Monday 28 October 2013

யானை தன் தலையிலேயே மண்ணைப் போட்டுக்கொண்டது போல !! உண்மை அர்த்தம் என்ன தெரியுமா ? உங்களுக்கு !!








உடல்மண்ணுக்கு !!உயிர்தமிழுக்கு!! 



உலகெங்கிலும் வாழ்ந்துவரும் 



எனது அன்புத் தமிழ் 



உடன்பிறப்புகளே!! அனைவருக்கும் 



வணக்கம்.                                                 



பொதுவாக, நம்மில் யாராவது 



தனக்குத் தானே கெடுதல் செய்திடும் 



ஒரு செயலைச் செய்திடும் போது 



நாம் பயன்படுத்தும் ஒரு 



சொற்றொடர்தான் நான் இங்கே 



கட்டுரையின் தலைப்பாகத் தந்து 



உள்ளேன். அதுதான் :-




யானை தன் தலையிலேயே 



மண்ணைப் போட்டுக்கொண்டது 



போல !!                                                               



ஆனால் அன்பர்களே !! பொதுவாக 



ஒவ்வொரு விலங்குகளுக்கும் 



என்று தனியாக  ஒரு சிறப்புகுணம் 



என்று ஒன்று உண்டு. இதைத்தான் 



காவியக் கவிஞர் வாலி அவர்கள் 



புரட்சி நடிகர் M.G.R.நடித்துச் சிறப்பு 



செய்த வண்ணத்திரைக்காவியமாம் 



" அடிமைப்பெண் " என்ற படத்தில் 



ஒரு பாடல் காட்சி வாயிலாக நமக்கு 



எடுத்து உரைத்திருப்பார். அது என்ன 



பாடல் என்றால் இங்கே பாருங்கள்:- 



உன்னைப் பார்த்து இந்த உலகம் 



சிரிக்கிறது !!                                             



உன் செயலைப் பார்த்து உன்நிழலும் 



வெறுக்கிறது !!( என்ற பாடலில்)   



தூங்கும் உலகை கூவும் சேவல் 



கூவி எழுப்பும் குரலாலே !!                   



ஏவல் செய்து காவல் காக்கும் 



நாய்களும் தங்கள் குணத்தாலே!! 



இரை கிடைத்தாலும் இல்லை 



என்றாலும் உறவை வளர்க்கும் 



காக்கைகளே !!                                         



இனத்தை இனமேபகைப்பதெல்லாம் 



மனிதன் வகுத்த வாழ்க்கையிலே !! 



என்று அந்தப் பாடலில் வரிகள் 



வரும். 




அதுபோலத்தான் யானை 



இருப்பதிலேயே உருவத்தில் மிகப் 



பெரிய அளவில் உள்ள ஒரு 



விலங்கினம். அது ஏன் அப்படி தனது 



தலையிலேயே மண்ணைப் 



போட்டுக்கொள்கிறது, என்று 



சொன்னால், நீங்கள் அடர்ந்த 



காட்டுப் பகுதியில் (திக் 



பாரஸ்ட்)சுற்றிவலம் வந்து 



(ட்ரக்கிங்)பார்த்தீர்கள் என்று 



சொன்னால் உங்களுக்கு புரியும். 



இறைவன் எவ்வளவு முன் 



ஜாக்கிரதையாக அங்கே, அவை 



மிகக் கொடுமையான ஜந்துக்களாக 



இருந்தாலும்கூட, அவைகளின் 



உயிரும்,   அதைவிட 



கொடுமையான மனிதனால் 



வேட்டையாடப்பட்டு அவைகள் 



அழிந்து விடக்கூடாது என்பதிலே 



எவ்வளவு அக்கறையும் ஆர்வமும் 



கொண்டு உள்ளான் என்பது நமக்குத் 



தெரியவரும். எப்படி ? மனிதன் அந்த 



அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே 



நுழைந்திடும் போது,அங்கு அவனது 



கால் பதியவைத்திடும்போது 



அவனை அங்கே வருக,வருக, என 



வரவேற்பது யார் என்று தெரியுமா 



நேயர்களே !! அவர்தான் ஸ்ரீமான் 



அட்டைப் பூச்சி அவர்கள்தான். அவர் 



நம்மீது ஏறுவதும் நமக்குத் 



தெரியாது. நம்மைக் கடித்துப்பின் 



நமது உதிரத்தை உறிஞ்சிக் 



குடிப்பதும் நமக்குத்தெரியாது. அந்த 



அளவுக்கு மனிதனுக்குமேலாக, 



அடுத்தவனின் இரத்தத்தை 



சுவைப்பதில், அவன் (அட்டை) 



