Friday 28 February 2014
ஆண்களில் யாரெல்லாம் மனைவிக்கு பயப்படுவதுபோல நடித்து வாழ்வபர்கள் ?
அல்லாஹூ அக்பர் !!
வ ரஹ்மத்துல்லாயு
தாலா பரக்காத்துஹூ !!
அன்புள்ள தோழர்களே !!
சமாதானமும் உண்டாகட்டும்.
அருளாளனும் அளவற்ற கொடையாளனும்
இனத்தின் வம்ச வாரிசுகளாகத்தான் நாம்
வாழ்ந்துவருகின்றோம் என்ற
கிடையாது.
பெண்களுக்கு (அவரவர்களது
விஷயத்திற்கு யாவரும் பயம்
சந்தேகத்திற்கு இடமளிப்பதாகவே
அதுவே உண்மையும் ஆகும்.
அவமரியாதை தருகிறானோ அவன்.
துரோகம் இழைக்கிறானோ அவன்.
உறவு வைத்துக்கொண்டு திரிகிறானோ அவன்.
நடத்திக்கொண்டு இருக்கிறானோ அவன்
நடத்திக்கொண்டு இருக்கிறானோ அவன்.
நமக்கு எடுத்துக் கூறி வருகின்றன.
தளபதிகள் இவர்கள் மட்டுமே !!
பயனுற நாம் அனைவரும் வாழ்ந்திடுவோம்.
நன்றி !! வணக்கம் !!
Thursday 27 February 2014
எப்போதெல்லாம் ஒரு ஆணுக்கு கடுப்பு ( கோபம் ) வரும் ?
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
என் உயிரினும் மேலான அன்புத்
தமிழ் உடன்பிறப்புகளே !!
உங்கள் அனைவருக்கும் எனது
இதயம் கனிந்த வாழ்த்துக்களோடு
கூடிய வணக்கங்களை உரித்தாக்கிக்
கொள்கிறேன்.
அன்பர்களே !!
இறைவனால் படைக்கப்பட்ட மனித
இனங்களில் இரு பிரிவுகள் அது
ஆண் என்றும் பெண் என்றும் உள்ளது.
\
இதில் பொறுமையின் சிகரமாகவே
அந்தக்காலத்தில் வாழ்ந்த பெண்கள்
இருந்திருக்கிறார்கள். ஆனால் இன்று
நிலைமை அப்படி இல்லை. ஏன் எனில்
அந்தக்கால பெண்கள் வீட்டைப் பார்த்துக்
கொண்டு உண்மையான இல்லத்தரசிகளாக
வாழ்ந்து இருந்தனர். ஆனால் இன்று
பெண்களும் (மனைவி) வேலைக்குச்
சென்று பொருள் ஈட்டினால் மட்டுமே
குடும்பச்செலவுகளை தாங்கிட முடியும்
என்ற நிலைமைக்கு பெண்கள் வந்ததற்கு
காரணம், விண்ணை முட்டிடும் அளவிற்குச்
சென்றுவிட்ட விலைவாசி மட்டும்தான்
என்று சமூகத்தில் சொல்லப்பட்டு
இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள என்னைப்
போன்ற அந்தக்காலப் பெருசுகளால்
முடியவில்லை என்பதே உண்மை.
சரி அன்பர்களே நிலைமை இப்படி மாறி
விட்ட பின்பு இந்த ஆண் இனத்தினால்
முன்பு போல மனைவியை விரட்ட,
அவளை வேலை செய்யச்சொல்ல,
கடிந்து கொள்ள, கோபப்பட முன்புபோல்
இயலவில்லை. காரணம் அவளும் வேலைக்குச்
செல்வதினால். சம்பாதித்து பணம் குடும்பச்
செலவுகளுக்கு தருவதினால்.எனவே தனது
உள்ளத்து உணர்ச்சிகளை இவன் அடக்கி
வாசிக்கக்கற்றுகொண்டான் என்றால் அதற்கு
காரணம் என்ன என்றால் இதுதான்.
காலம் இந்த ஆணுக்குத் தந்த பாடம் என்றும்
சொல்லலாம்.
அன்பர்களே !!நாம் இப்போது கட்டுரையின்
தலைப்பிர்குள்ளாகச் செல்வோம். இங்கே
ஆண்மகனால் உள்ளத்தில் அடக்கி வைக்கப்
பட்ட அந்த கோப,தாப, உணர்ச்சிகள் சில
நேரம் அவனையும் மீறி, எரிமலை வெடித்தது
போல பல சந்தர்ப்பங்களில் சிதறுவதையும்
நம்மால் பார்த்திட முடிகிறது. அவைகளை
நான் இங்கே வரிசைப்படுத்திச் சொல்லிடக்
கடமைப்பட்டுள்ளேன்.
