Saturday 28 September 2013

சொர்க்க வாயிலில் தொங்கிய அரசனும் அவனை சொர்கத்திற்கு அனுப்பிய இளவரசனும் !!--ஒருகதை.






உடல்மண்ணுக்கு!! உயிர் தமிழுக்கு!!


இதை உரக்கச் சொல்வோம் 


உலகுக்கு!!                                                     


இனம் ஒன்றாக, மொழி வென்றாக, 


புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!     


நம் வெற்றிப் பாதையில் நரிகள் 


வந்தால் விருந்து வைப்போம் 


விண்ணுக்கு!!




வீரர்கள் வாழும் திராவிட நாட்டை 


வென்றவர் கிடையாது !!                   


வேலும் வாளும் தாங்கிய மறவர் 


வீழ்ந்ததும் கிடையாது !!                     




குள்ளநரிக்கூட்டம்வந்துகுறுக்கிடும்!


நல்லவர்க்குத் தொல்லை தந்து 


மடக்கிடும் !! நீ                                             


எள்ளளவும் பயம்கொண்டு 


மயங்காதிரு !!                                         


அவற்றை எமன்உலகுக்கு அனுப்பி 


வைக்கத் தயங்காதிரு !!                           




என் உயிரினும் மேலாக நான் 


போற்றி வணங்கி வரும் எனது 


அன்புத் தமிழ் உடன் பிறப்புகளே !! 


உங்கள் அனைவருக்கும் எனது 


இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் 


அதனுடன் இணைந்த வணக்கங்கள்.



நான் இங்கே சொல்லப்போகின்ற 



கதை, எனது கற்பனையில்உருவான 


ஒரு அற்புதக் காவியம். இந்தக் கதை 


நடைபெற்றதாகச் சொல்லப்படும் 


கால கட்டம் எது என்றால் பல்லவ 


மன்னர்கள் ஆட்சி புரிந்திட்ட ஒரு 


சாம்ராஜ்ஜியத்தில் நிகழ்ந்ததாக 


இங்கே புனையப்பட்டுள்ளது எனது 


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!





ஒரு பல்லவ மன்னன் அவன் பெயர் 


நரசிம்மன். மிகவும் கொடுமை 


மிகுந்த உள்ளக்காரகனான அவன் 


அரசாங்கத்தின் வருமானத்தை, 


உணவுக் களஞ்சியத்தின் இருப்பை 


அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு 


அடிப்படையில் என்ன செய்வான் 


என்று கேட்டால் அந்த ஊரில் உள்ள 


ஒவ்வொரு வீட்டிற்கும் அரசாங்க 


நெற்களஞ்சியத்தில் இருந்து 


ஒவ்வொரு மூட்டை நெல்மணியை 


பிரதி மாதம் முதல் தேதி அனுப்பி 


வைப்பான். ஸ்ரீமான் பொதுஜனம் 


என்ன செய்ய வேண்டும் என்றால் 


அந்தந்த மாதத்தின் இறுதி தேதிக்கு 


முன்பாக  அவர்கள் அரசாங்கத்தில் 


பெற்றுக்கொண்ட ஒரு மூட்டை 


நெல்லுக்கு பதிலாக ஒரு மூட்டை 


அரிசியாக அதனைத் திருப்பிச் 


செலுத்திட வேண்டும் என்பதே 


அரசின் ஆணை. இந்த சட்டத்தை 


யார் மீறினாலோ அல்லது 


நிறைவேற்றிட மறுத்தாலோ, 


தயங்கினாலோ, காலம் கடத்தி 


வந்தாலோ அவர்களுக்கு 5 


ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை 


உண்டு. பொதுமக்கள் மனத்தில் 


மிகுந்த வேதனைகளுடன் நம் தலை 


எழுத்து இப்படிப்பட்ட கொடுமைகள் 


நிறைந்த அரசின் பிடியில் நம்மை 


அந்த எல்லாம் வல்ல இறைவன் 


இப்படி ஒரு கொடுமைக்கார 


அரசாங்கத்திடம் சிக்கிட வைத்து 


விட்டானே என மனதுக்குள் எண்ணி 


புழுங்கியே தத்தமது 


வாழ்க்கையைநடத்தி வந்தனர். 