மனிதனையும் மிஞ்சி விடுபவன். சரி 



இப்படி அந்த அட்டைப் பூச்சி நமது 



உதிரத்தைக்  குடிப்பதற்கு முன் 



ஒல்லியாக மறைந்த நடிகர் நாகேஷ் 



போல இருக்கும் அதே அட்டைப் 



பூச்சி தனது வயிறார அடுத்தவனின் 



ரத்தத்தைக் குடித்தபின்பு நடிகர் 



குண்டு கல்யாணம் போல/உசிலை 



மணி போலவே உப்பிவிடுவான். 



பிறகு நம்மைவிட்டு உதிர்ந்து 



சென்று விடுவான். ஆனால் நம் 



உடம்பில் அது கடித்த இடத்தில் 



இருந்து இரத்தம் ஒழுகுவது நமக்கே 



தெரியாது.இப்போதுஅந்த ரத்தத்தில் 



உரசிச் செல்லும் தென்றல் காற்று 



அந்த மனித இரத்தவாடயை உள்ளே 



இருக்கும் பல்வேறு வகையானவிஷ 



ஜந்துக்களுக்கும், கொடுமையான 



உயிர் இனங்களுக்கும், ஏய்!! 



உன்னைக் கொல்வதற்கு  மனிதப் 



பிசாசு வந்துகொண்டு இருக்கிறது. 



எனவே நீ எச்சரிக்கையாக இரு 



என்று இறைவன் தருகின்ற சிவப்பு 



விளக்கு அறிவிப்புத்தான் இந்த 



அட்டைப் பூச்சி என்பது. 



சரி !! நேயர்களே !! நாம் இப்போது 



கட்டுரையின் தலைப்பு பகுதிக்குள் 



செல்வோமா?                                             



அடர்ந்த காட்டினில் அதுவும் 



யானைகள் கூட்டம் கூட்டமாக 



வசிக்கும் அந்த இடங்களில் 



பல்வேறு வகையான காட்டு ஈ, 



மற்றும் காட்டுக் கொசு, பல்வேறு 



யானையைக் கடித்துத் துன்புறுத்தும் 



வண்டு இனங்கள், இது போன்ற 



எண்ணற்ற யானைகளை வதம் 



செய்திடும் பூச்சி இனங்கள் அடர்ந்த 



காட்டினில் ஏராளம் உண்டு. இந்த 



அறிவு மிகுந்த யானை அவைகளின் 



தாக்குதல்களில் இருந்து தம்மைக் 



காத்துக் கொள்வதற்கு என்ன 



செய்கிறது என்று கேட்டால், 



நீர்நிலைகள் நிறைந்து இருக்கும் 



இடங்களுக்குச்சென்று நன்கு மூழ்கி 



அரை மணி நேரம் முதல் ஒரு மணி 



நேரம் வரை தனது உடல்சூட்டினைக் 



குறைத்துக்கொள்கிறது முதலில். 



இங்கே நான் ஒரு வேறு ஒரு 



கருத்தைப் பதியம் செய்திட 



விரும்புகிறேன். அந்தக்காலத்தில் 



வாழ்ந்த மனிதர்களிடம் (ஏறத்தாழ 



6௦ முதல் 75 ஆண்டுகளுக்குமுன்பாக 



வாழ்ந்த மனிதர்களிடம், கீழ்க்கண்ட 



நோய்களின் அறிகுறிகள்எப்போதும் 



அவர்களின் வாழ்நாள் முழுவதும் 



நாம் காணவே முடியாத அளவுக்கு 



அவர்கள் மிக மிக ஆரோக்கியமாக 



வாழ்ந்து வந்தார்கள் என்று 



சொன்னால் அதற்கு என்ன காரணம் 



என்று நீங்கள் கருதுகிறீர்கள்? 



