சத்தியத்தின் மறு பெயர்தான் காமராஜர் !!
என் உயிரினும் மேலாக நான் போற்றி வணங்கிடும்
எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! முதற்கண்
உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த
நல் வாழ்த்துக்கள்.
இன்றைய தினம் எனது " எண்ணத்தில்
தோன்றியவை " பக்கத்தில் நான் உங்களது
சிந்தனைக்கு தரும் விருந்து என்னவென்றால்
எளிமை,நேர்மை,உண்மை,வாய்மை,சத்தியம்,
உள்ளத்தில் என்ன உள்ளதோ அதைமட்டும்
பேசுவது, மக்களின் நலன் மட்டுமே தனது
வாழ்கையின் இலட்சியமாக வாழ்ந்து மறைந்திட்ட
ஒரு தியாக தீபத்தின் வாழ்வினில் நடந்தவைகளில்
நான் கேட்டதை,படித்ததை இன்றைய இளைய
சமுதாயத்தினர் அறிந்திடல் வேண்டும் என்ற எனது
தணியாத ஆசை மட்டுமல்ல அவர்களுக்கு எங்கே
இதுபோன்ற நல்லதொரு வாய்ப்பு கிடைக்குமோ
இல்லையோ
எனக்கு தெரியாது. ஆனால் இது உண்மையிலேயே
ஒரு நெடுந்தொடர் கட்டுரையாக அமைய உள்ளது
(நீங்கள் விரும்பினால்). வர இருக்கின்ற அந்த
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவீரன் பெருந்தலைவர்
காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை நீங்கள்
படித்திடும்போது நான் உண்மையிலேயே
சொல்கிறேன் ஒவ்வொருவரது கண்களில்
இருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடப்போவது
என்னவோ நிச்சயம்தான். இந்த கட்டுரையை ஒரு
முன்னோட்டமாக ( TRAILER) நீங்கள் தவறாமல்
எடுத்துக் கொள்ளுங்கள் அன்பர்களே.
பொதுத் தொண்டு ஒன்று மட்டுமே தமது
வாழ்க்கைப் பணி என்று நினைத்து,பேசி,வாழ்ந்து
மறைந்திட்ட ஒரு தியாக தீபத்தின் வரலாறு அது.
நாம் அனைவரும் படித்து கர்ம வீரரை வணங்கி
அவருக்கு நமது இதய அஞ்சலியை காணிக்கை
செய்திடுவோம் அன்பர்களே !!
நன்றி வணக்கம்.
அன்புடன் மதுரை T.R.பாலு.
Wednesday 27 March 2013
இன்பம் எங்கே இருக்கிறது? தெரியுமா உங்களுக்கு !!
இன்பம் எங்கே ! இன்பம் எங்கே !! என்று தேடு !!
உலகமெங்கும் வாழ்ந்து வரும் எனது அன்புத் தமிழ்
நெஞ்சங்களே!!
உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி
கலந்த வாழ்த்துக்கள். முதலில் வணக்கம். அதுதான்
தமிழர் பண்பாடு !
இன்றைய தினம் நான் உங்கள் அனைவரின் சீரிய
சிந்தனைக்கு விருந்தாக படைத்திருக்கும் தலைப்பு
"இன்பம் எங்கே"! என்பதாகும்.
எங்கே சார் சொல்லுங்கள் பார்ப்போம். யார் இதை
சரியாக சொல்கிறார்கள் என்று. மன்னிக்கவும்.
அநேகமாக யாராலும் இதற்கு சரியான விடை தர
இயலாது என்றே நான் கருதுகிறேன்.
ஏன் என்றால் இன்றைய தினம் நாம் வாழ்ந்து
கொண்டு இருக்கும் உலகமும் வாழ்க்கை
நடைமுறைகளும் நம்மை அவ்வளவு விரைவாக
பதில் சொல்லிட இயலாத ஒரு சூழலுக்கு நம்மை
தள்ளிவிட்டது என்பது மட்டுமே உண்மை.
ஆம் அன்பர்களே நீங்களே உங்கள் ஒவ்வொருவரது
மனச்சாட்சியையும் தொட்டு சொல்லுங்கள். நான்
சொல்வது சரியா அல்லது தவறா என்று.
எனக்கு மிக நன்றாகத் தெரியும் உங்களது பதில்
சரி என்று தான் வரும். ஏன் என்றால் இங்கே
நிலைமை அப்படி சார்.
முதலில் நீங்கள் நீங்களாக வாழ்கிறீர்களா?
இல்லையே. காலையில் எழுந்து அவசரம்
அவசரமாக குளித்து,பின் உணவு பறக்க பறக்க
உண்டு வாகனத்தில் ஏறி அலுவலகம் சென்று
அங்கும் ஒரு இயந்திரத்தைப் போலப் பணியாற்றி
பிறகு வீட்டில் இருந்து காலையில் தயாரித்து தந்த
அந்த ஆறிப்போன உணவை கடனே என்று
சாப்பிட்டு அலுவலகத்தில் கூட வேலை பார்க்கும்
பெண்களிடம் தேவை இல்லாமல் அசடு வழிய
சிரித்து அரட்டை அடித்து இதற்குள் மணி ஆறு
ஆகிவிடும். மீண்டும் வாகனத்தில் ஏறி
போக்குவரத்து இடியாப்ப சிக்கலில் மாட்டி வீடு
வந்து சேருவதற்குள் மணி எட்டு ஆகிவிடும். பிறகு
தொல்லைகாட்சி பெட்டியில் கழுத்தை நெறிக்கும்
நம்ப முடியாத நெடுந்தொடர்களை பார்த்து முடிப்ப-
தற்குள் மணி கிட்டத்தட்ட பத்து ஆகிவிடும்.
மனைவியிடம் மனம் விட்டு பேச உங்களுக்கு
நேரம் இருக்கிறதா இல்லை குழந்தைகளிடமாவது
கொஞ்சி மகிழ்ந்திட உங்களால்தான் முடிகிறதா?