1) அதிகாலையில் 5 மணிக்கு எழுப்பிடச்
சொல்லிவிட்டு இரவு படுத்த கணவன்,
மனைவி நான் மறந்துட்டேங்க என்று
காலை 7 மணிக்கு எழுப்பி சொல்லும்போது
2) சரி இன்னைக்கு என்ன டிபன் என்று கேட்டு
சாப்பிடும் மேசை முன்பாக அமர இந்த ஆண்
எத்தனிக்கும் வேளையில், மனைவி சாரிங்க,
நேத்தைக்கு இட்லி மாவு அரைக்க மறந்து
போய்விட்டேங்க என்று சொல்லும்போது
3) அவசர அவசரமாக நகரப் பேருந்திற்குள்
சென்ற இவன் பயணச் சீட்டிற்காக 5௦ ரூபாய்
நோட்டை எடுத்து வண்டி நடத்துனர் வசம்
தந்தபோது அவர், ஏன்யா சில்லறை மாத்து-
-வதற்கு என்றே பயணம் செய்ய வந்துடீங்களா
என்று கோபத்துடன் கேட்கும்போது
4) அப்படி 5௦ ரூபாய்க்கு பத்து ரூபாய் டிக்கெட்
காசுபோக மீதி கேட்கும்போது நடத்துனர்
என்ன ? இறங்கப்போறீன்களா? நான் என்ன
தராம இப்படியே ஓடியா போயிருவேன்
கொஞ்சம் பொறுங்க என வெறுப்போடு
சொல்லும்போது
5) வள்ளுவர் கோட்டத்தில் இறங்க வேண்டும்
என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே
ஓட்டுனர் அடுத்த நிறுத்தத்தில் வண்டியை
நிறுத்தும்போது
6) அலுவலகத்திற்குள் செல்ல எத்தனிக்கும்
போது போன மாசமே மேலாளரிடம் வாங்கிய
கைமாத்து பணத்தை கேட்டு அவர் வழியை
மறைத்து கடனைக் கேட்கும்போது
7) பசி தாங்கிட முடியாமல் ஆபீஸ் கேண்டீனில்
வடை காபி சாப்பிடும்போது வடையில் உப்பு
இல்லாமலும், காபியில் சக்கரை இல்லாமலும்
அவன் தரும்போது அதனை ஒரு வாய் சாப்பிட்டு
காபி குடிக்கும்போது
8) அலுவலக வேலையில் நாம் செய்த தவறை
மேலதிகாரி எப்பப்பார்த்தாலும் சுட்டிக் காட்டும்
போது நமக்கு வருவது
9) மாதக் கடைசி,மதியஉணவுஇடைவேளையின்
போது மனைவி போனில் கூப்பிட்டு, ஏங்க..
நாளைக்கு வடிக்க அரிசி இல்லங்க..மறக்காமல்
வாங்கிட்டு வந்துருங்கோ என்று
சொல்லும்போது
1௦) அலுவலகம் முடிந்து அரிசி வாங்க பக்கத்து
சீட் கிளார்க்கிட்டே ஒரு நூறு ரூபாய் கைமாத்து
கேட்டபோது ஐம்பது தான் இருக்குது வேணுமா
இல்ல வேணாமா என கேட்கும்போது
11) டாஸ்மாக் கடைக்குச் செல்லும்போது
நாம் கேட்கும் சிக்னேச்சர் விஸ்கி இல்லை
R.C.தான் இருக்குது அதுவும் ஹாப் இல்லை
வேணா ரெண்டு குவார்ட்டர் தரவா என கடை
விற்பனையாளர் கேட்கும்போது
12) வீட்டிற்கு வந்து குளித்து முடித்து சாமி
கும்பிட்டபின் சேரில் அமர்ந்து கிளாசில் ஒரு
கட்டிங் ஊற்றி சொடவைக் காணமல் எங்கே
என மனைவியிடம் கேட்கும்போது அவ அம்மா
செரிமானம் ஆகாம நெஞ்சுகறிச்சல் எடுத்ததால்
கொடுத்துவிட்டதாக பொண்டாட்டி கையைப்
பிசைஞ்சுகொண்டே சொல்லும்போது
13) அதன் பின்னர் விஸ்கி கிளாசைக் கையில்
எடுத்து உதட்டின் அருகே கொண்டுசென்று
அதை உறிஞ்சிக்குடிக்க முற்படும்போது
மனைவியின் சித்தப்பா குடும்பத்துடன் வந்து
வீட்டுக்கதவைத் தட்டிடும்போது
14) அலுவலக வேலை நிமித்தமாக 15 நாட்கள்
வெளியூர் சென்றுவிட்டு இரவு 12 மணியளவில்
வீட்டிற்கு வந்து பார்த்தால், அங்கே தனது
மனைவியின் மாமா குடும்பத்தோடு அங்கே
பிரசன்னமாகி இருப்பதும் மனைவி ப்ளீஸ்
கோவிச்சுக்காதீங்க என்று கெஞ்சும்போது
15) ஒரு வழியாக பத்துநாட்கள் தங்கியிருந்த
பின்பு கும்பகோணம் தனது ஊருக்கு கிளம்ப
நடுநிசியில் மனைவியை எழுப்பி கட்டிலில்
அமரவைத்த வேளையில் கடைக்குட்டி
பையன் அம்மா வவுத்த வலிக்குது என்று
சொல்லி அழுதிட, அவனை டாக்டர்கிட்டே
காண்பிச்சுட்டு வீடு திரும்பி பாத்தால் அங்கே
மனைவி ஆழ்ந்த நித்திரையில் இருந்ததை
பார்க்கும்போது கணவனுக்கு சட் என்று
வருவது.