என்று இந்தக் கொடுமைக்கார 


அரசாங்கம் தொலைந்து போகும் 


என்று எண்ணி மக்கள் காத்துக் 


கொண்டு இருந்தனர்.(என்ன பாலு 


சார் !! கதையைப் பார்த்தால் நம்ம 


தமிழ்நாட்டினில் நடைபெற்றுக் 


கொண்டு இருக்கும் அரசை நினைவு 


படுத்துகிற மாதிரி இல்ல இருக்குது) 


இப்படி இருந்த ஒரு கால கட்டத்தில் 


மன்னர்பல்லவவர்மன்திடீரென்று


மாரடைப்பினால் மரணம் அடைய 


அவரது மகன் இளவரசன் சோம 


பல்லவ வர்மன் பதவிப் பொறுப்பு 


ஏற்று அரசாங்க நடவடிக்கைகளை 


கவனித்து வந்தான். அப்படி 


இருக்கும்போதுதான் அரண்மனை 


ஜோதிடர்  ஜெகன்னாதன் அங்கே 


வந்தார். அவரிடம் இளவரசர் 


வினவினார் என்ன என்றால்மரணம் 


அடைந்து விட்ட தந்தை தற்போது 


இருப்பது சொர்கத்திலா அல்லது 


 நரகத்திலா என வினவினார் 


இளவரசர். உடனே ஜோதிடர் 


கட்டங்களில் சில கணக்குகளைப் 


போட்டு விட்டு அய்யா தங்கள் 


தந்தை மக்களை எவ்வளவு 


கொடுமை படுத்தி இருந்தாலும்கூட 


சில பல நன்மைகளையும்     கூடவே 


செய்து வந்துள்ள காரணத்தாலே 


அவர் சொர்கத்தின்  வாயிலில் 


தொங்கிக்கொண்டுஇருக்கிறார்.அது 


சிலர் இவர் எவ்வளவு நல்லவர் 


என்று சொன்னால் போதுமானது. 


உங்கள் தந்தைஅங்கே சொர்கத்தின் 


உள்ளாக  சென்றிடுவார் என்று 


உரைத்தார். பூ... இவ்வளவுதானா 


யாரங்கே மந்திரி மணாளா இங்கே 


வாரும் இப்படி.. என்றார் இளவரசர். 


மந்திரி:-மன்னா ? அழைத்திட்ட 


காரணம் யாதோ.                                       


இளவரசர்:- அரசாங்க அரிசி 


கஜானாவின் திட்டத்தில் 


இன்றுமுதல் மாற்றங்கள்செய்திடுக. 


மந்திரி :- என்ன மாற்றங்கள் ?             


இள:-இதுவரைஉள்ள நடைமுறை?   


மந்திரி:- ஒருமூட்டை 


நெல்கொடுத்து ஒரு மூட்டை அரிசி 


இதுதான் நடைமுறை.                           


இளவ:- இனிமுதல் மாற்றுக. 


ஒருமூட்டை உமி. ஒருமூட்டை 


அரிசி. அரசாங்கத்தின் அரிசி 


கஜானாவிற்கு மக்கள் செலுத்திட 


வேண்டும்.இது மன்னர் உத்தரவு.



மந்திரி:- அப்படியே ஆகட்டும்.             


மன்னரின் புதிய மக்கள் மத்தியில் 


சலசலப்பை ஏற்படுத்திட மக்கள் 


மத்தியில் மாறுவேடம் தரித்து 


அவர்கள் என்ன பேசுகிறார்கள் என 


ஒட்டுக் கேட்கிறான் இளவரசன்.



மக்கள்:- அடப் பாவி மட்டை. இவங்க 


அப்பனாச்சும் ஒரு மூட்டை 


நெல்லைக் குடுத்து ஒரு மூட்டை 


அரிசி கேட்டாரு. நாம தந்தோம். 


பாதிக்கு பாதிதான் கை நட்டம். இப்ப 


என்னடான்னா, மகன் ஆட்சிக்கு 


வந்தவுடன்  ஒரு மூட்டை உமிக்கு 


ஒரு மூட்டை அரிசிஇல்லை 


கேக்கான். நாம எங்க போறது. யக்கா 


இவனுக்கு இவன் அப்பன் எவ்வளவு   


 நல்லவன்.(என்று மக்கள் பேசுவதை 


காத்து குளிரக் கேட்ட மைந்தன் 


வேகமாக அரசவைக்கு வந்து 


ஜோதிடரை அழைக்கிறான்.அவரும் 


வருகிறார். இப்ப பாரும் ஒய் 


ஜோசியரே என் அப்பன் எங்கே 


இருக்காரு என்று. சொர்கத்தில் 


தொங்கிகிட்டு இருந்தவர் உங்க 


புண்ணியத்தாலே சொர்கத்தின் 


உள்ளே சென்று விட்டார் என்று 


சொல்லவே மனம் நிம்மதி 


அடைந்தான் இளவரசன்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன், மதுரை T.R.பாலு.





மறைந்த புரட்சி நடிகர் M.G.R. காட்டிய தனி அக்கறை,அன்பு !! பெண் குலத்தின் மேல் !!





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச்சொல்வோம் 


உலகுக்கு !!                                                   


இனம் ஒன்றாக,மொழி வென்றாக, 


புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!நம் 


வெற்றிப்பாதையில் நரிகள் வந்தால் 


விருந்து வைப்போம் விண்ணுக்கு !!   


வீரர்கள் வாழும் திராவிட நாட்டை 


வென்றவர் கிடையாது !!                     