சொல்லுங்க சார் பதில். என்ன சார் பேச்சையே
காணோம். உண்மையிலேயே நான் கேட்கிறேன்
இது எல்லாம் ஒரு வாழ்க்கையா? இல்லை சார்.
இல்லவே இல்லை. அப்புறம் எப்படித்தான் சார்
வாழ்கிறது என்று என்னை கேட்கிறீர்களா?
சொல்றேன் பதில் சொல்றேன் உங்களுக்கு.
ஆனா அதுக்கு முன்னாடி இந்த அந்தக் கால
திரைப்பட பாடலை கொஞ்சம் படிங்க சார்.
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு !
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு !!
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு!
இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை!இதை எண்ணிடாமல்
சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை !!
இருக்கும்வரைஇன்பங்களைஅனுபவிக்கும் தன்மை
இல்லை என்றால் வாழ்வினிலே உனக்கு ஏது
இனிமை !! (இன்பம் எங்கே)
கனிரசமாம் மது அருந்திக் களிப்பதல்ல இன்பம்!
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல
இன்பம் !!
இணைஇல்லா மனையாளின் வாய் மொழியே
இன்பம்!!
அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத
இன்பம்!! (இன்பம் எங்கே)
மாடி மனை கோடிப்பணம் வாகனம் வீண் ஜம்பம்!
வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்!!
மழலைமொழி வாய் அமுதம் வழங்கும் பிள்ளைச்
செல்வம் !!உன் மார்மீது உதைப்பதுதான் அளவில்லாத இன்பம்!! (இன்பம் எங்கே)
அந்தக் காலத்தில் வெளிவந்த "மனமுள்ள
மறுதாரம் " என்ற திரைப்படத்தில் முனைவர்
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது வெண்கலக்
குரலில் பாடப்பட்ட இனிமையும் உண்மையும்
கலந்த தேனாக இனித்திடும் பாடல் அய்யா அது.
இப்ப அநேகமா நீங்க ஒரு தெளிவான முடிவுக்கு
வந்திருப்பீங்கன்னு நினைக்கிறன். ஏன் சார்
எப்பவும் பணம் பணம் என்று அலைந்து நிம்மதியை
இழந்து தவிக்கிறீர்கள். பிறக்கும் போதே தலையில்
எழுதிட்டான். இவனுக்கு இவ்வளுவுதான் என்று.
அப்புறம் நீங்க குன்னக்குடிக்கு அன்னக்காவடி
எடுத்தாலும் ஒன்னும் நடக்காது சார்.
அதனாலே கவலையை விட்டுவிட்டு இருக்கிறதை
போதும் என்று நினைத்து வாழப் பழகுங்க சார்.
அப்ப தான் வாழ்க்கை இனிக்கும்.
அந்தக் காலத்திலே தொழிலாளி என்ற படத்தில்
ஒரு பாட்டு வரும் சார். அது எந்த பாட்டுன்னா
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருக்குப் போன்ற தன் கைகளை நம்பி ஓங்கி
நிற்பவன் தொழிலாளி ...........என்று வரும்
அவன் வீடு கட்டிட்டான் இவன் வீடு கட்டிட்டான்
அப்படி எல்லாம் நினைக்காதீங்க சார். எவனும்
போறப்போ எதையும் தலையில் கொண்டு போகப்
போறது கிடையாது. அப்ப பிள்ளைகளுக்கு நாம
சொத்து பத்து சேத்துவைக்க வேண்டாமா? நீங்க
கேட்கிறது எனக்கு புரியுது. ஏன் சார் அவங்களை
நீங்களேசோம்பேறியாஆக்குறீங்கஅவங்க அவங்க-
ளுக்கு கை கால் இருக்கு சம்பாதிச்சு கட்டிட்டுப்
போராங்க சார். விடுங்க. வர்ற வருமானத்தில
பொண்டாட்டியை நிம்மதியாய் வைச்சுகிட்டு
கட்டியா சாப்பிட முடியலையா கரைச்சு சாப்பிட்டு
போங்க சார். என்ன நான் சொல்றது.
இந்த உலகத்திலே உண்மையான பணக்காரன்
யார் தெரியுமா சார். நீங்க சொல்வீங்க பில்கேட்ஸ்
என்று அதுதான் சார் இல்ல.
எதை சாப்பிட்டாலும் செரிமானம் ஆகும் வயிற்றை
உடையவனும் படுத்தவுடன் மாத்திரை உதவி ஏதும்
இல்லாமல் தூங்குபவனும் எந்த நோய்நொடியும்
இல்லாதவனும்தான் சார் உண்மையான
பணக்காரன். பெரிய பணக்காரன்னு சொல்றவன்
கிட்ட இருக்கிற பணம் அவனுக்கு இருக்கிற
வியாதியாலே அதை இதை சாப்பிடாதே என்று
சொன்னால் அது பணம் இல்லை சார் அது வெறும்
அச்சடிக்கப்பட்ட காகிதம் தான் சார்.என்ன நான்
சொல்றது சரியா.
நான் சொன்ன எல்லா கருத்துக்களையும் நல்லா
ராத்திரி பூரா யோசனைபண்ணிப்பாருங்கசார்புரியும்
அதுதான் சரின்னு காலையில் எனக்கு நீங்க LIKE
கொடுப்பீங்க. சரி அப்புறம் நான் போயிட்டு வரேன்.
இனிய இரவு வணக்கங்களுடன் நன்றி
பாராட்டி விடைபெறுவது உங்கள் அன்பு
சிந்தனையாளன் மதுரை T.R.பாலு.
உலகமெங்கும் வாழ்ந்து வரும் எனது அன்புத் தமிழ்
நெஞ்சங்களே!!
உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி
கலந்த வாழ்த்துக்கள். முதலில் வணக்கம். அதுதான்
தமிழர் பண்பாடு !
இன்றைய தினம் நான் உங்கள் அனைவரின் சீரிய
சிந்தனைக்கு விருந்தாக படைத்திருக்கும் தலைப்பு
"இன்பம் எங்கே"! என்பதாகும்.
எங்கே சார் சொல்லுங்கள் பார்ப்போம். யார் இதை
சரியாக சொல்கிறார்கள் என்று. மன்னிக்கவும்.