சொல்கிறேன் அன்பர்களே !!               



 1)  மூல நோய்.(உள் மூலம், மற்றும்     


வெளி மூலம்.)                                         



 2)  வயிறு சம்பந்தமான                               


எல்லாவிதமான நோய்களும்.       



 3) தேக சூட்டின்/உஷ்ணத்தின்                 



      மிகுதியின் காரணமாக ஏற்படும்     



      எல்லாவிதமான நோய்களும்.       



இந்த விதமான எல்லா நோய்களும் 



அந்தக்கால மனிதர்களுக்கு ஏன் 



ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போனது 



என்று சொன்னால், அதற்கு 



முக்கியமான காரணம் இந்தஆற்றுக் 



குளியல்தான் அன்பர்களே. அந்த 



ஓடும் ஆற்றுநீரினில் மனிதன் நன்கு 



மூழ்கிக் குளித்திடும்போது அவனது 



உடம்பில் உள்ள அவனது மிகக் 



கடுமையான எதிரியான உஷ்ணம் 



அங்கே விடைபெற்றுச் சென்று 



விடுவது மட்டும் அல்ல அன்புத் 



தமிழ் நேயர்களே !! முதலில் 



இவனது கபாலம் குளிர்ச்சி 



பெறுவதினால் இவனுக்கு 



சிந்தனனையில் 



நல்ல தெளிவும் எதையும் சீர்தூக்கிப் 



பார்த்திடும் அறிவும் அங்கே 



அவனுக்கு கிடைக்கிறது. எப்போது ? 



ஓடும் ஆற்றுநீரில் குளிப்பதினால். 



எப்போது கிராமங்கள் எல்லாம் 



நகரங்கள் ஆகி ,நீர்நிலை குளங்கள் 



எல்லாம் அடுக்குமாடிக் 



குடியிருப்புகளாக ஆகி, அரசாங்க 



அலுவலகங்களாக என்றைக்குமாற 



ஆரம்பித்ததோ அன்று பிடித்தது 



மனிதனுக்கு இந்த சனியனாக நான் 



மேலே குறிப்பிட்ட அத்துணை 



வியாதிகளும். குழாயில் வரும் 



நீரைப் பிடித்து வாளியில் சேர்த்து 



அவன் குளிக்க ஆரம்பித்தானோ 



அன்று ஆரம்பித்த அந்த நோய்த் 



தாக்குதல்கள் இன்றுவரை 



அவனைப் பீடித்துக்கொண்டுதான் 



இருக்கிறதே ஒழிய விட்டு விலகிட 



அந்த நோய்களுக்கு மனம் 



வரவில்லை.(யோவ்..T.R.B. 