வேலும், வாளும், தாங்கிய மறவர் 


வீழ்ந்ததும் கிடையாது !!                       


குள்ள நரிக்கூட்டம் வந்து 


குறுக்கிடும் !!                                             


நல்லவர்க்குத் தொல்லை தந்து 


மடக்கிடும்!!                                                 


நீ எள்ளளவும் பயம் கொண்டு 


மயங்காதிரு !!                                         


அவற்றை எமன்உலகுக்கு அனுப்பி 


வைக்கத் தயங்காதிரு !!                     



உலகெங்கிலும் வாழ்ந்துவரும்         


என் உயிரினும் மேலான அன்புத் 


தமிழ் உடன் பிறப்புகளே !!                   


உங்கள் அனைவருக்கும் எனது 


இதயம் கனிந்த வாழ்த்துக்களோடு 


இணைந்த உளம் கனிந்த, சிரம் 


தாழ்ந்த,கரம் குவிந்த வணக்கம் !!



ஏறத்தாழ 13 ஆண்டுகளாக 


தமிழகத்தின் முதல் அமைச்சராக 


கடமையாற்றியவரும் 


அனைத்திந்திய அண்ணா திராவிட 


முன்னேற்றக்கழகத்தின் நிறுவனர் 


என்றபெருமைஉடையவர்,முத்தமிழ் 


அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி 


அவர்கள் திருவாய்மொழியால் 


அன்றைய தினம் " புரட்சி நடிகர் " 


என்று பட்டம் பெற்று பாராட்டினை 


அடைந்தவரும் பொன் மனச் 


செம்மல் அன்று கலை உலகினர் 


அன்புடனும்,பாசத்துடனும் அழைத்த 


காலஞ்சென்ற M.G.இராமச் சந்திரன் 


முன்பு ஒருமுறை மதுரை வந்து ஒரு 


பொதுக்கூட்டத்தில் உரைநிகழ்த்திக் 


கொண்டு இருக்கும் வேளையில் 


கூட்டம் என்றால் கூட்டம் அப்படி 


ஒரு கூட்டம். எனக்கு வயது 


அப்போது சுமார் 26 அல்லது 27 


இருக்கும் என  நினைக்கிறேன்.என் 


ஆயுளில் அப்படி ஒரு கூட்டத்தினை 


நான் அதுவரையில் பார்த்ததே 


இல்லை எனலாம். அந்த அளவுக்கு 


கூட்டம் அலைமோதியது. 


அதன்காரணமாகத்தான் பேரறிஞர் 


அண்ணா அவர்கள் சொல்வது 


உண்டு.அது என்ன்னவென்றால் :-


" என்தம்பி இராமச்சந்திரா. நான் 


உன்னிடம் தேர்தல் நிதியாக ஒரு 


இலட்சம் ரூபாய் (இன்று அதன் 


மதிப்பு சுமார் 5 கோடிகள்)கேட்டால் 


அதை உன்னால் மிக எளிதாக 


எனக்கு தந்துவிட இயலும். ஆனால் 


எனக்கு அது பெரிதல்ல. நான் 


உன்னிடம் வேண்டி விரும்பி 


கேட்பதெல்லாம் உனது 


திருமுகத்தை தேர்தல் 


பிரச்சாரத்திற்கு வந்து கூட்டத்தில் 


காண்பித்திடு. அதன் வாயிலாக 


எனக்கு, திராவிட முன்னேற்றக் 


கழகத்திற்கு ஒரு கோடி வாக்குகள் 


கிடைத்திடும் அது ஒன்றே எனக்கு 


போதுமானது என் அருமைத் தம்பி 


இராமச்சந்திரா " என்று 


சொல்வார்கள்.எள் போட்டால் 


எண்ணையாகிவிடும். ஆண், பெண், 


குழந்தைகள், வயதில் முதிர்ந்தோர், 


தாய்மார்கள் என்று அப்படி ஒரு 


கூட்டம். MGR. அந்த கூட்டத்தினை 


மிக உற்று நோக்கி கவனித்துக் 


கொண்டு தான் இருந்தார். 


கூட்டத்தில் தான் பேச வேண்டிய 


கருத்துக்கள் அத்தனையையும் 


மிகவும் விவரித்து பேசினார் சுமார் 


ஒரு மணி நேரத்திற்கும் மேலாக. 


அதன் பின் தனது உரைதனை 


முடிக்கும் வேளை வந்துவிட்டது. 