அநேகமாக யாராலும் இதற்கு சரியான விடை தர
இயலாது என்றே நான் கருதுகிறேன்.
ஏன் என்றால் இன்றைய தினம் நாம் வாழ்ந்து
கொண்டு இருக்கும் உலகமும் வாழ்க்கை
நடைமுறைகளும் நம்மை அவ்வளவு விரைவாக
பதில் சொல்லிட இயலாத ஒரு சூழலுக்கு நம்மை
தள்ளிவிட்டது என்பது மட்டுமே உண்மை.
ஆம் அன்பர்களே நீங்களே உங்கள் ஒவ்வொருவரது
மனச்சாட்சியையும் தொட்டு சொல்லுங்கள். நான்
சொல்வது சரியா அல்லது தவறா என்று.
எனக்கு மிக நன்றாகத் தெரியும் உங்களது பதில்
சரி என்று தான் வரும். ஏன் என்றால் இங்கே
நிலைமை அப்படி சார்.
முதலில் நீங்கள் நீங்களாக வாழ்கிறீர்களா?
இல்லையே. காலையில் எழுந்து அவசரம்
அவசரமாக குளித்து,பின் உணவு பறக்க பறக்க
உண்டு வாகனத்தில் ஏறி அலுவலகம் சென்று
அங்கும் ஒரு இயந்திரத்தைப் போலப் பணியாற்றி
பிறகு வீட்டில் இருந்து காலையில் தயாரித்து தந்த
அந்த ஆறிப்போன உணவை கடனே என்று
சாப்பிட்டு அலுவலகத்தில் கூட வேலை பார்க்கும்
பெண்களிடம் தேவை இல்லாமல் அசடு வழிய
சிரித்து அரட்டை அடித்து இதற்குள் மணி ஆறு
ஆகிவிடும். மீண்டும் வாகனத்தில் ஏறி
போக்குவரத்து இடியாப்ப சிக்கலில் மாட்டி வீடு
வந்து சேருவதற்குள் மணி எட்டு ஆகிவிடும். பிறகு
தொல்லைகாட்சி பெட்டியில் கழுத்தை நெறிக்கும்
நம்ப முடியாத நெடுந்தொடர்களை பார்த்து முடிப்ப-
தற்குள் மணி கிட்டத்தட்ட பத்து ஆகிவிடும்.
மனைவியிடம் மனம் விட்டு பேச உங்களுக்கு
நேரம் இருக்கிறதா இல்லை குழந்தைகளிடமாவது
கொஞ்சி மகிழ்ந்திட உங்களால்தான் முடிகிறதா?
சொல்லுங்க சார் பதில். என்ன சார் பேச்சையே
காணோம். உண்மையிலேயே நான் கேட்கிறேன்
இது எல்லாம் ஒரு வாழ்க்கையா? இல்லை சார்.
இல்லவே இல்லை. அப்புறம் எப்படித்தான் சார்
வாழ்கிறது என்று என்னை கேட்கிறீர்களா?
சொல்றேன் பதில் சொல்றேன் உங்களுக்கு.
ஆனா அதுக்கு முன்னாடி இந்த அந்தக் கால
திரைப்பட பாடலை கொஞ்சம் படிங்க சார்.
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு !
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு !!
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு!
இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை!இதை எண்ணிடாமல்
சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை !!
இருக்கும்வரைஇன்பங்களைஅனுபவிக்கும் தன்மை
இல்லை என்றால் வாழ்வினிலே உனக்கு ஏது
இனிமை !! (இன்பம் எங்கே)
கனிரசமாம் மது அருந்திக் களிப்பதல்ல இன்பம்!
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல
இன்பம் !!
இணைஇல்லா மனையாளின் வாய் மொழியே
இன்பம்!!
அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத
இன்பம்!! (இன்பம் எங்கே)
மாடி மனை கோடிப்பணம் வாகனம் வீண் ஜம்பம்!
வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்!!
மழலைமொழி வாய் அமுதம் வழங்கும் பிள்ளைச்
செல்வம் !!உன் மார்மீது உதைப்பதுதான் அளவில்லாத இன்பம்!! (இன்பம் எங்கே)
அந்தக் காலத்தில் வெளிவந்த "மனமுள்ள
மறுதாரம் " என்ற திரைப்படத்தில் முனைவர்
சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது வெண்கலக்
குரலில் பாடப்பட்ட இனிமையும் உண்மையும்
கலந்த தேனாக இனித்திடும் பாடல் அய்யா அது.
இப்ப அநேகமா நீங்க ஒரு தெளிவான முடிவுக்கு
வந்திருப்பீங்கன்னு நினைக்கிறன். ஏன் சார்
எப்பவும் பணம் பணம் என்று அலைந்து நிம்மதியை
இழந்து தவிக்கிறீர்கள். பிறக்கும் போதே தலையில்
எழுதிட்டான். இவனுக்கு இவ்வளுவுதான் என்று.
அப்புறம் நீங்க குன்னக்குடிக்கு அன்னக்காவடி
எடுத்தாலும் ஒன்னும் நடக்காது சார்.
அதனாலே கவலையை விட்டுவிட்டு இருக்கிறதை
போதும் என்று நினைத்து வாழப் பழகுங்க சார்.
அப்ப தான் வாழ்க்கை இனிக்கும்.
அந்தக் காலத்திலே தொழிலாளி என்ற படத்தில்
ஒரு பாட்டு வரும் சார். அது எந்த பாட்டுன்னா
இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருக்குப் போன்ற தன் கைகளை நம்பி ஓங்கி
நிற்பவன் தொழிலாளி ...........என்று வரும்
அவன் வீடு கட்டிட்டான் இவன் வீடு கட்டிட்டான்
அப்படி எல்லாம் நினைக்காதீங்க சார். எவனும்
போறப்போ எதையும் தலையில் கொண்டு போகப்
போறது கிடையாது. அப்ப பிள்ளைகளுக்கு நாம
சொத்து பத்து சேத்துவைக்க வேண்டாமா? நீங்க
கேட்கிறது எனக்கு புரியுது. ஏன் சார் அவங்களை
நீங்களேசோம்பேறியாஆக்குறீங்கஅவங்க அவங்க-
ளுக்கு கை கால் இருக்கு சம்பாதிச்சு கட்டிட்டுப்
போராங்க சார். விடுங்க. வர்ற வருமானத்தில
பொண்டாட்டியை நிம்மதியாய் வைச்சுகிட்டு
கட்டியா சாப்பிட முடியலையா கரைச்சு சாப்பிட்டு
போங்க சார். என்ன நான் சொல்றது.
