒவ்வொரு 


மனிதனும் மனமார நினைத்து 


முடிவு செய்கிறானோ அன்று தான் 


நாம் இது பற்றி ஒரு முடிவுக்கு வர 


முடியும். அது இல்லாதவரை இந்த 


மதுவினை நாம் இந்த நாட்டினில் 


இருந்து ஒழித்திட  முடியாது!


முடியாது!!முடியவே முடியாது!!! 


என்று சொல்லி வாய்ப்புக்கு நன்றி 


பாராட்டிவிடைபெறுகிறேன். நன்றி !!


வணக்கம்!! 


அன்புடன், மதுரை T.R. பாலு.



Monday 24 June 2013

பூனையால் புலியை வென்றிட முடியுமா?




உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!


தமிழனாக வாழ்ந்திடுங்கள்  !!                      


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!! 


தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும் பொழுது !!     



அங்கிங்கெனாதபடி எங்கும் 


பிரகாசமாய் ஆனந்த ஜோதியாய் 


அருள்தரும் ஒளியே !! என்று 


இறைவனை குறித்து எழுதப்பட்ட 


பாடலை நான் நமது தமிழ் 


இனத்திற்கு ஏற்றவாறு மாற்றி கூற 


விழைகிறேன் என் அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !!                                               


அங்கிங்கெனாதபடி உலகெங்கிலும் 


அன்பின் திருஉருவாய் !!


ஆற்றலின் மறு பதிப்பாய் !!


இன்பமதன் நற்சுவையாய் !!


ஈகையின் ஊற்றுக் கண்ணாய் !!


உழைப்பின் சிகரமாய் !!


ஊருக்கு உழைத்திடும் உத்தமனாய் !!


என்றும் நட்புணர்வாய் !! 


ஏற்றமிகு சிந்தனைச் சுடராய் !!


ஐயமில்லா அன்புருவாய் !!


ஒழுக்கத்தின் சிகரமாய் !!


ஓங்கு புகழ் கதிரொளியாய் !!


ஒளவையின் தமிழ் சுவையாய் !! 


அகிலம் முழுவதும் வியாபித்து 


இருக்கின்ற என் உயிரினும் மேலாக 


நான் போற்றி வணங்கி வரும் என் 


அன்புத் தமிழ் உடன்பிறப்புக்களே !! 


முதலில் உங்கள் அனைவரையும் 


வணங்கி சற்றே வித்தியாசமான 


அதே சமயம் பொருள் பொதிந்த ஒரு 


கட்டுரையை இந்த அதிகாலை 


வேளையில் (இப்போது அதிகாலை 


மணி 3.11) எனது சிந்தனைக்குள் குடி 


புகுந்து இதுபோல ஒரு அறிவு சார்ந்த 


கட்டுரை ஒன்றினை மதுரை பாலு 


அவர்களே நீங்கள் உலக தமிழர்கள் 


அனைவரது சிந்தனைக்கும் அள்ளித் 


தெளித்திட வேண்டும்  அதில் உலகத் 


தமிழர்கள் அனைவரும் அந்த 


குற்றாலச் சாரலில் நனைந்து 


இன்புற வேண்டும் என்று எண்ணி 


இந்த நற்காரியத்தில் என்னை ஈடுபட  


வைத்திட்ட அந்த பரம்பொருளுக்கு 


என் மனமார்ந்த நன்றி!! அந்த 


ஆண்டவனுக்கும் ( அன்பர்களே, 


இங்கே ஒரு சிறு குறியீடு! 


ஆண்டவன் என்றால் இறைவன் 


என்று ஒரு பொருள் உண்டு!! அதே 


சமயம் இதற்கு முன் நம்மை அரசாய் 


"ஆண்டவன்" என்றும் மறு பொருள் 


உண்டு.இதில் எது உங்களுக்கு 


தேவையோ அதை நீங்கள் 


பயன்படுத்திக் கொள்ளலாம் )எனது 


இதயம் கனிந்த நன்றி அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !!                                                    


"பூனைதான் புலியை வென்றிடுமா"? 