உடனே கூட்டத்தில் அமர்ந்து 


இருந்தோர்கள் அனைவரும் எழுந்து 


நின்றுகலைந்துசென்றிடஎத்தனித்த 


நேரத்தில் அவர் ஒரு அறிவிப்பு 


ஒன்றினை  வெளியிடுகிறார். அது 


என்ன என்றால், தயவு செய்து 


இங்கே கூடி இருக்கும் தாய்மார்கள், 


பெண்கள்,பெரியோர்,குழந்தைகள் 


இவர்கள் அனைவரும் இப்போது 


கூட்டத்தினை விட்டு வெளியே 


சென்றிடலாம். ஏன் என்றால் இங்கே 


அமர்ந்து இருக்கின்ற ஆண்கள், 


வாலிப கூட்டத்தோர்கள் இவர்கள் 


மட்டும் இங்கே அமர்ந்து இருந்து 


தாய்மார்கள் பெண்கள் இவர்களை 


மட்டும் வெளியே செல்ல அனுமதி 


அளிக்க வேண்டும்.நான் அந்த 


ஆண்களிடம், வாலிபர்களிடம் 


தனியே சிலபல செய்திகளைச் 


சொல்லிட வேண்டும். எனவே 


அவர்களை விடுத்து மற்று உள்ள 


ஏனையோர் அனைவரும் வீட்டுக்கு 


செல்லலாம் என்றார். அந்த 


அறிவிப்பு அவர் (MGR) வெளியிட்டு 


சுமார் பத்து நிமிடங்கள் ஆனது. 


அத்தனை தாய்மார்கள், பெண்கள், 


பெரியோர் மற்றும் குழந்தைகள் 


அனைவரும் கூட்டத்தினை விட்டு 


வெளியேறி சென்று விடுகின்றனர். 


அதை நன்கு கவனத்து அதன் பின் 


அங்கே உள்ளஆண்கள், வாலிபர்கள் 


(அன்று என்னைப்போல் ) மனதில் 


என்னஎண்ணிக்கொண்டிருந்தோம் 


என்றால் M.G.R.ஏதோ மிக முக்கியம் 


நிறைந்த கருத்துக்களை வழங்கப் 


போகிறார் என்று காத்துக்கொண்டு 


இருந்த வேளையில் கூட்டத்திற்கு 


வந்திருந்த அனைத்துப் பெண்களும் 


வெளியில் சென்று விட்டார்கள் 


என்பதை அறிந்து உணர்ந்த அவர் 


இப்போது ஒலி வாங்கு கருவியின் 


முன்பாக (MIKE) தனது பேச்சைத் 


தொடர்ந்தார். இப்போது இங்கே 


அமர்ந்து உள்ள அனைவரும் 


வீட்டிற்குத் திரும்பலாம் என்றாரே 


பார்க்கலாம்.அனைவருக்கும் ஒரே 


அதிர்ச்சி.மீண்டும் MGR பேசுகிறார். 


என் அன்புள்ள இளம் வாலிபர்களே !!


ஆண் குலத்தின் நண்பர்களே !! நான் 


ஏன் இங்கே உங்களை இருக்கச் 


சொன்னேன் என்றால் இன்று 


கூட்டம் மிக அதிகம்.ஒரே நேரத்தில் 


நீங்களும் பெண்கள்,தாய்மார்கள் 


வயதி மூத்தவர்கள் சிறுவர்கள் என் 


அனைவரும் வெளியில் ஒரேநேரம்


கிளம்பினால் கூடத்தில் சிக்கி 


பெண்கள் மிகவும் சிரமப்படுவார்கள் 


என்பதனால் அவர்களை மட்டும் 


முதலில் வெளியே சென்றிட 


அனுமதி அளித்தேன். உங்களை 


இங்கு இருக்கச் செய்வதற்கு எனக்கு 


வேறு வழி தெரியவில்லை. ஆகவே 


தான் உங்களிடம் தனியே பேச 


வேண்டும் என்று பொய்உரைத்தேன் 


என்றாரே பார்க்கலாம். பெண்கள் 


மீது அவருக்கு உள்ள அக்கறையை 


நான் அன்றுதான் பார்த்தேன். 


என்னே அவரின்  ராஜ தந்திரம். 


உம்..இன்று அவர் உயிருடன் 


இல்லாததால் இங்கே 


என்னென்னமோ நடக்குது. 


ஆண்டவன்தான் இந்த நாட்டை 


காப்பாற்றவேண்டும் !!


நன்றி !! வணக்கம் !!                                     


அன்புடன். மதுரை TR.பாலு.


( நன்றி) :- ஆனந்த விகடன் 25.௦9.13 


அந்த இதழில் பார்த்தேன்.படித்தேன் 


இரசித்தேன்.அந்த இதழில் தான் 


எனக்கு இப்போது எழுதிய கட்டுரை-


க்கு மூலக் கருத்து கிடைத்திட்டது.


 

நன்றி வணக்கம் 


Saturday 21 September 2013

காசியில் இருப்பவர்கள் யார்? பட்டணத்தில் உள்ளோர் யார்?மதுரையில் வசிப்பவர் எவர்?






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச்சொல்வோம்


உலகுக்கு!!


இனம் ஒன்றாக,மொழி வென்றாக,


புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!