இந்த உலகத்திலே உண்மையான பணக்காரன்
யார் தெரியுமா சார். நீங்க சொல்வீங்க பில்கேட்ஸ்
என்று அதுதான் சார் இல்ல.
எதை சாப்பிட்டாலும் செரிமானம் ஆகும் வயிற்றை
உடையவனும் படுத்தவுடன் மாத்திரை உதவி ஏதும்
இல்லாமல் தூங்குபவனும் எந்த நோய்நொடியும்
இல்லாதவனும்தான் சார் உண்மையான
பணக்காரன். பெரிய பணக்காரன்னு சொல்றவன்
கிட்ட இருக்கிற பணம் அவனுக்கு இருக்கிற
வியாதியாலே அதை இதை சாப்பிடாதே என்று
சொன்னால் அது பணம் இல்லை சார் அது வெறும்
அச்சடிக்கப்பட்ட காகிதம் தான் சார்.என்ன நான்
சொல்றது சரியா.
நான் சொன்ன எல்லா கருத்துக்களையும் நல்லா
ராத்திரி பூரா யோசனைபண்ணிப்பாருங்கசார்புரியும்
அதுதான் சரின்னு காலையில் எனக்கு நீங்க LIKE
கொடுப்பீங்க. சரி அப்புறம் நான் போயிட்டு வரேன்.
இனிய இரவு வணக்கங்களுடன் நன்றி
பாராட்டி விடைபெறுவது உங்கள் அன்பு
சிந்தனையாளன் மதுரை T.R.பாலு.
Tuesday 26 March 2013
மனித நோய்க்கு காரணம் என்ன ?
மனிதன் நோய்வாய் படுதலுக்கு காரணம் யார் ?
என் உயிரினும் மேலான அன்புத் தமிழ்
நெஞ்சங்களே!
உங்கள் அனைவருக்கும் எனது இனிய
அன்புநிறைந்த வணக்கங்கள்
.
பொதுவாக மனிதகுலம் நோய் தொற்றுக்கு
ஆளாக முக்கிய காரணம் எது ?
வாதம்,கபம்,பித்தம் ஆகிய மூன்றின் பங்களிப்பு
மட்டுமே !! ஆகும்.
இந்த மூன்றும் சம பங்காக இருக்கும்வரை
மனிதன் எந்தநோயிலும் வீழ்ந்திடுவது
இல்லை. ஏன் என்றால் இந்த மூன்று அம்சங்களின்
ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த உருவம் தான்
மனித உடம்பு என்பது.
இந்தக் கருத்தினையே திருவள்ளுவரும் தமது
குறளில் வலியுறுத்திக் கூறுகிறார்.
அதிகாரம் :- மருந்து
குறள் எண் :- 941.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று '
அதாவது இதற்கு பொருள் என்னவென்றால்
மருத்துவ நூல்களில் சொல்லயுள்ளபடி வாதம்,
பித்தம் மற்றும் சிலேத்துவம் என்று சொல்லப்படும்
கபம் (சளி) இந்த மூன்றும் அளவு கூடினாலும்
குறைந்தாலும் மனிதனுக்கு நோய் என்பது
கண்டிப்பாக ஏற்பட்டே ஆகும்.
சரி இந்த மூன்றில் ஏதாவது ஒன்று கூடுவதற்கும்
குறைவதற்கும் என்ன காரணம் என்று ஆராய்ந்து
பார்த்ததில் அந்த கால சித்த வைத்திய முறையில்
மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் கூறிடும்
கண்டுபிடிப்பு யாதெனின் நாம் நமது
உணவு வகைகளில் ஆறு சுவைகளையும் சரிவர
உண்ண மறுப்பதே ஆகுமாம்.
எனவே நாம் நமது உடல்நிலைதனில்
உண்மையான அக்கறையும் ஆர்வமும்
உள்ளவர்கள்என்றால் முதலில் நாம் உண்ணும்
உணவு வகைகளில் ஆறு சுவைகளையும்
ஒருங்கிணைந்து சேர்த்து உண்ண பழகிக்
கொள்ள வேண்டும்.
அவை எது என்றால்:-
உப்பு,புளிப்பு,இனிப்பு,காரம்,கசப்பு,துவர்ப்பு.
முதலியன.
மேற்சொன்னவைகளில் நாம் முதல் நான்கு
வகைகளை (உப்பு,புளிப்பு,இனிப்பு,காரம்) மட்டுமே
சாப்பிட்டுபழகிவிட்டோம். கசப்பையும்
துவர்ப்பையும் தொட்டுக் கூட பார்ப்பதே
இல்லை. நமக்கு வியாதியே அங்குதான் ஆரம்பம்
ஆகின்றது நேயர்களே.
இது உண்மை.இது சத்தியம். இது சித்த
வைத்தியர்கள் நமக்கு தரும் அறிவுரை.
துவர்ப்புக்கு வாழைப்பூ துவரமும்,கசப்புக்கு
பாகற்காய் துவரமும் ஒழுங்காக நாம்
நமது தினசரி உணவு வகைகளில் கஷ்டப்பட்டு
மருந்தாகவாவது நாம் அனைவரும் உட்கொண்டே
ஆகவேண்டும். அப்போதுதான் வியாதி நம்
அருகில் வர யோசிக்கும்.