என்னய்யா வண்டி வேறு திசை 



நோக்கிப் போயிட்டு 



இருக்கு.கட்டுரைக்குள்ளே வா 



நயினா!!) சரி அன்பர்களே.ஆக நான் 



ஏற்கனவே முன்பகுதியில் 



குறிப்பிட்டுள்ள அந்த விஷ 



வண்டுகள், காட்டு ஈக்கள், மற்றும் 



காட்டுக் கொசுக்கள், இவைகளின் 



தாக்குதல்களில் இருந்து தங்களைப் 



பாதுகாத்துக்கொள்வதற்காகவே 



யானை குளித்துவிட்டு கரையேறி 



வந்தவுடன், அங்கே கிடக்கும் 



செம்மண், புழுதி மண் மற்றும் என்ன 



கிடைக்கிறதோ அவைகள் 



அனைத்தையுமே எடுத்துதன் உடம்பு 



முழுவதும் தூற்றிக்கொள்வதன் 



மூலமாக அதன் வெளிப்புறத் 



தோலுக்கு ஒரு கவசமாக ஆக்கிக் 



கொள்வதற்காகத்தனே ஒழிய தனது 



தலையிலே தானே மண்ணைப் 



போட்டுக்கொள்கிறதே அன்றி 



 இந்தப் பாழாய்ப்போன மனிதன் 



நினைப்பது போல அல்ல என்ற 



கருத்தினை இங்கே நான் பதியம் 



செய்து விட்டு, மீண்டும் நாளை 



வேறு ஒரு தலைப்பினில் உங்கள் 



அனைவரையும் சந்திக்கிறேன் 



என்று சொல்லி, உங்களிடம் இருந்து 



விடை பெறுவது உங்கள் அன்புத் 



தமிழ் பேசிடும் அன்பன். மதுரை 



T.R.பாலு. நன்றி!! வணக்கம் !!

நியாயம்தானா நீ சொல்லு !! (சென்னை நகரினுள் புதிதாக இரட்டை இலை படம் வரைந்த சிற்றுந்துகள் ஓடவிட்டதன் பின்னணி என்ன ? ஒரு அரசியல் அலசல் கட்டுரை !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் 



அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கும், 



வந்தாரை வாழ வைக்கும் 



தமிழகத்தில் உள்ள தமிழ் 



அன்பர்களுக்கும் வணக்கம்.                   



 (என்னடா இது, என்னைக்கும் 



இல்லாத திருவிழாவாக 



தமிழகத்தில் உள்ள ... அப்டீன்னு 



போட்ருக்கீங்க)விஷயம் இருக்கு 



தம்பி. சென்னையில் இப்ப புதுசா 



அரசு பொதுமக்கள் வசதிக்கு என்ற 



பெயரில் எதிர்வரும் பாராளுமன்ற 



தேர்தலை மனத்தில் நிலைநிறுத்தி 



கொண்டுவரப்பட்டுள்ள சிற்றுந்து 



பற்றித்தான் சொல்கிறேன். நான் 



ஏற்கனவே எனது பலகட்டுரைகளில் 



அரசாங்கம் தொழில் நடத்துவது 



என்பது தேவை இல்லாத செயல். 



அரசாங்கம் நிர்வாகம் மட்டுமே 



செய்திட வேண்டும். தேவை 



இல்லாமல் தனியார் நடத்தும் 



தொழில்கள் எதிலும் தலையிடுதல் 



என்பது, அதில் பணியாற்றும் 



ஒழுங்கான தொழிலாளர்களை 



சோம்பேறிகளாக, மக்களை 



மதித்திடாத பணியாளர்களாக 



மட்டுமே மாற்றிட உதவும் என்று 



சொன்னால், அதை யார் கேட்பது. 



எல்லாம் மக்களின் தலை எழுத்து. 



ஒரு தொழில் புதியதாக யார் 



துவக்கினாலும் சரி, அந்தத் தொழில் 



ஏற்கனவே நடைமுறையில் உள்ள 



தொழிலில் எந்தவிதமான 



தேக்கத்தையோ  அல்லது 



தாக்கத்தையோ எற்படுத்திவிடக் 



கூடாது. அரசாங்கம் இதை மிக 



முக்கியமாக கருத்தில் கொண்டு 



இருக்க வேண்டும். ஆனால் தவறி 



விட்டது என்றே இங்கே நான் 



குறிப்பிட வேண்டி உள்ளது. ஆம் !! 



அன்பர்களே !! ஏற்கனவே ஆட்டோ 



தொழிலில் மீட்டர் முறையை 



அரசாங்கம் கொண்டு வந்ததில் மிக 



அதிகமாக அவர்களுக்கு பாதிப்பு 



ஏற்பட்டுள்ள நிலையில் இப்போது 



சுத்தமாக அந்தத் தொழிலை 



முற்றிலுமாக நசுக்கும் விதமாக 



சென்னை நகரின் ஒவ்வொரு சந்து 



பொந்துகளுக்கும் இரட்டை இலை 



சிற்றுந்துகள் ஓட வைத்திருப்பதைப் 



பார்க்கும்போது இந்த இரு 



செயல்களும் யாரையோ மனதில் 



நிறுத்தி பழி வாங்கும் செயல்என்றே 



ஸ்ரீமான் பொதுஜனம் கருதுவதையும் 



என்னால்நிராகரிக்கமுடியவில்லை. 