நம் வெற்றிப் பாதையில் நரிகள்


வந்தால் விருந்து வைப்போம்


விண்ணுக்கு!!



உலகெங்கிலும்வாழ்ந்துவரும் என்


உயிரினும் மேலாக நான் போற்றி


வணங்கி வரும் அன்புத் தமிழ்


உடன்பிறப்புகளே !!


உங்கள் அனைவருக்கும் எனது


இனிய காலை வணக்கம். நிற்க!!




இன்று நான் இந்தக் கட்டுரைக்கு



தேர்ந்து எடுத்துள்ள தலைப்பு


தயவுசெய்து இதை யாரும்


முக்கியத்துவமானதாக எடுத்துக்


கொள்ள வேண்டாம் எனவும்


சற்றே சிரித்து மகிழ்வு பெற்றிட


மட்டுமே எடுத்துக்கொள்ள


வேண்டும் என நான் உங்கள்


அனைவரையும் வேண்டி விரும்பி


கேட்டுக்கொள்கிறேன் !!


1) " காசியில் இருப்பவர்கள்

    

        அனைவரும் பாவிகள் " !!


பொதுவாக இந்து மதத்தினைச்


சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் 


அவர்கள் கடமைகளை


நிறைவேற்றி முடித்திட்ட பின்பு


புனித யாத்திரை செய்திட எண்ணிச்


சென்றிடும் முதல் இடம் உத்திரப்


பிரதேச மாநிலத்தில் உள்ள காசி


என்று அழைக்கப்படும் புண்ணிய


ஷேத்திரமேஆகும்(எப்படி இஸ்லாம்


மதத்தினைச் சேர்ந்தோர்கள் புனித


மெக்கா மதீனா பயணம் செய்கின்-


றனரோ அது போல ) ஆக அந்த


காசியில் உள்ளூர் வாசிகள் என்று


நீங்கள் பார்த்தீர்களேயானால் அது


பெரும்பாலும் வேதம் ஓதிடும்


வேதியர்கள் கூட்டமாகத்தான்


(கருமம் செய்து காலட்சேபம்


நடத்திடும் பார்ப்பனர்கள்) அங்கே


நிறையப்பேர்கள் வசிப்பது உண்டு.


இந்தியாவில்உள்ளபிற மாநிலத்தில்


வசிப்பவர்களும் உலகெங்கிலும்


வாழ்ந்து வரும் இந்துமதத்தைச்


சேர்ந்தோர்கள் என ஏராளமான


பக்த கோடிகள் அங்கே குவிவது


என்பது நடைமுறை வழக்கத்தில்


உள்ள ஒன்றே ஆகும்.ஆக அப்படி


வருவோர்கள் அனைவரும் தங்கள்


மூதாதையர்கள் ஆன்மா சாந்தி


அடையவும் தாங்கள் வாழ்நாளில்


அதுவரை செய்திட்ட பாவங்களை


நீக்கிடும் விதமாக அங்கு தர்ப்பணம்


செய்து தங்களது கருமங்களை


அங்கே வேதம் ஓதி கருமாந்திரம்


செய்திடும் பார்ப்பனர்கள் வசம்


புனித நீரினை தானம் செய்து அதன்


வாயிலாக தர்ப்பணம் செய்திடும்


வேளை அந்தப் பாவங்கள்


அனைத்தையும் அந்த ஊர்


பார்ப்பனர்கள் தாங்கள் தங்களது


கையில்இவர்கள்செய்த பாவத்தைப்


பெற்றுக்கொள்வது வழக்கம்.


அதனால்தான் இந்தப் பழமொழி


வழக்க்கத்தில் வந்தது. எது என்றால்


" காசியில் உள்ளவர்கள் 


   அனைவரும் பாவிகள் " என்று.




2)  " பட்டணத்தில் உள்ளோர்கள்

     அனைவரும் கெட்டவர்கள் "



பொதுவாக தமிழில் ஒரு நல்ல


சொற்றொடர் ஒன்று உண்டு.


அதுதான் மேலே சொல்லப்பட்டு


உள்ளது. கெட்டும் பட்டணம் சேர்


என்று நம் தாய்த் தமிழில் ஒரு


வாசகம் உண்டு அன்பர்களே !!


