Saturday 28 December 2013

உடல் நலத்துடன் ஆண்டுகள் 1௦௦ வரை வாழ்ந்திட ஒரு சிறிய ஆலோசனை !! உங்களின் கனிவான கவனத்திற்கு !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் 



என் உயிரினும் மேலான அன்புத் 



தமிழ் நெஞ்சங்களே !! 



அனைவருக்கும் எனது இனிய 



இதயம் கனிந்த வணக்கங்கள் !!         



இப்பவும் இந்தக் கட்டுரைக்கு நான் 



என்ன தலைப்பு தேர்ந்தெடுத்து 



எழுதுவது என்று 



எண்ணிக்கொண்டிருக்கும் 



வேளையில் " முரசு " 



தொலைக்காட்சியில் " துக்ளக் " 



பத்திரிக்கை ஆசிரியர் திரு சோ. 



இராமசாமி நடித்து வெளிவந்த 



பிரஸ்டீஜ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த 



"முகம்மது பின் துக்ளக் " என்ற 



மாபெரும் வெற்றிக் காவியம். 



தாமும் அதில் நடித்து டைரக்சன்   



"கற்றுக் கொள்ள முயற்சி " என்று 



டைட்டிலில் பெயர் பதித்து திரு 



"சோ" அவர்கள் மிகவும் சிறப்பாக 



நடித்து இயக்கிய அந்தப்படத்தில் 



இருந்து ஒரு அந்தக் காலத்தில் 



மிகவும் பிரசித்திபெற்ற பாடல் 



ஒன்று ஒலி/ஒளி பரப்பு 



செய்திருந்தனர். அது என்ன பாடல் 



என்றால், அந்தப் பாடல் இதுதான் 



அன்பர்களே !!                                               



காவியக்கவிஞர் வாலி அவர்கள் 



இந்தப் படத்தில் அனைத்துப் 



பாடல்களையும் எழுதி இருப்பார். 



இசை அமைப்பு மெல்லிசை மன்னர் 



திரு M.S.விஸ்வநாதன் அவர்கள். 



இதில் வந்த டைட்டில் பாடல்தான் 



அந்தப் பாடலில் வருகின்ற ஒரு 



பாரா தான் என்னை இந்தக் 



கட்டுரையை எழுதிடத் தூண்டியது 



என்றால் அது மிகையான சொல் 



அல்லவே  அல்ல.  இப்போது 



பாடலைப் பார்ப்போமா நேயர்களே ? 



இந்தப் பாடலை இந்தப் படத்திற்கு 



இசை அமைத்த மெல்லிசை மன்னர்   


           திரு M.S.விஸ்வநாதன் 



அவர்களே பாடியும் இருப்பார் 



அன்பர்களே !!                       



நீ இல்லாத இடமே இல்லை !!             


நீதானே உலகின் எல்லை !!                   


அல்லா !! அல்லா!!யா அல்லா !! 


அல்லா !!                                       


                                                 (நீ இல்லாத )   


நிலம் வெளுக்க நீர்தான் உண்டு!!   


நீர் வெளுக்க மீன்தான் உண்டு !!       


மனம் வெளுக்க எதுதான் உண்டு ? 


நபியே உன் வேதம் உண்டு !!                 


அல்லா !! அல்லா !!யா அல்லா !!


அல்லா!!                                                               

                                    (நீ இல்லாத இடமே) 


உடலுக்கு ஒன்பது வாசல் !!                   


மனதுக்கு எண்பது வாசல் !!                   


உயிருக்கு உயிராய்க் காணும் !!           


ஒரு வாசல் !!  பள்ளி வாசல் !!               


அல்லா !! அல்லா !! யா அல்லா !!       


அல்லா !!                                                           


                                  ( நீ இல்லாத இடமே ) 


இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்!!   


இல்லார்க்கு எதுதான் சொந்தம் ?     


நல்லார்க்கும்பொல்லார்க்கெல்லாம்


நாயகமே நீயே சொந்தம் !! அல்லா !! 


அல்லா !! யா !! அல்லா !!                         