ஆகவே நேயர்களே நீங்கள் அனைவரும் இனிமுதல்
கொண்டாவது ஆறு சுவையுடன் கூடிய உணவு
வகைகளை சாப்பிட்டு நூறாண்டுகள் நோய்
நொடிகள் ஏதுமின்றி வாழ்ந்திட எல்லாம் வல்ல
இறைவன் நமக்கு அருள் புரிவானாக !!
மிக்க நன்றி!! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
என் உயிரினும் மேலான அன்புத் தமிழ்
நெஞ்சங்களே!
உங்கள் அனைவருக்கும் எனது இனிய
அன்புநிறைந்த வணக்கங்கள்
.
பொதுவாக மனிதகுலம் நோய் தொற்றுக்கு
ஆளாக முக்கிய காரணம் எது ?
வாதம்,கபம்,பித்தம் ஆகிய மூன்றின் பங்களிப்பு
மட்டுமே !! ஆகும்.
இந்த மூன்றும் சம பங்காக இருக்கும்வரை
மனிதன் எந்தநோயிலும் வீழ்ந்திடுவது
இல்லை. ஏன் என்றால் இந்த மூன்று அம்சங்களின்
ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த உருவம் தான்
மனித உடம்பு என்பது.
இந்தக் கருத்தினையே திருவள்ளுவரும் தமது
குறளில் வலியுறுத்திக் கூறுகிறார்.
அதிகாரம் :- மருந்து
குறள் எண் :- 941.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று '
அதாவது இதற்கு பொருள் என்னவென்றால்
மருத்துவ நூல்களில் சொல்லயுள்ளபடி வாதம்,
பித்தம் மற்றும் சிலேத்துவம் என்று சொல்லப்படும்
கபம் (சளி) இந்த மூன்றும் அளவு கூடினாலும்
குறைந்தாலும் மனிதனுக்கு நோய் என்பது
கண்டிப்பாக ஏற்பட்டே ஆகும்.
சரி இந்த மூன்றில் ஏதாவது ஒன்று கூடுவதற்கும்
குறைவதற்கும் என்ன காரணம் என்று ஆராய்ந்து
பார்த்ததில் அந்த கால சித்த வைத்திய முறையில்
மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் கூறிடும்
கண்டுபிடிப்பு யாதெனின் நாம் நமது
உணவு வகைகளில் ஆறு சுவைகளையும் சரிவர
உண்ண மறுப்பதே ஆகுமாம்.
எனவே நாம் நமது உடல்நிலைதனில்
உண்மையான அக்கறையும் ஆர்வமும்
உள்ளவர்கள்என்றால் முதலில் நாம் உண்ணும்
உணவு வகைகளில் ஆறு சுவைகளையும்
ஒருங்கிணைந்து சேர்த்து உண்ண பழகிக்
கொள்ள வேண்டும்.
அவை எது என்றால்:-
உப்பு,புளிப்பு,இனிப்பு,காரம்,கசப்பு,துவர்ப்பு.
முதலியன.
மேற்சொன்னவைகளில் நாம் முதல் நான்கு
வகைகளை (உப்பு,புளிப்பு,இனிப்பு,காரம்) மட்டுமே
சாப்பிட்டுபழகிவிட்டோம். கசப்பையும்
துவர்ப்பையும் தொட்டுக் கூட பார்ப்பதே
இல்லை. நமக்கு வியாதியே அங்குதான் ஆரம்பம்
ஆகின்றது நேயர்களே.
இது உண்மை.இது சத்தியம். இது சித்த
வைத்தியர்கள் நமக்கு தரும் அறிவுரை.
துவர்ப்புக்கு வாழைப்பூ துவரமும்,கசப்புக்கு
பாகற்காய் துவரமும் ஒழுங்காக நாம்
நமது தினசரி உணவு வகைகளில் கஷ்டப்பட்டு
மருந்தாகவாவது நாம் அனைவரும் உட்கொண்டே
ஆகவேண்டும். அப்போதுதான் வியாதி நம்
அருகில் வர யோசிக்கும்.
ஆகவே நேயர்களே நீங்கள் அனைவரும் இனிமுதல்
கொண்டாவது ஆறு சுவையுடன் கூடிய உணவு
வகைகளை சாப்பிட்டு நூறாண்டுகள் நோய்
நொடிகள் ஏதுமின்றி வாழ்ந்திட எல்லாம் வல்ல
இறைவன் நமக்கு அருள் புரிவானாக !!
மிக்க நன்றி!! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
Monday 25 March 2013
புயலுக்குப் பின்னே அமைதி !!
இடைவேளைக்குப் பிறகு !!
அன்பும் அறிவும் ஒருங்கே இணைந்து அமையப்
பெற்ற என் உயிரினும் மேலானதாக நான்
ஒவ்வொரு நாளும் போற்றி வாழ்த்தி வணங்கி
வரும் உலகெங்கிலும் உள்ள என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !!
முதற்கண் உங்கள் அனைவருக்கும் எனது இதயம்
கனிந்த நல வாழ்த்துக்கள்.
ஏறத்தாழ ஒரு வார கால
அளவிற்கும் மேலாக நான் உங்களுக்கு
எந்தவிதமான தமிழ் பங்களிப்பும் தர
இயலாதவனாக ஆகிப்போனதற்கு காரணம்
என்னவென்றால் எனது வலது கண் பிறை நீக்கும்
அறுவை சிகிச்சைதனை நான் மேற்கொண்டதுதான்
இன்னும் பத்து தினங்கள் என்னை மடிக் கணினி
பக்கம் செல்லக் கூடாது என்று சொன்ன
மருத்துவர்கள் ஆணை தனை மீறி நான் உங்களை
சந்திக்கிறேன். இந்த விஷயத்தினை உங்கள்
அனைவரிடமும் சொல்ல.
ஆகவே நான் உங்களை வேண்டிவிரும்பிக்கேட்டுக்
கொள்வது எல்லாம் தயவு செய்து ஒரு பத்து
நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். இது ஓரு
இடைவேளைதான். படம் முடியவில்லை.அது
தொடரும். என் மூச்சும் என் பேச்சும் உள்ளவரை,
தயவுசெய்து அந்த பத்து தினங்கள் மட்டும் என்னை
தனித்து இருக்க அனுமதியுங்கள்.