அதாவது கிராமங்களில் சுத்தமாக


நிதிநிலை வறண்டு பிழைத்திட


வேறு வழியின்றி வாடிடுவோர்


எல்லோருமே எடுப்பது உண்டு


கடைசியாக ஒரு முடிவு ஒன்று


எடுப்பது உண்டு. அதுதான் நாம


இப்ப இருக்கிற நிலைமையில்


பட்டணத்திற்குப் போனால்


எப்படியும் பிழைச்சுக்கலாம்


 என்று சொல்லி வருபவர்களே


இங்கு அதிகம். அதில் தலை


எழுத்து, தசா புத்தி நன்கு உள்ளோர்


தாழ்ந்த நிலை நீங்கி வறுமை போய்


வளமையாக வாழ்ந்திடுவர். மிச்சம்


உள்ளோர்கள் ஏதோ பெயருக்கு


வரும்படி கிடைத்து பிழைப்பு


நடந்து கொண்டு வரும் இதுதான்


சென்னை போன்ற பட்டணங்களில்


அன்றும்,இன்றும்,என்றும் நாம்


காண்கின்ற நிலை. இந்த நிலை


வருவதனால்தான் இந்த கீழே


சொல்லப்பட்டுள்ள தலைப்பு


உண்மை என்றே ஆகிவிடுகிறது


என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


" பட்டணத்தில் உள்ளோர்கள்


அனைவரும் கெட்டவர்கள் " என்று.




3)  " மதுரையில் வசிப்பவர்கள்

      

        எல்லோரும் கழுதைகள் "




பொதுவாக நம் சொல்வழக்கினில்


என்ன சொல்லுவார்கள் என்று


கேட்டால் மதுரையைச் சுற்றிய


கழுதைகூட வேறு ஒரு ஊர்


போகாது என்று.  ஏன் என்றால்


கஞ்சியோ, இல்லை கூழோ


மதுரை மீனாட்சி நகரில் வாழ்ந்து


ரசித்தவர்கள்வேறுஎந்த ஊருக்கும்


செல்ல நினைத்திடவே மாட்டார்கள்.


அது ஏன் என்றால் அதுதான் அந்த


ஊரின் சிறப்பு.அமைதியான சூழல்


என்றுமே பிரச்சினை என்று


எதுவும் வராத வாழ்க்கை.ஆகவே


அந்த வாழ்க்கைபோதும் எனஅந்த


மதுரையில்உள்ளோர் 
அனைவருமே 


எண்ணுகின்றபடியால் 


அந்த மதுரையை விட்டு வேறு எந்த


ஊருக்கும் செல்ல மாட்டார்கள்.


அதனாலதான் மேலே சொன்ன


பழமொழி இங்கே உண்மை என


முத்திரை பெறப்பட்டுள்ளது 


அதனால் மட்டுமே கீழே சொன்ன 


சொற்றொடர் அன்றும்,இன்றும், 


இனிமேல்என்றும் சொல்லப்ப--


டுகிறது/சொல்லப்படும் !!



" மதுரையை சுற்றிய கழுதைகூட
 
வேறு ஊருக்குப்ப்போயி பிழைத்திட


எண்ணாது /அப்படியே 


எத்தனித்தாலும்


மதுரையின் கனிவான கவனிப்பு


இவர்களுக்கு வேறு எங்கும் 


கிடைக்க வாய்ப்பு இல்லை. எனவே 


வேறு ஊர் சொல்ல மாட்டார்கள். 


அதனால்தான் 



" மதுரையில் இருப்பவர்கள் 


   எல்லாரும் கழுதைகள் " என்று.




சரி !! நேயர்களே !!எப்படி இருந்தது


நான் தந்த புது சொற்றொடர்கள்


உருவான விதம் பற்றி உங்கள்


அனைவருக்கும் நான் அருள்சேர


விளக்கிகிட்டேன். எனது அன்புத்-


-தமிழ் நெஞ்சங்களே !!


சரி அன்பர்களே !! மீண்டும்வேறுஒரு


கருத்துப்பதிவினில் நாம் 


அனைவரும்


மீண்டும் சந்திப்போம்.அதன் பிறகு


நாம் அனைவரும் சிந்திப்போம் என


சொல்லி விடை பெறுகிறேன்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை TR. பாலு.
 '


முகம்மதியர்களின் மதத்திற்கு " இஸ்லாம் " என பெயர் வந்த காரணம் --இது எனது கண்டுபிடிப்பு !!--திருத்தி வடிவமைக்கப்பட்ட புதிய பதிவு.!!




உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச்சொல்வோம்


உலகுக்கு !!


இனம் ஒன்றாக, மொழி வென்றாக,


புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!


நம் வெற்றிப் பாதையில் நரிகள்


வந்தால் விருந்து வைப்போம்


விண்ணுக்கு !!




வீரர்கள் வாழும் திராவிட நாட்டை


வென்றவர் கிடையாது !!


வேலும் வாளும் தாங்கிய மறவர்


வீழ்ந்ததும் கிடையாது !!




குள்ள நரிக்கூட்டம் வந்து 


குறுக்கிடும்!!


நல்லவர்க்கு தொல்லை தந்து


மடக்கிடும் !!--நீ


எள்ளளவும் பயம் கொண்டு 


மயங்காதேடா!!


அவற்றை எமனுலகுக்கு அனுப்பி


வைக்கத் தயங்காதேடா!!




அன்பும் பண்பும் ஒருங்கே அமைந்த 


உலகெங்கிலும் வாழ்ந்து வரும் என் 


அருமைத் தமிழ் நெஞ்சங்களே !!


