பேச்சில் இத்தனை விதமா ?
அனைவருக்கும் வணக்கம். எனக்கு வயது 59. எனக்கு நினைவு தெரிந்து புரிந்து கொள்ள ஒரு பத்து ஆண்டுகள் என்று வைத்துக்கொண்டால் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் மதுரை மாநகரில் முத்தமிழ் வளர்த்த சங்கத்தமிழ் கண்ட மாமதுரை நகரிலே வாழ்ந்துவந்த காரணத்தினால் தமிழை சுத்தமாக பேசும் திறன் என்பது இயற்கையாகவே அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட நான் இங்கு சென்னை வந்து இங்கும் பேசப்படும் மொழி கண்டு நெஞ்சில் உதிரம் வடிய கண்ணீர் வடித்த நாட்கள் பல உண்டு. அந்த மதுரைத்தமிழ் மற்றும்சென்னை தமிழ் இவை இரண்டையும் ஒருங்கே ஒப்பிட்டு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.கண்டு அகம் மகிழ்க!!
மதுரை தமிழ் சென்னை தமிழ்
அன்னை ஆத்தா
அப்பா நயினா
வலது கை சோத்தாங்கை
இடது கை பீச்சாங்கை
உட்கார் குந்து
ஜலதோஷம் ஜல்ப்பு
தெரியவில்லை தெல்லை
இத்துனூண்டு தம்மாத்தூண்டு
குழந்தை கொயேந்தை
காலி ஆகி விட்டது கால்யாபோச்சு
அழுகை ஒப்பாரி
செத்த ஆளு சாவு கிராக்கி
சட்டை சொக்கா
கஷ்டகாலம் கஸ்மாலம்
பார்த்தா பிரமாதமாக பாத்தா பஜாமா
இதனோடு தொனோடு
முகத்தை மூஞ்சியை
சோம்பேறி சோமாறி
கழுதை கயிதே
வீட்டிலே வூட்டாண்டே
அசிங்கம் நாராசம்
அன்பர்களே இன்னும் இதுபோல ஏராளமான தூய்மையான சென்னை தமிழ்
உச்சரிப்புகள் உள்ளன.எங்கே அவற்றை நான் குறிப்பிட ஆரம்பித்தால் நான்
கற்ற சங்க தமிழ் எனக்கு மறந்துபோய் விடுமோ என்ற அச்சத்தில் இந்த
அளவுடன் விடைபெறுகிறேன்.வாழ்க சென்னை தமிழ்.!! வணக்கம். அன்புடன்
மதுரை T.R.பாலு.