                                    (நீ இல்லாத இடமே ) 


அன்பர்களே !!                                               



இந்தப் பாடலில் இரண்டாவது பாரா, 



அதில் உள்ள வரிகளை, சற்று உற்று 



நோக்கி, கவனித்தீர்கள் என்றால் 



அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது 



என்றால் உடலுக்கு ஒன்பது வாசல் 



மனசுக்கு எண்பது வாசல் என்று 



வரிகள் வரும். அந்த ஒன்பது 



வாசலையும் நாம் ஒழுங்காக,சரிவர 



ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து 



வேளைகள் தண்ணீரைக் கொண்டு 



சுத்தம்செய்து வந்தோமேயானால் 



இந்த ஒரு பழக்கம் மட்டுமே 



மக்களுக்கு போதுமானது. இதை 



நாம் எப்படி கடைப்பிடிக்க வேண்டும் 



என்றால், நான் வரிசைக்கிரமமாக 



அதனை இங்கே சுட்டிக் காட்டிட 



கடமைப் பட்டு இருக்கிறேன்.  



1)   முதலில் நாம் படுக்கையைவிட்டு 



பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப் 



படும் அதிகாலை 4 மணி முதல் 4.3௦ 


மணிக்குள்ளாக எழுந்து முதலில் 



முழங்கால்கள் தொடங்கி பாதம் 



வரையிலும், முழங்கைகள் 



தொடங்கி உள்ளங்கைகள் 



வரையிலும், பிறகுகண்கள்,மூக்கின் 



இரு துவாரங்கள், வாயை நன்கு 



சுத்தம் செய்தல், இரண்டு 



காதுகளையும் சுத்தம் செய்து அதன் 



பிறகு நமது சிறுநீர் வெளியேறும் 



இடம், பிறகு, குதம் என்று 



சொல்லப்படும் உடலின் கழிவுப் 



பொருள்  வெளிஏற்றும் வாசல் 



(இவை அத்தனையையும் கூட்டிப் 



பாருங்கள் அன்பர்களே மொத்தம் 



ஒன்பது வாசல்கள் வரும் ) 



இவைகளை ஒரு நாளைக்கு ஐந்து 



வேளைகள் சுத்தமான நீரில் கழுவி 



வந்தாலே போதுமானது. உங்களது 



உடலில் தற்போது ஏதாவது 



நோய்கள் இருந்தாலும் சரி அல்லது 



எந்த நோயும் எதிர்காலத்தில் வந்து 



நம்ம்மை தாக்காத அளவிற்கு 



நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியைஇந்த 



" சுத்தம் " நமக்குத் தருகிறது.  



இதனை நாம் கீழ்க்கண்ட கால 



நேரங்களில் செய்து வந்தால் நமக்கு 



நன்மை பயக்கும்.                                         


1)   அதிகாலை பிரம்ம முகூர்த்த 


நேரம் 4.௦௦ மணி முதல் 4.3௦ 


மணிக்குள்ளாக                                             


2)   நண்பகல் 1.௦௦ மணி முதல் 1.3௦ 


க்குள்ளாக                                                       


 3)  மாலை 4.3௦ To 4.45 மணிக்குள்         


4)   இரவு துவங்கும் நேரம் 6.15 To 6.3௦ 


மணிக்குள்.                                                    


5)    இரவு 8.00 To 8.30 மணிக்குள்ளாக   



ஆக இந்த ஐந்து வேளையும் 



தவறாமல் சுத்தம் செய்து வர, 



எந்தவிதமான நோய்,நொடிகளும் 



வராமல் நாம் நூறாண்டுகள் வரை 



வாழ்ந்திடலாம்.(இந்த பழக்கத்தைத் 



தான் நமது இஸ்லாமிய நண்பர்கள்  



நாள்தவறாமல்,ஐந்துவேளைகளும் 



செய்து வருகின்றார்கள் 



(கைகால்கள் மற்றும் ஏனைய 



ஒன்பது வாசல்களையும் 



"உதுவெடுப்பது " என்னும் மதத்தின் 



கட்டளைப்படி செய்து எல்லாம் 



வல்ல இறைவன் எல்லாம் வல்ல 



அல்லாவைத் தொழுது வருவதால் 



அவர்கள் தேக சுகத்துடனும், 



ஆரோக்கியத்துடனும்எந்தவிதமான 



நோய்நொடி தாக்குதல்கள் 



எதுவுமின்றி வாழ்கிறார்கள் என்பது 



இங்கே குறிபிடத்தக்கது.)                         