அதன்பிறகு உங்களோடுதான், நன்றி வணக்கம்.
மதுரை T,R,பாலு,
Monday 18 March 2013
கோவிலில் இருப்பது தெய்வமா? இல்லை சிலையா?
அன்பிற்குரிய என் உயிரினும் மேலான
அன்புத்தமிழ் நெஞ்சங்களே!!
உங்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்தகாலை
வணக்கங்கள் பல !!
இன்றைய தினம் உங்கள் அனைவரயும் எனது முகப்
பக்கமான(FACE BOOK)"எண்ணத்தில்தோன்றியவை"
இடுகைதனில் ஒரு வித்தியாசமான தலைப்பினில்
சந்திக்கிறேன்.
கோவிலில் இருப்பது தெய்வமா? அல்லது வெறும்
சிலையா? இதுவே இன்று நான் உங்கள் அனைவர்
முன்பாக வைத்திடும் விவாத மேடையின் தலைப்பு.
பொறுமையுடன் இதனைப் படித்திட வேண்டுமாய்
உங்கள் அனைவரையும் நான் கேட்டுகொள்கிறேன்.
பொதுவாக இன்றைய தினம் நமது இந்து மதத்தில்
உள்ளவர்களை விடுத்து பிற மதங்களான கிருஸ்து
மற்றும் இஸ்லாமிய மக்களைப் பார்கிறேன்.
கிறிஸ்துவ மதத்தினை சேர்ந்தோர்கள் அனைவரும்
தவறாமல் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில்
நடைபெறும் பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து
கொண்டு ஆண்டவனின் சன்னதியில் கூடுவது
வழக்கம்.
அதே போல இஸ்லாமிய நண்பர்கள்
தினம் ஐந்து வேளை தொழுவது என்பது அவர்களின்
கட்டாயக் கடமையாக இருந்தாலும் எல்லோராலும்
அதனை நிறைவேற்றிட இயலாத சூழ்நிலையில்
வெள்ளிக்கிழமை நடைபெறும் கூட்டுப்ரார்த்தனை
(கொத்துவா தொழுகை) நிகழ்வினில் தவறாமல்
கலந்துகொண்டு ஆண்டவனை வணங்குதல்
அவர்களிடம் நடைபெறுகிறது.
ஆனால் நம் இந்துக்கள் நிலை என்ன சற்று
பார்ப்போமா! ஏதாவது
நெருக்கடியான சூழ்நிலை,தாங்க முடியாத கஷ்டம்
வந்தால் ஒழிய நாம் யாரும் ஆலயம் செல்வது
என்பது கிடையவே கிடையாது.சரி ஒருவேளை
அப்படி போனதனால் கஷ்டம் நீஙகி காசு வந்து
விட்டாலோ நான்தான் கடவுள் என்று நினைத்திடும்
மனம்அனேகமாகநம்மில்பெரும்பான்மையோருக்கு
உண்டு அதை மறுப்பதற்கு இல்லை.
இப்போது விஷயத்திற்கு வருவோம். தெய்வம்
இருக்கிறதா இல்லையா.
பட்டுகோட்டை கவிஞர்
சொன்னார் கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்
கவைக்கு உதவாத வெறும் பேச்சு என்று.
கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத்
தெரிகின்றதா? காற்றில் தவழுகின்றார் அது உன்
கண்ணுக்குத் தெரிகின்றதா என்றார் கவியரசர்.
கவுரவம் திரைப்படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த்
வேடத்தில் நடித்த நடிகர் திலகமோ இன்னும் ஒரு
படி மேலேபோய் கடவுள் பிரேம் போட்டு மாட்டிய
படத்தில் இல்லை நாம செய்ற தொழிலில் இருக்கி-
-ன்றார் என சொன்னார்.
இன்னும் இதுபோல எத்தனையோ உதாரணங்கள்
உள்ளது சொல்லிக்கொண்டே போகலாம். நீங்க
விஷயத்திற்கு வாங்க என நீங்கள் நினைப்பது
எனக்கு தெரிகிறது.
அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம் என்றாள்
தமிழ் மூதாட்டி. மாதா,பிதா,குரு,தெய்வம் என்றனர்
முன்னோர்கள். இதற்கு நான் கேட்ட விளக்கம்
மாதா காட்டியதால் பிதா தெய்வம் மாதா பிதா
இருவரும் சேர்ந்து காட்டியதால் குரு தெய்வம்
இந்தமூவரும்சேர்ந்துகாட்டுவதுமட்டுமே உண்மை
தெய்வம் என்று.
தெய்வம் இருப்பது இங்கே வேறு எங்கே தெளிந்த
நினைவும்திறந்தநெஞ்சும்நிறைந்ததுண்டோ அங்கே
இதுவும் கவியரசரின் பாட்டுத் தான்.
பெற்ற தாய் தந்தையரை தவிக்க விட்டுவிட்டு மகன்
செல்லும் எந்த கோவிலிலும் தெய்வம் இருப்பது
இல்லை அங்கே வெறும் சிலை மட்டுமே இருக்கும்.
நன்மை செய்யும் எண்ணம் இல்லாதவர்கள்
செல்லும் கோவிலிலும் நிலைமை அது மட்டுமே
நம்பிக்கை துரோகம் செய்பவர்கள், அடுத்தவர் மனம்
வேதனைப்படும்படி நடப்பவர்கள்,இலஞ்ச லாவண்-
யத்தில் திளைத்து பணம்பெற்றோர்கள், பொதுப்
பணத்தினை கையாடல் செய்தவர்கள் தமது
உழைப்பினில் வாழாமல் ஊராரை எய்த்து பிழைப்பு
நடத்துவோர்கள், இதுபோல இன்னும் எத்தனை
எத்தனையோ சமூக விரோதிகள் நம்மிடையே
உண்டு.அவர்கள்சென்றுவணங்கிடும் கோவில்க-
-ளில் எல்லாம் தெய்வம் இருப்பது இல்லை. வெறும்
சிலை மட்டுமே உண்டு.