சரி. அப்படி யாரையப்பா பழி 



வாங்கும் விதமாக இந்த 



நடவடிக்கை? இப்போ ஸ்ரீமான் 



பொதுஜனம் உள்ளே வர்றார். ஏன்யா 



மதுரை TR. பாலு சார், உங்களுக்கு 



விஷயமே தெரியாதா? இல்ல 



தெரியாத மாதிரி நடிக்கீகளா? இல்ல 



கேக்கேன். ஒரு கருப்பா நடிகர் 



இப்பகூட நடந்த தேர்தலில் ஆளும் 



கட்சியோடு இவர் கூட்டணி 



வச்சதினாலதானே அவுக 



ஆட்சியைப் பிடிக்க முடிஞ்சது. 



அன்னாருக்கு (நடிகருக்கு) 



சென்னையில சுமார் 1,௦௦௦ 



ஆட்டோக்களுக்கு மேல 



ஒடுதாமுல்ல. அத்த முடக்கனுன்ட்டு 



தான்வே இந்த இரண்டு பக்கத் 



தாக்குதல்.யோவ் கருப்பு காந்த 



நடிகரே உமக்கு இதுவும் வேணும் 



இதுக்கு மேலேயும் வேணும்யா. 



உம்மை எப்படி உங்க ரசிகர்கள் 



உம்மை கூப்பிடுதாணுவ. கேப்டன் 



அப்டித்தானே !! அப்புறம் சினிமால 



உமக்கு பெரு என்னாது வாயிலேயே 



நுழைய மாட்டேங்குதுங்கானும்.   



ஆ..இப்ப யாவகம் வந்த்ருச்சு 



என்னமோ...ஆ... புர்ச்சீ  கலைஞர். 



அப்படி இவர் என்ன புர்சீ பண்னாரோ 



அது அந்த ரஷ்யா நாட்டின் லெனின் 



ஒருவரே அறிவார். இவர் என்ன 



கலைக்குப் பாடுபட்டாறோ, இல்ல 



எத்தனை படத்துக்கு கதை,வசனம், 



பாடல்கள்,அப்படீன்னு எத்தனை 



படங்கள் உழைத்திருக்காரோ? 



(பேரறிஞர் அண்ணா மட்டுமே 



அறிவார்)ஆழமாசிந்திக்கணும்.இந்த 



ஆளும் அரசு, கருப்பு நடிகரின் 



வாக்குகள் பெறவில்லை என்றால் 



இன்று அரியாசனத்தில் ஏறிஅமர்ந்து 



கோலோச்ச முடியுமா? ஆனா, சும்மா 



சொல்லக் கூடாது, அந்த நன்றிக் 



கடனை இந்த கருப்பு நடிகரின்மீது 



எப்படி அன்பாக, பிரியமாக, 



வெளிக்காட்டி உள்ளது.உம்..அடடா... 



ஏகப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு 



வழக்குகள், முதல்வர் மீது 



மரியாதைக் குறைவாக பேசியதாக 



உள்ள வழக்குகள், அதுக்கு அப்புறம், 



இவர் கட்சியில் உள்ள ஏழு,எட்டு 



சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு 



எலும்புத் துண்டை தூக்கி காம்பிச்சு 



அவங்களும் வாலை ஆட்டியபடி 



அங்கே போய் அவங்களோடு 



இணைந்து கைகோர்த்து  நிற்பது, 



இப்ப கடைசி கடைசியாக குதிரை 



கீழே தள்ளியதும் இல்லாமல் 



குழியையும் பறித்த கதையாக இவர் 



பினாமியாக நடத்தும் ஆட்டோ 



தொழிலுக்கே தீ வைக்கும் விதமாக 



மீட்டர் போருத்தனும் அப்டீங்கற 



உத்தரவு, இப்ப அதையும் மீறி 



ஆட்டோ தொழிலை நசுக்கும் 



விதமாக சிற்றுந்து வண்டிகளை 



தெருவுக்குத் தெரு இயக்கியதன் 



மூலம், அந்த கருப்பு நடிகருக்கு 



எவ்வளவு பெரிய புரட்டாசி மாத 



சனிக்கிழமை நாமம் போட்ட கதை.... 