கட்டுரையை நான் நிறைவு 



செய்திடும் நேரம் வந்து விட்டது 



அன்பர்களே !!  நல்ல புத்திமதிகள் 



நான் மேலே உங்களுக்கு தந்தது. 



கடைப் பிடித்து மேன்மைபெற்று 



வாழ்ந்திட எல்லாம் வல்ல 



இறைவன் அவனின் திருவருள் 



பெற்று நூறாண்டுகள் வாழ்வாங்கு 



வாழ்ந்திட வேணுமாய்க் கேட்டுக் 



கொண்டு நன்றி பாராட்டி விடை 



பெறுகின்றேன்.  வணக்கம் !!                                         



அன்பன். மதுரை T.R.பாலு. 

கெட்டவழியில் பணம் சம்பாதித்தவர் நிலையும் !! அந்தப் பணம் போகும் வழியும் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!   


உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 


எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே!! 



ஓடி ஓடி உழைக்கணும் !!                           


ஊருக்கெல்லாம் கொடுக்கணும்!!       


ஆடிப்பாடி நடக்கணும் !!                     


அன்பைநாளும் வளர்க்கணும்!!           



பாடிச் சென்றார் கவிஞர் ஒருவர்.       


பாரினில்இதுபோல் நடப்பதுண்டோ?


கூடியின்பம்தன்னைத்தேடாமல்     


குளிரும்போதுயார் தனித்திருப்பார்? 




மாடிவீடோ ?      மாட்டுத்தொழுவோ? 


மலிந்தேமயங்குவார்மாதுமடியில்!!


நல்லவழியில்உழைத்துப்பார்த்தேன்


நாலு காசுகையில் சேரல்லையே!!     



புல்லுன்னுசொல்லிபசலைவித்தேன் 

புயலெனப்பணமிங்கேசேந்ததய்யா!! 


கெட்டவழியில்பணம்கோடிகோடியா


கொட்டிசேத்தேன்நான்கோணியிலே 



பட்டிதொட்டிஎங்கும்சுகங்கண்டேன் 


கெட்டுச்சீரழிந்துடல்பட்டுவிட்டேன்!!


இம்மையில் அறஞ்செய்யாதோர்     


திரவியம்சிதறவேண்டிதில்லைபதி 


நம்மையும் கள்ளுஞ்சூதும் இங்கே 


நான்முகன் படைத்து விட்டான் !!       



அன்பர்களே !!                                                



பாடல் இத்துடன் நிறைவு 



பெறுகின்றது. நேர்மையான 



சம்பாத்தியம் நேர்மையான 



செலவுக்கு வழி செய்யும். ஆனால் 



அதேநேரம் முறைகெட்டவழியில் 



வரும் வருமானம், முறைகெட்ட 



வகையிலான  செலவுக்குத்தான்   



போய்ச்சேரும். இதை நாம் உணர்ந்து 



அனைவரும் நேர்மையான 



முறையில் உழைத்து நிம்மதியாகச் 



செலவு செய்து அமைதியுடன் 



வாழ்ந்திடுவோம் என்று 



சூளுரைப்போம். 



நன்றி !! வணக்கம் !!                                    



அன்புடன் மதுரை T.R.பாலு.

Thursday 19 December 2013

ஒற்றுமையின் அவசியத்தினை வலியுறுத்திய கவியரசரின் காவிய வரிகள்.!! உங்களின் கனிவான கவனத்திற்கு !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு !!



உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் 



எனது உயிரினும் மேலான அன்புத் 



தமிழ் உடன்பிறப்புகளே !! 



அனைவருக்கும் எனதுஉளங்கனிந்த 



காலை வணக்கங்கள் உரித்தாகுக!! 



அன்பு உள்ளங்களே !!                               