உள்ளதைச் சொல்லி நல்லதை மட்டுமே
செய்பவர்கள், அடுத்தவர் பணத்திற்கு ஆசைப்படாத
நல்ல மனம் படைத்தவர்கள் எல்லோரும் வாழ
வேண்டும் நாமும் வாழவேண்டும் என்று
நினைப்போர்கள் தனது உழைப்பினில் ஊதியம்
பெற்று அதைக் கொண்டு வாழ்ந்திடும் மனிதர்கள்
இதுபோல்எத்தனைஎத்தனையோ நல்ல உள்ளங்கள்
அனைத்தும் சென்று வணங்கிடும் கோவில்களில்
மட்டிலுமே தெய்வங்கள் உண்டு உண்டு என்று
சொல்லி என் காலை வேளைக்கட்டுரைதனை
நிறைவு செய்து நன்றி பாராட்டி முடிக்கிறேன்.
வாழ்வோம் நாம் அனைவரும் வளமுடன்.
நன்றி.வணக்கம்.
அன்புடன் மதுரை T.R.பாலு.
மதுவிலக்கு இங்கே சாத்தியமாகுமா?
மீண்டும்
மதுவிலக்கு -- -- சாத்தியப்படுமா -- -- ஒரு சிந்தனை!
அனைவருக்கும் வணக்கம். இன்றைய தினக் ஒரு
சமூக சிந்தனையின்
அடிப்படையில் உங்கள் பார்வைக்கு தரும் கட்டுரை
மதுவிலக்கு பற்றியது
மீண்டும்தமிழ்நாட்டில்மதுவிலக்குஅமல்படுத்தபட
வேண்டும்என்றுபாட்டாளிமக்கள் கட்சி தொடங்கி
வைத்த போராட்டம் அதைஅடுத்து மறுமலர்ச்சி
தி.மு.க.அதோடு
இணைந்து போராடியதை
தொடர்ந்துதற்போதுகாங்கிரஸ் கட்சியும்
இன்றைய தினம்போராட்டகளத்தில்குதித்துள்ள
காட்சியை
பார்க்கும் போது அழுவதா இல்லை
சிரிப்பதஎன்றுதெரியவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சி
ம.தி.மு.க. இவைகள்
மாநில கட்சிகள்
தமிழகத்தை தவிர வேறு எங்கும் கிளைகள்
இல்லாத ஒரு
கட்சிகள் அதன்
போராட்டத்தை நாம் ஏற்றுகொள்ள இயலும்.
ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு என்ன
அருகதை
உள்ளது இப்படி ஒருபோராட்டம் நடத்த?
காங்கிரஸ் ஆட்சி புரியும் ஏனைய
மாநிலங்களில்
போய் தமிழக காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
நடத்த தயாரா அல்லது
நடத்தத்தான் முடியுமா?
சரி இப்பொது தொடங்கிய பிரச்சினைக்கு நாம்
வருவோம். 1972ஆம் ஆண்டு அப்போதைய
தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால்
மதுவிலக்கு கொள்கை கைவிடப்பட்ட
விஷயம்
இன்றைய இளைஞாகள் அறிய நியாயம்
இல்லை.அபோது மதுவிற்பனை தனி நபர்களுக்கு
ஏலம்மூலமாக கொடுக்கப்பட்டு அதன் மூலமாக
அரசுக்கு கிடைத்த வருமானம்வெறும் 3,200 கோடி
ரூபாய்கள் மட்டுமே.
ஆனால் தற்போது நிலைமையே வேறு. தற்போது
உள்ள தமிழக அரசு மது விற்பனையை அரசே
ஏற்று டாஸ்மாக் மூலமாக நடத்துவதால் வரும்
வருமானம் 26000 கோடி
ரூபாய்களை தாண்டி
எங்கோ சென்று கொண்டிருகிறது. உண்மையை
சொல்லபோனால் அரசாங்கம் நடப்பதே
மது விற்பனை தொகையை வைத்துதான்.
நிலைமை இப்படி இருக்கும் போது எப்படி
சாத்தியம்
மதுவிலக்கு கொள்கையைதமிழகத்தில்
மீண்டும் அமல்செய்வது.எல்லாம் அந்த
ஆண்டவனுக்கே
வெளிச்சம்.
பூணூல் அணிவது எதற்காக ?ஒரு சிந்தனை!!
பூணுல்
யார் போடுவது?
எதற்காக
போடுவது?
அன்புத் தமிழ் நெஞ்சங்களே! அனைவருக்கும்
வணக்கம் !
ஒரு
வித்தியாசனமான தலைப்பில் இன்று மீண்டும் உங்களைச் சந்திப்பதில்பெரும்
மகிழ்ச்சி அடைகிறேன்.
பொதுவாக
இன்று நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு நபர்களுக்கு மேல் தாம்
ஏன்,எதற்காக பூணுல் அணிந்து கொள்கிறோம் என்று தெரிந்து
கொள்ளாமலேயே பூணூல் அணிந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
பூணுல்
என்பது ஒரு ஜாதியின் அடையாள சின்னம் அல்ல.அதுஒருகொள்கையின்
வெளிப்பாடு. அதுவே உண்மை.
அது என்ன
கொள்கை என்பதை அறிந்து கொள்வதற்கு முன் நமக்கு தெரிந்தவிஷயம்
இந்தபூணூலை அந்தணர்கள்மட்டும் தான் அக்காலத்தில் அணிந்திருந்தனர்.
அப்படிப்பட்ட
அந்தணர்கள் எப்படி இருக்க வேண்டும் எனவள்ளுவப்பெருந்தகை
சொல்லி உள்ளார்:-
அதிகாரம் :-
நீத்தார் பெருமை
குறள் எண் :- 3௦
அந்தணர் என்போர் அறவோர் மற்றஎவ்வுயிர்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலார் ..
.. .
. ..
அதாவது எந்த உயிர் இனத்துக்கும் கொடுந்தன்மை செய்யாமல்அறவழிப்படி வாழ்பவரே அந்தணர் என்பது வள்ளுவன்வாக்கு.(இன்று அந்த எண்ணம் கொண்டோர் யாரும் இல்லை அதுவேறு விஷயம்.)