அப்பப்பா, சூப்பரோ சூப்பர். அப்புறம் 



இன்னும் ஒரு மிக முக்கியமான 



கருத்து என்ன என்றால், இன்றைக்கு 



அரசாங்கம் ஓட விட்டிருக்கும் இந்த 



சிற்றுந்து விஷயத்தில,  செஞ்சுட்டு 



இருக்குற கொஞ்ச நஞ்சவேலையை 



விட்டுபுட்டு இனிமேலே இந்த 



ஆட்டோ ஓடிப் பிழைப்பு நடத்தும் 



தொழிலை விட்டுபுட்டு எல்லா 



ஆட்டோ ஓட்டுனர்களும் பேசாம 



அரசாங்கம் நடத்தும் டாஸ்மாக் 



கடையில போயி அந்தந்த பார்களில் 



என்ன வேலை கிடைச்சாலும் 



பேசாம பார்த்துறலாம். இல்லையா 



அரசு நடத்தும் உணவகங்களில் 



தட்டு கழுவுற வேலைக்கு 



போயிறலாம் இப்படி எந்த 



வேலையும்கிடைக்கலையா..உம்....... 



யார்ட்டையும் சொல்லிக்காம 



கொள்ளிக்காம, கடல்ல விழுந்து 



தற்கொலை செஞ்சுக்கலாம். அய்யா 



கருப்புநடிகருக்கு இதவிடவேறுஎந்த 



ஆளு முதல்வரா வந்தாலும் இப்படி 



திருவள்ளுவரே நாணும்படியான 



வழியில் நன்றி,விசுவாசத்தைக் 



காம்பிப்பது என்பது இருக்கவே 



இருக்காது நான் அடிச்சு சொல்றேன் 



தம்பிகளா!!அட...என்ன... நான்.. 



சொல்றது.. இந்த மாதிரி கொடுமை 



எல்லாம் நம்ம தமிழ்நாட்டைவிட்டா 



வேற எங்க சார் பாக்க முடியும். நான் 



சின்னப் பிள்ளையாசுமார் 6  வயசு 



இல்லை ஏழு,எட்டு வயசுப் பையனா 



இருக்கும்போது  தரையிலே எட்டு 



கட்டம் போட்டு தாண்டி 



விளையாடும் பாண்டி ஆட்டம் 



நடக்கும் போது தோத்துப்போன 



ஆளைப் பாத்து ஒரு பேச்சு 



பேசுவோம்.அது எண்ணானா 



ஒய்...வேணுங்கட்டைக்கு 



வேணும்..வெங்கலக் கட்டைக்கு 



வேணும் அப்படி பாட்டு பாடிட்டே 



இருப்போம். இப்ப ஏறத்தாழ 53 



ஆண்டுகள் கழிந்தாலும் இன்னமும் 



அந்த பசுமைநிற, வேப்ப மர நிழலும், 



குளிர்தென்றல் காற்றும், அந்தக் 



கயித்துக் கட்டிலும் எப்படி மறக்க 



முடியாதோ அது போலத்தான் 



எனக்கு இந்த"வேணுங்கட்டைக்கு 



பழமொழிச் சொற்களும்..என்னால் 



மறக்க முடியாது. இந்த சிற்றுந்து 



பக்கவாட்டுப் பகுதியில அரசு ஒரு 



ஆளும் கட்சியின் தேர்தல் சின்னம் 



இரட்டை இலையை இரண்டு சைடு, 



மற்றும் ஒரு பின்பக்கம், இதுல 



எல்லாம் இரட்டைஇலை 



சின்னத்தை வரஞ்சு இருப்பது 



சுத்தமான கடைஜ்ஜெடுத்த 



அயோக்கியத்தனம். ஆளும் அரசே !! 