என்ன மதுரை TR.பாலுவுக்கு மறை 


கழண்டுவிட்டதா? என நீங்கள் 


பயப்படத் தேவை இல்லை. இன்று 


நாட்டில் உள்ள பூனைகள் அது 


போன்ற ஒரு மனப்பான்மையுடன் 


உலா வந்துகொண்டு இருக்கிறது 


என்பதுதான் முழுக்க முழுக்க 


உண்மை என் அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே!!                                                        


அன்பர்களே !! அந்தக் காலத்தில் 


 தமிழகத்தை 13 ஆண்டுகாலம் தனது 


ஆளுகைப் பொறுப்பில் வைத்திருந்த 


புரட்சிநடிகர்எனதலைவர்கலைஞர் 


அவர்களால் பட்டம் வழங்கப்பட்ட 


M.G.R. நடித்து  வெளிவந்த படம்   


"சக்கரவர்த்தித் திருமகள் " அந்த 


படத்தில் மறைந்த கவிச்சக்கர 


வர்த்தி பட்டுகோட்டை கல்யாண 


சுந்தரம் எழுதிய பாடல் ஒன்று என் 


நினைவின் பால் வருகிறது என் 


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!   


மறைந்த கலைமாமணி என்று தமிழ் 


இனத்தலைவர் கலைஞர் 


அவர்களின் திருக்கரத்தினால் 


பட்டம் வழங்கப்பட்ட 


வெண்கலக்குரல் ஓசைக்கு சொந்தக் 


காரர் "சீர்காழி.கோவிந்தராஜன்" 


அந்தப் பாடலைப் பாடி இருப்பார்.            



பாடலைப் பாருங்கள் அன்பர்களே :-  



உறங்கையிலே பானைகளை        


உருட்டுவது பூனைக்குணம்!!     


காண்பதற்கே உருப்படியாய் 


இருப்பதெல்லாம் கெடுப்பதுவே 


குரங்கு குணம்!!                                      


ஆற்றில் இறங்குவோரைக் கொன்று 


இரையாக்குதல் முதலைக்குணம்!! 


*                      ஆனால்!! 


மனிதனிடம் இந்த மூன்றும் 


மொத்தமாய் வாழுதடா!!  


(என்ற  தொகையறாவுடன்  துவங்கி) 


சரணத்தில் )                                                           


மனிதன் பொறக்கும்போது பொறந்த 


குணம்!! போகப் போக மாறுது!! 


வாழ்வில் இருக்கும்போது பிரிந்த 


குணம் இறக்கும்போது சேருது !!          



பட்டப்பகல் திருடர்களை பட்டாடை 


தான் மறைக்குது!! 


ஒரு பஞ்சையைத்தான் எல்லாம் 


சேர்ந்து மாத்தி மாத்தி  உதைக்குது!!  


கால நிலையை மறந்து சிலது 


கம்பையும்   கொம்பையும் நீட்டுது!!. 


புலியின் கடுங்கோபம் புரிஞ்சுக்காம 


வாலைப்புடிச்சு  ஆட்டுது!!                  


வாழ்வின் கணக்கு புரியாம ஒன்னு 


காசைத் தேடிப் பூட்டுது!!                    