இன்றைய தினம் இந்தக்கட்டுரைக்கு 



நான் தலைப்பாகத் தேர்ந்தெடுத்த 



விஷயம் " ஒற்றுமை " ஆகும்.             



மகாகவி பாரதியார் இந்த 



ஒற்றுமையைப்பற்றி என்ன பாடல்  



பாடினார் என்று கேட்டால் :-                     


ஒன்று பட்டால் உண்டு வாழ்வு !!           

                                                           நம்மில் 


ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும்     

                                                          தாழ்வே!! 


நன்றிது தேர்ந்திடல் வேண்டும் --         

                                                                  இந்த 


ஞானம் வந்தாற்பின் நமக்கெது             

                                                     வேண்டும்!!



அன்பர்களே !!                                                 


 

                    " ஒ  ற்  று  மை " !!                         



இந்த ஒரு வார்த்தையில்தான் 



ஒளிந்து கிடக்கிறது எவ்வளவு 



பெரிய உணர்வு பூர்வமான 



உண்மை. இந்த உணர்வுகள் நம் 



ஒவ்வொருவரிடமும் இல்லாத 



காரணதால்தான் இன்று இந்த 



நாட்டினில் எவ்வளவு, எவ்வளவு, 



பிரச்சினைகள்,எத்தனை, எத்தனை 



சிக்கல்கள் உருவாகி அதன் 



விளைவாக நம்நாட்டின் 



ஒன்றிணைந்த பல மாநிலங்களில் 



மண்ணுக்கு சண்டை !!   மொழிக்கு 



சண்டை !!    தண்ணீருக்கு சண்டை !! 



தன்னிகரில்லாத  மின்சாரத்திற்கு 



சண்டை !! சண்டை !! 



எதற்கெடுத்தாலும் சண்டை !!   



சச்சரவு !!  போராட்டம் !! 



முழுஅடைப்பு !! தடியடி !! 



கண்ணீர்புகை குண்டுகள் வீச்சு !!   



துப்பாக்கிச் சூடு !! கலவரம் !! இரயில் 



மறியல் !! என சங்கிலித் தொடர்என  



இது போன்ற நிகழ்வுகள் !!  இதற்கு 



எல்லாம் என்ன மூல காரணம் ? 



இவைஎல்லாமேஒற்றுமையின்மை 



என்ற தாய் ஈன்றெடுத்த பல்வேறு 



வகையான, நிறங்களானா 



பிள்ளைகள்தானன்றி வேறு என்ன 



நான் சொல்வது ?                                   



ஆக இதுபோன்ற அத்தனை 



நிகழ்வுகளும் இந்த பூமிதனில் 



உருவாகி அரங்கேறுவதற்கு 



காரணமே  " ஒற்றுமை "  என்கின்ற 



அந்த உணர்வுகள் நம்நாட்டு 



மக்களிடையே இருந்து 



விடைபெற்றுச் சென்று விட்டதன் 



எதிரொலியே அன்றி வேறு எதுவும் 



இல்லை அன்பர்களே !!   



இந்த வகையான ஒற்றுமையின் 



அவசியத்தை வலியுறுத்திய 



கவியரசரின் காவிய வரிகளை 



நினைவு படுத்திய பாடல் பல திரைப் 



படங்களில் இடம் பெற்று 



இருந்தாலும் கூட, அவை 



அத்தனையிலும் நான் மிக 



முக்கியமானதொரு பாடலாகக் 



குறிப்பிடவிரும்புவது,யாதெனில், 



"பாகப்பிரிவினை" என்ற 



திரைப்படத்தில் வரும் இந்த 



பாடலை மட்டுமே !! இப்போது 



பாடலைப் பாருங்கள் அன்பர்களே!!   


தொகையறா :-


மந்தரையின் போதனையால் மனம்  

                                       மாறிக் கைகேயி !!

மஞ்சள் குங்குமம் இழந்தாள் !!           


வஞ்சக  சகுனியின் சேர்க்கையால்!!   

                                             கௌரவர்கள் !! 


 பஞ்ச பாண்டவரைப் பகைத்து               


                                                   அழிந்தார் !! 