முப்புரி நூலில் பின்னப்பட்டு வலதுகையை வழியே உள்நுழைத்து மார்பின் குறுக்கே அணிவதுதான் பூணுல் எனப்படுவது.
அது மனித உடலை இரண்டு கூறுகளாக பிரிக்கிறது.மேல்பகுதிஎன்பதுமூளை,இதயம்,முகம் சிந்தனை போன்றவைகளை உள்ளடக்கியது.
அடுத்து கீழ் பகுதிஎன்பதில் வயிறு, மற்றும் அதன் அடியில் உள்ள பகுதிமுதலியன அமைந்து உள்ளன.
பூணுலுக்கு மேலேயுள்ள பகுதிகளான சிந்தனை செயல்படஉதவும்மூளை,ஐம்புலன்களில் நான்கு இவைகளைஎல்லாம்மனிதன்நேர்மையான வழியில்/உண்மை வழியில்சென்றிட மட்டுமே செலவுசெய்தானேயானால்அவன்சொர்கத்திற்கு சென்றிட முடியும்.
ஆனால் அதேசமயம்மேலே சொன்ன வழிகளுக்கு மாறாக பூணுலுக்கு கீழே உள்ள பகுதிகளைகெட்டவழிகளில் மனம்போனபோக்கில் சென்று செலவழித்து நடப்பானேயானால்அவன் நரகத்துக்குத்தான் செல்வான் என்பதனை எச்சரிக்கையுடன்உணர்த்தும் ஒரு கருவியே பூணுல் என்பதாகும் என்றே நான் கருதுகிறேன்.
இதுவரை இந்த கருத்தை தெரிந்து கொள்ளாதவர்கள் தெரிந்து கொண்டு உண்மையுடன்செயல்படவேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.நன்றி வணக்கம்
Sunday 17 March 2013
பேரறிஞரின் நினைவு அலைகள் !!
பேரறிஞர்
அண்ணா அவர்களின் வாழ்க்கையில்!!
மறைந்த
திராவிட முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.
அதை நான் நினைத்து பாராத நாள் இல்லை.
ஒருமுறை
சட்ட மன்றத்தில் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக அமர்ந்து இருந்த போது அப்போதைய எதிர்க்கட்சி (தற்போது உள்ளதுபோல எதிரிக் கட்சி அல்ல) தலைவராக இருந்த திரு P.G.கருத்திருமன் அவர்கள் அண்ணாவை பார்த்து
மாண்புமிகு முதல்வர் அவர்களே நான் உங்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன்.உங்களது
நாட்கள் எண்ணப்பட்டு விட்டது எனபதை அவர் ஆங்கிலத்தில் சொன்னார்.
HONOURABLE CHIEF
MINISTER! I AM SORRY!! YOUR DAYS ARE NUMBERED!!
என்று.
அதற்கு அண்ணா அவர்கள் சிரித்துகொண்டே புன்னகை தவழ்ந்த முகத்துடன் பதில் சொன்னார்:-
IS IT SO MY DEAR OPPONENT LEADER
MR.
P.G.KARUTHIRUMAN , PLEASE NOTE
MY STEPS ARE ALWAYS MEASURED!!
இதற்கு
என்ன பொருள் என்றால் அப்படியா அன்புமிகு எதிர்கட்சித் தலைவர் திரு.கருத்திருமன்
அவர்களே.தயவுசெய்து குறித்துகொள்ளுங்கள் எனது
காலடிகள் எப்போதுமே அளந்துதான் எடுத்து வைக்கப்படுகிறது என மிக அழகாகவும் அவை
நாகரீகத்துடனும் கண்ணியத்துடனும் சொன்னார்.
(ஆனால் அப்படிப்பட்ட அரசியல் நாகரீகங்கள் இன்றைய
தினம் எங்கும் காணப்படாததுதான் என்போன்ற அந்தக்கால நபர்களின் வேதனை, மிகுந்த மனஉளைச்சல்.
நன்றி
வணக்கம்..
பழி
ஓரிடம்!! பாவம் ஓரிடம்!!
உலகெங்கணும்
வாழ்ந்து வரும் என்
உயிரினும் மேலான அன்புத் தமிழ்
நெஞ்சங்களுக்கு எனது அன்பு நிறைந்த
வணக்கம்.
மேலே
சொன்ன கருத்து பொதுவாக ஒருவர்
தீங்கு
இழைத்துவிட்டு சென்று விடுவார்.
ஆனால் அந்த தீங்கு வேறு ஒருவர்
தலையில் விழும்.
அந்தநிலையைத்தான்
மேற்சொன்ன பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என
கூறுவார்.
இதற்கு நாம் வேறு எங்கும் உதாரணம் தேடி
செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அது நம்
முகத்திலேயே உள்ளது.நமது
எதிரியை நமக்கு பிடிக்காதவரை பார்த்து
வாய்க்கு வந்தபடி
பேசிவிட்டு அவருக்கு
கோபத்தைஉண்டாகிவிட்டுநாக்குசுகமாகஉள்
சென்றுஅமர்ந்துவிடுகிறது.
ஆனால்பாதிக்கப்படும்
அந்த நபர் விடுகின்ற
அடியில் கொடுக்கின்ற குத்தில் உடைவது
என்னவோ ஒன்றும் அறியாத
பல்தான்.
அதனால் தான் வள்ளுவன் சொன்னது:-
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு.... ..
..
அதாவது
நீ உனது வாழ்கையில் எதை
காப்பாற்றாமல்இருந்தாலும்பரவாயில்லை.
உனக்கு கேடு இல்லை.உனது
நாக்கை
காப்பாற்றாமல் இருந்தால் உனக்கு வாழ்வில்
மிகபெரும் இழுக்கு உன்னை தேடி
வரும்.நீ
உணர்ந்து கொள்.என்று வான் புகழ்
வள்ளுவன் சொன்னதை நாம்
இனியாகிலும்நமதுவாழ்வில்கடைபிடிப்போமா
நேயர்களே.வணக்கம்.
Subscribe to:
Posts (Atom)