ஆனா காதோரம் நறைச்ச முடி கதை                                 


முடிவை காட்டுது!!                                       


உப்புக்கல்லை வைரம் என்று 


சொன்னால் அதை ஒப்புக்கொள்ளும் 


மூடருக்கு முன்னால் நாம உளறி 


என்ன ?கதறி என்ன ? ஒண்ணுமே 


நடக்க வில்லை தோழா !! ரொம்ப 


நாளா ?                                                                 


என்று அந்த வரலாற்றுச் சிறப்பு 


மிக்க பாடல் முடிவடைகிறது அன்புத் 


தமிழ் நெஞ்சங்களே !! இன்றைய 


தினம் இந்த நாட்டின் நடப்புக்கு 


இந்தப் பாடல் மிகப் பொருத்தம் 


உள்ளதாக அறிஞர் பெருமக்கள் 


பேசிக்கொண்டு இருந்ததை என் 


காதார நேற்றைய தினம் நான் 


கேட்டு மகிழ்வுற்றதை இன்றைய 


தினம் உங்கள் அனைவரின் 


முன்பாக தெரிவிப்பதில் நான் பெரும்  


மன மகிழ்ச்சி அடைகிறேன் என் 


அன்புத் தமிழ் உள்ளங்களே !!  


எந்தக்காலத்திலேயும் பூனையால் 


புலியை வெல்லவே முடியாது ?              


*                    அது போலவே                         *  


65 என்ற எண்ணினால் 9௦ என்ற 


எண்ணை இன்றல்ல நாளை அல்ல 


என்றுமே வெல்லவே முடியது. ஏன் 


என்றால் இந்தத் தொண்ணுறு அந்த 


அறுபத்தி ஐந்தினை விட 25 


எண்ணிக்கைகள் அதிகம் உள்ளது 


அல்லவா ? அப்படி என்றால் அந்த 


அளவு இந்தத் தொண்ணுறுக்கு 


ஆற்றல்,வல்லமை,செயல் திறமை, 


சிந்திப்பதில்,செயலாற்றுவதில்,

 

25 பங்குகள் அதிகமாகத்தானே 


இருக்கும். இன்று அந்த 65 என்ற


எண் கோபுரக் கலசத்தின் உச்சியில் 


குடி இருக்கிறது.  ஆண்டவனின் 


அருள்  முடிந்த பின்பு எந்த எண் எந்த 


இடத்தில இருக்குமோ? அந்த 


இறைவனும் அந்த "ஆண்டவன்" 


அவனும் மட்டுமே அறிவான்.  அன்று 


கலைஞர்அவர்களின்கைவண்ணத்


தில்  உருவான "மனோகரா" திரைக் 


காவியத்தில்,நடிகர் திலகம் சிவாஜி 


கணேசன்,கண்ணாம்பாள்,காக்கா 


இராதா கிருஷ்ணன்,   "வசந்த 


சேனையின்"கள்ளக் காதலன் 


ருத்ரசேனன் வேடத்தில் வில்லன் 


நடிகர் S.A. நடராஜன்,அது போல 


முன்னாள் காதலி வேடத்தில் நடித்த 


"வசந்த சேனை"யாகவரும் T.R. ராஜ 


குமாரி இன்னும் ஏராளமான 


நட்சத்திரப் பட்டாளங்களோடு வந்த 


மனோகராவில் ஒரு இடத்தில ஒரு 


வசனம் கலைஞர் அவர்கள் எழுதி 


இருப்பார்கள். கண்ணம்பாளிடம்  


போலிச் சாமியார் கூறுவார் :-          


நளாயினி !! நாடகமே உலகம்  !!           


நாளை நடப்பதை யார் அறிவார் !! 


போய்விட்டான் உன் புதல்வன் 


புண்ணிய லோகத்திற்கு என்று !! 


அதுதான் இப்போது என்நினைவுக்கு 


வருகிறது  என் அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !!                                                   


நாடகமே உலகம் !!                                    


நாளை நடப்பதை யார் அறிவார் ?     


எல்லோரும் இன்புற்று இருக்க 


நினைப்பதுவே அல்லால் வேறு 


ஒன்றும் அறிந்திலேன் பராபரமே !! 


அனைவருக்கும் மீண்டும் நன்றி 


பாராட்டி விடை பெறுகிறேன். 


வணக்கம் !! என் அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே !!


அன்புடன் மதுரை T.R. பாலு.                