சிந்தனையில் இதையெல்லாம் 


சிறிதேனும் கொள்ளாமல் மனிதர்      

                                                      எல்லாம் !! 


மந்த மதியால் அறிவு மயங்கி 


மனம்போனபடி நடக்கலாமோ ?         



சரணம் :-



ஒற்றுமையாய் வாழ்வதாலே !!              

                         உண்டு நன்மையே !! 


வேற்றுமையை வளர்ப்பதனாலே !!   


                       விளையும் தீமையே !!       


                                           (ஒற்றுமையாய் )



உணர்வோடு ஒன்றியே !!



உருவாகும் பாசமே !!                                  



அணையாத தீபமாய் !!                       



சுடர் என்றும் வீசுமே !!       



உணர்வோடு   ஒன்றியே !!                     



உருவாகும் பாசமே !!                                 



அணையாத தீபமாய் !!                               



சுடர் என்றும் வீசுமே !!                



நெஞ்சில் உண்டான அன்பையே !!     



துண்டாடி வம்பையே !!                    



உறவாகத்  தந்திடும்  சிலர்                       



சொல்லை நம்பியே !!                                 



வேற்றுமையை வளர்ப்பதினாலே !!   


                              விளையும் தீமையே !! 


ஒற்றுமையாய் வாழ்வதாலே !!       


                                  உண்டு நன்மையே !! 


வேற்றுமையை வளர்ப்பதனாலே !! 



                              விளையும் தீமையே !!


                                       (ஒற்றுமையாய் )             


துணையின்றி வெண்புறா !!               


தனியாக வந்ததேன் ?                               


வனவேடன் வீசிய வலைதன்னில்       

                                                வீழ்ந்ததேன் ? 


இனம் யாவும் சேர்ந்துதான்                     


அதை மீட்டுச் சென்றதே !!                   


கதையான போதிலும்  !!                         


கருத்துள்ள பாடமே !!                            



வேற்றுமையை வளர்ப்பதனாலே 



விளையும் தீமையே !!             



ஒற்றுமையாய் வாழ்வதாலே 


                                  உண்டு நன்மையே !!


வேற்றுமையை வளர்ப்பதினாலே !!   


                              விளையும் தீமையே !! 


ஒற்றுமையாய் வாழ்வதாலே !!             

                                  உண்டு நன்மையே !! 


 வேற்றுமையை வளர்ப்பதினாலே !!   


                               விளையும் தீமையே !! 



எனவே அன்பர்களே  !!                               



நாம் இதுவரை வாழ்ந்திருந்த 



காலங்களில்   எப்படி எப்படியோ !! 



இனிமேலும் நாம் வாழ்ந்திட 



இருக்கின்ற காலங்களிலாவது நாம் 



அனைவரும் நம்முடன் சேர்ந்து   



இருக்கும் உண்மையான 



உறவுகளோடும் நண்பர்களோடும் 



எந்தவிதமான பகை உணர்வுகள் 



ஏதுமில்லாமல், இந்த பூமிக்கே ஒரு 



உதாரணம் மிக நிறைந்த 



நிகழ்வுகளாக நாம் அனைவரும் 



சண்டை சச்சரவுகள் ஏதுமின்றி 



வாழ்ந்திருப்போம் என்னும் மன 



உறுதிப்பாடினை இன்றுமுதல் நாம் 



அனைவரும் மேற்கொள்வோமாக !! 



என்று இந்த அமைதி தவழும் 



காலைவேளையில் வீசிடும் 



தென்றல் காற்றின்  தூய்மை மனம் 



வீசிடும் அந்தத் தென்றலின் மீதுநாம் 



அனைவரும் சத்தியம் 



செய்திடுவோம் நம் இனமான 



உணர்வுகளின்  வலிமைக்குப் 



பெருமை சேர்த்திடுவோம் !! என்று 



சொல்லி எனது கட்டுரையை நான் 



இங்கே நிறைவு செய்கிறேன் !!           



நன்றி !! வணக்கம் !!                                     




அன்புடன் !! மதுரை T.R. பாலு M.A.S.,