இப்படி எல்லாம் உங்கள் தலைவர் 



M.G.R. உருவாக்கின கட்சிக்கு அதன் 



சின்னத்துக்கு, இப்படி ஒரு 



அவமானம், உங்களைத்தவிர வேறு 



எவராலும்  எவராலும் தந்திட 



முடியாதே !! இப்படி எல்லாம் 



படம்போட்டா, அடுத்த ஆண்டு வரும் 



நாடாளுமன்றத் தேர்தல்ல 4௦க்கு 4௦ 




இடத்தையும் நாம ஒருத்தரே 



ஜெயிப்போம் அப்படீன்னு மனப்பால் 



குடிக்காதீங்க. இந்த நாட்டு பொது 



ஜனங்களோட மனோபாவம் 



உங்களுக்கு தெரியாதுங்க. எல்லா 



உதவிகளையும் பெற்றுக் 



கொள்வார்கள் அப்போது ஈ என்று 



இளிச்ச வாய் காம்பித்து அதுவும் 



காதுவரைக்கும் கிழியும்.இந்த 



நிலையை மனசுலே எண்ணித்தான் 



நீங்க போட்டு இருக்கிற அந்த 



அடுத்தநிலை கனவுகள் என்ன 



என்று ஏற்கனவே எல்லோருக்கும் 



தெரியும். அதாவது 4௦க்கு 4௦ம் 



ஜெயிச்சா உங்களைக் கேக்காம 



எந்தக் கொம்பனாலும் இங்க 



அரசியல் பண்ண முடியாது . நீங்க 



யாரைக் கை காம்பிக்கிரீங்களோ 



அவங்கதான் இந்நாட்டு பிரதமர் ஆக 



முடியும்ன்ற நிலை வேணும்ன்றது 



உங்க எண்ணம். ஆனா 



நடக்கப்போவது அது இல்லையே. 



ஏங்க மதிய இலவச உணவு 



பள்ளிக்கூடம் அதில் படிக்கும் படிப்பு 



இலவசம், பள்ளிச் சீருடை இலவசம் 



ஏராளமான 



தொழிற்ச்சாலைகள், மின் 



திட்டங்கள், அணைக்கட்டுக்கள், 



இவ்வளவும் இந்தத் தாழ்ந்த 



தமிழ்நாட்டுக்குத் தந்த கர்ம வீரர் 



காமராஜரையே அதுவும் அவரது 



இனமான சொந்தத் தொகுதியான 



விருதுநகர் சட்டமன்றத் 



தொகுதியில அதுவும் ஒருபொடியன் 



மாணவர் சங்கத் தலைவன் 



சீனிவாசன் என்ற பையனை 



ஜெயிக்க வச்ச அவ்வளவுவிசுவாசம் 



காட்டிக் கொண்டாடியவர்கள், 



இந்தத் தமிழ்நாட்டு மக்கள் என்பதை 



தயவு செய்து மறந்துராதீர்கள். 



அதனால ரெட்டை இலை படம், 



உங்க படம் சிற்றுந்துல முன்பக்கம், 



குடிநீர் பாடில்ல உங்க படம், 



உணவகத்துல உங்க படம்.இப்படி 



எல்லாம் போட்டாலும் உங்களை 



தோற்க்கடிச்சே தீருவது என்று 



ஸ்ரீமான் பொதுஜனம் முடிவு 



எடுத்துட்டாங்கன்னு வையுங்க. 



உங்களாலே எதுவும் செய்ய 



முடியாது. என்னமோ உங்களுக்கு 



இப்ப ஒரு யோகமான காலம் 



நடந்துட்டே இருக்கு. அதனால 



வண்டி ஓடுது. பாப்போம்.நாளை 



என்ன நடக்குமுன்னு இறைவன் 



ஒருவனே அறிவான். எது எப்படியோ 



பாவம்தான் ஆட்டோ 



சொந்தக்காரங்க நிலை இந்த 



சென்னையில். இதுக்குமேலே 



சொல்ல இப்போதைக்கு ஏதும் 



இல்ல,இல்ல சந்திப்போம்மீண்டும் 



 நன்றி !! வணக்கம் !!



அன்புடன். மதுரை T.R.பாலு.