பேயையும் குரங்கையும் ஆண்டவன் தேவையின்றி படைத்துவிட்டான் !!





உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!                 


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!   


தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும்பொழுது !!      



உலகம் முழுவதும் அன்புடனும் 


நல்ல தமிழ் பண்புடனும் உண்மை 


நேசத்துடனும் உரிய பாசத்துடனும் 


வாழ்ந்துவரும் என் உயிரினும் 


மேலான அன்புத் தமிழ் உடன் 


பிறப்புக்களே !!                                                      


முதலில் உங்கள் அனைவரையும் 


மதுரை T.R.பாலு வணங்கி 


மகிழ்கிறான். நிற்க !!                                   


இந்த உலகத்தை எல்லாம் வல்ல 


இறைவன் படைக்கின்ற போது 


புல்,பூண்டு இவைகளில் இருந்து 


செடி கொடி மரம் இதுபோன்ற 


லட்சக்கணக்கான ஜீவ இராசிகள் 


நீரில் உயிர் வாழ்வன மற்றும் 


நிலத்தில்வாழ்வன இதுபோன்ற 


இனங்களைப் படைத்த இறைவன் 


இறுதியாகப் படைத்த உயிரினமே 


மானுடம் என்பது. இவை 


அனைத்திலும் ஆண் என்றும் பெண் 


என்றும் படைத்து வேடிக்கை பார்த்து 


மகிழ்ந்தவனே இறைவன் ஆவான். 


ஐம்பெருங்காப்பியங்களுள் 


ஒன்றாம் சீவகசிந்தாமணி என்னும் 


நூலில் என்ன எழுதப் பட்டுள்ளது 


என்றால் :-  


வன்மன வணிகர்தமை படைத்து 


வானரங்கள் என்செய்யப் 


படைத்தாய்...                                                      


பெண் எனும் இனந்தனைப் படைத்து 


பேய்கள் என் செய்யப்படைத்தாய்


எனவும் அந்த நூலில் குறிப்பிடப் 


பட்டுள்ளது. அதாவது வானரம் என 


சொல்லப்படும் அந்த இனம் மிகவும் 


பரிசுத்தமானது.ஆக இந்த குரங்கு 


இனம் இருக்கிறதே அது லேசுப்பட்ட 


இனம் அல்ல. தான் எடுக்கும் 


பொருட்களை அங்கங்கு இடம் 


மாற்றுதல் செய்தல் பலவகையான 


வஞ்சக செயல்கள் செய்திடும் 


ஆற்றலும் வல்லமையும் இதற்கு 


உண்டு.அதனால் வன்மன 


வணிகர்கள் படைத்த பின் இந்த 


குரங்குகளுக்கு என்ன வேலை?இந்த 


குரங்குகள் செய்திடும் அனைத்து 


குண்டுமாத்து குழிமாத்து  


வேலைகளை வணிகர்கள் செய்து 


கொண்டு இருக்கும் போது குரங்கு 


என்னும் இனத்தை தனியாக ஏன் 


படைத்தான் இறைவன் ?              


தயவுசெய்து அன்புத் தாய்குலம் 


எனை அருள்கூர்ந்து மன்னிக்க 


வேணும்.                                                              


பேய்கள் செய்திடும் அனைத்து 


லீலைகளையும் வேலைகளையும் 


இந்தப் பெண் என்னும் ஒருத்தியே 


செய்து முடித்திடும் போது ஏன் 


தேவை இல்லாமல் பேய் என்று 


தனியாக ஒரு இனத்தை படைத்தாய் 


என்பதே அந்த நூலின் ஆசிரியர் 


கேட்டுள்ள கேள்வி. யாருக்காவது 


சரியான விடை தெரிந்தால் நீங்களே 


அவருக்கு தெரிவியுங்கள். நன்றி 


வணக்கம் அன்புடன் மதுரை TR.பாலு