உங்கள் அனைவருக்கும் எனது 


சிரம் தாழ்ந்த,கரம் குவிந்த மாலை 


வணக்கங்கள் உரித்தாகுக !!




நான் இன்று தேர்ந்து எடுத்துள்ள 


தலைப்பு ஏறத்தாழ 6 மாதங்களுக்கு 


முன்பாக முகப் புத்தகத்தில் அதில் 


ஆங்கில விளக்கங்களுடன் கூடிய 


ஒரு விரிவான கட்டுரைதனை 


அதில் நான் பதிவு செய்து 


இருந்தேன் 




இன்று அதன் தமிழ் விரிவுரையை 


உங்களுக்கு வழங்குவதில் பெரும் 


மன மகிழ்ச்சியுடன் கூடிய மட்டற்ற 


மன நிறைவு அடைகின்றேன் 




பொதுவாக இந்துக்களுக்கும் 


முகம்மதியர்களுக்கும் அநேகமாக 


எல்லா விஷயங்களிலும் நேர் 

எதிர் மறையான அணுகுமுறை 


உள்ளது என்பது ஆதிகாலம் 


தொட்டே நடைமுறையில் உள்ள 


ஒரு விஷயம். எப்படி என்றால்:-


1) நாம் கிழக்கு திசைநோக்கி 

சூரியனை வணங்குகிறோம்.


அவர்கள் மேற்கு திசை நோக்கி 

சந்திரனை வணங்குவார்கள்.



2) நமக்கு நாள் பிறப்பது என்பது 

காலைவேளை என்றால் 


அவர்களுக்கு நாள் பிறப்பது 

இரவு வேளை.



3) நாம் நின்றுகொண்டு எல்லாம் 

வல்ல இறைவனை வணங்குதல்  

என்றால் 


அவர்கள் முட்டிக்கால் தரையில் 

இருக்க முதுகு வளைந்து எல்லாம் 

வல்ல இறைவனை தொழுவார்கள்.



4) நாம் நமது தலையில் ஏதாவது 

தொப்பி அணிந்து இருந்தால் அதை 

கழட்டி விட்டு இறைவனை நாம் 

வணங்குவோம்.



அவர்கள் தலையில் குல்லா or

கைக்குட்டை எதாவது கட்டியபின் 

மட்டுமே இறைவனை தொழுவர்.




நான் இந்த எதிர்மறை வேறுபாடு-


-களை எதற்காக இங்கே குறிப்பி-


-டுகிறேன் என்றால். இந்தக் 


கட்டுரையின் முக்கிய அம்சம் நாள் 


துவங்குவதில் இருப்பதால்.



பொதுவாக முகம்மதியர்களின் 


முக்கிய கடமைகள் 5 என்பதே.



1) அல்லா ஒருவரே இறைவன். 

   முகம்மது நபி அவரின் தூதர்.

   (லா இலாஹி இல்லல்லா !!   
   முஹம்மது ரசூலில்லா!!)



2) ஒரு நாளில் 5 வேளைகள் 

தொழுகை நடத்தி எல்லாம் 

வல்ல இறைவனை வணங்கிட 

வேண்டும்.



3) புனித ரம்சான் மாதத்தில் 

நோன்பு காத்து அன்ன ஆகாரம்,

நீர் ஏதுமின்றி விரதம் இருந்து 

மாலை விரதம் முடித்து 3௦ 

நாட்களும் அதுபோல இருத்தல்.



4)  தனது ஆண்டு மொத்த 

வருமானத்தில் 2.5% வறுமையில் 

வாடிடும் ஏழை,எளியவர்கட்கு 

தர்மம் செய்திடல் வேண்டும்.



5) தனது ஆயுள் காலம் முடியுமுன்

ஒருமுறையாவது மெக்கா-மதீனா 

சென்று அங்கு உள்ள முகமது 


நபிகள்சமாதிஉள்ள 


இடத்தில்வைத்து 

எல்லாம் வல்ல அல்லாவை 

நினைத்து தொழுகை நடத்திட

வேண்டும். ஏன் என்றால் 

முஹம்மது நபி இந்த உலகத்தின் 

கடைசி நபிகள் ஆவார் என்பதால்.

(இந்த உலகம் தோன்றிய நாள் முதல்

 முகம்மது நபி தோன்றியதையும் 

சேர்த்து மொத்தம்1,76,௦௦௦நபிமார்கள் 

இந்த துனியாவில் தோன்றியதாக 

அவர்கள் வரலாறு)



ஆக இந்த ஐந்து கடமைகளுள் நான் 


மேலே குறிப்பிட்ட 2 ஆவது 


கடமையான 5 வேளை தொழுகை 


என்பதற்குள்தான் எனது 


கண்டுபிடிப்பு அங்கே உருவானது 


எனது அன்புத் தோழர்களே !!



நான் முதலிலே குறிப்பிட்டதுபோல 


இந்துக்களுக்கு நாள் துவங்குவது 


காலை வேளை என்றால் 


முகம்மதியர்களுக்கு நாள் 


துவங்குவது 


இரவுதான். அந்த இரவு வேளையில் 


நடத்திடும் தொழுகையின் ஆங்கில 


பெயரின் முதல் எழுத்தை மட்டும் 


எடுத்து வைத்துக்கொண்டு 


அதேபோல 


ஏனைய மீதி உள்ள நான்கு வேளை 


தொழுகைகளின் ஆங்கில 


வார்த்தையில் 


முதல் எழுத்தினைமட்டும் நாம் 


ஒருசேரப் பார்த்தால் அந்த மதத்தின் 


பெயர் இஸ்லாம் (ISLAM) என மிகச் 


சரியாக வந்துவிடும் என் அன்புத் 


தமிழ் நெஞ்சங்களே !!



எப்படி என்றால் இதோ விபரம் கீழே 


பாருங்கள் :-  


1)  இரவுநேர இறுதித் தொழுகை 

      

    அதன்  பெயர் :-


     ISHSHAA (இதிலிருந்து      I


2)  அதிகாலைவேளை தொழுகை 


    அதன் பெயர் :-


    SUBAH  ( இதிலிருந்து       S 



3)  நண்பகல்வேளை தொழுகை                  

    அதன் பெயர் :-


      LOHAR (இதிலிருந்து        L  



4)  மாலை வேளை தொழுகை அதன் 

     பெயர் :-
   

      ASAR   (இதிலிருந்து          A

5)  முன் இரவு வேலை தொழுகை 


     அதன் பெயர் :-

    

       MAHRIFF. (இதிலிருந்து   M


ஆக இப்போது அந்த 5 ஆங்கில 

எழுத்துக்களை ஒன்றுசேர்த்துப் 

படியுங்கள்.
         

                I   S   L   A  M 



இந்த கண்டுபிடிப்பை நான் 


நினைத்து உருவாக்கிட எனக்கு 


அறிவு வல்லமை 


தந்தது அந்த எல்லாம் வல்ல 


இறைவனே !!




எல்லாப் புகழும் இறைவனுக்கே !!



ஆண்டவன் ஒருவனே துணை 


நமக்கு!!




நீங்கள் நினைக்கலாம்என்னடா இது 


ஒரே அதிசயமாக இருக்கிறது நம்ம 


மதுரை T.R. பாலு   பிறப்பால் இந்து 


இவருக்குஎப்படிஇப்படிஇந்த ஞானம் 


வந்தது இஸ்லாமியமத சம்பந்தமாக 


என. அதற்கும் ஒருகாரணம் உள்ளது 


என் அன்புத் தோழர்களே !!


அதுதான் நான் உயிருக்கும் உயிராக,


நகமும் சதையும்போல விழியும் 


பார்வையும் போல உடலும் உயிரும் 


போல அப்படி ஒரு ஒட்டு உறவாக 


இருந்துவாழ்ந்துமறைந்தஎன் 


அன்புத் தோழர் அவர் இஸ்லாமியர் 


ஆவார்,அவர் பெயர் அல்ஹாஜ். 


முகம்மது யூனுஸ் என்பது தற்போது 


அவர் உயிரோடு இல்லை. காலமாகி 


(மர்ஹூம்)விட்டார். அவர் இருக்கும் 


வரை நான் ஓரு இந்துவாக 


இருந்தாலும்கூட ஏறத்தாழ 2௦ 


ஆண்டுகள் அவருடன் சேர்ந்து 3௦ 


நாளும் ரம்சான் நோன்பு காத்து 


விரதம் அனுஷ்டித்தவன் 


இந்த மதுரை TR. பாலு. அது தவிர 


எனக்கு இஸ்லாமிய மதக்கொள்கை,


கோட்பாடுகள் நிறைய எனது 


மனதுக்கு பிடித்தவையாக 


இருந்ததும் ஒரு காரணம். 


அதில் மிக முக்கியமான 


கொள்கை பெண்களுக்கு பர்தா 


எனும் உடல் முழுக்க மறைத்து 


(வீதியில் வரும்போது மட்டும்)


போடும் ஆடை அணிவித்தல் ஆகும்.


கணவனின் கண்களிலே நிறைந்து 


வாழுவாள். பிறர் கண்களுக்கு 


என்றுமே மறைந்து வாழுவாள் 


என்ற பாடல் வரிகள் எனக்கு 


மிகவும் பிடிக்கும் அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே!!



மிக்க நன்றி. இவ்வளவு பெரிய ஒரு 


கட்டுரையைப் படித்த உங்கள் 


கண்களுக்கு.



எல்லாப் புகழும் இறைவனுக்கே !!



நன்றி !! வணக்கம் !!




அன்புடன். மதுரை T.R. பாலு.