16) இதன்பின்பு ஒருவாரம் கழித்து நடுநிசி
மனைவியோடு இணைந்திட கணவன் எண்ணி
மனைவியோடு உறவுகொள்ள ஆரம்பிக்கும்
வேளையில் அவளது உள்பாவாடை நாடா
கடுமுடிச்சு விழுந்தபோது (மனைவிக்கு இடை
என்று ஒன்று இருப்பவர்களுக்கு மட்டும்)
அன்பர்களே !! இதுபோல ஒரு ஆண்மகன்
வாழ்க்கையில் இன்னும் கடுப்பாகும் சூழல்
விஷயங்கள் எவ்வ்வளவோ உள்ளது.அதை
எல்லாம் எழுதிட நினைத்தால் அதற்கு என்
முழுஆயுட்காலமும் போதவே போதாது.
அதனால் நான் இத்துடன் முடித்துக்கொள்கிறேன் .
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
அஷ்டாவதானி, தசாவதானி என்றால் அதன் உட்பொருள் உங்களுக்குத் தெரியுமா ?
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுதும் வாழ்ந்து வரும் என்
உயிரினும் மேலான அன்புத்தமிழ்
உடன்பிறப்புகளே!! உங்கள் அனைவருக்கும்
என் நெஞ்சார்ந்த வணக்கம்.
அன்பர்களே !!
நாம் அனைவரும் இன்றையதினம்
ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டு
இருக்கும் போது அஷ்டாவதானி,
தசாவதானி, என்றெல்லாம் பேசப்
படுவதை நாம் நமது காதாரக் கேட்டுக்கொண்டு
இருக்கிறோம். ஆனால் நம்மில் எத்தனை
பேர்களுக்கு அதன் உட்பொருள் தெரிந்து
இருக்கிறது என்றால் அதுதான் இல்லை.
இல்லை. இல்லவே. இல்லை.அன்பர்களே !!
எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
சமஸ்க்ருதத்தில், அஷ்டம் என்றால்
அதற்கு அர்த்தம் எட்டு என்று பொருள்.
அதுபோலவே தசம் என்று சொன்னால்
அதன் பொருள் பத்து என்பதே ஆகும்.
ஆன்றோர்களும் அறிவிற்சிறந்த நல்
சான்றோர்களும் நிறைந்திருக்கும் ஓர்
சபைதனிலே, ஒருவரை இவர் எந்த
அளவிற்கு நினைவு ஆற்றல் கொண்டவர்
என்ற பரீட்சை நடத்துகின்ற பொழுது
அவரை நடுவில் நிற்கவைத்துக்கொண்டு
எட்டு திக்குகளிலும் இருந்து அவரிடம்
கேட்கப்படும் கேள்விகளை ஒவ்வொன்றாக
கேட்டு தாம் நினைவினில் வைத்து அதன்பின்
அவைகளுக்கு வரிசைக்கிரமமாக யார்
மிகமிகத் தெளிவாக பதில்தந்து அந்த
பதிலும் அவையோர் பெருமக்களால்
ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் அந்த
மிகச் சரியாக பதில் தந்து பரீட்சையில்
எவர் ஒருவர் தேர்ச்சி பெறுகின்றாரோ
அவரே " அஷ்டாவதானி " என்னும் நல்லதோர்
பட்டத்தை வென்றவர் ஆகின்றார்.
இதேபோலத்தான் தசாவதானியும்.
ஒருவரை நடுநாயகமாக நிற்கவைத்து
அன்னாரைச் சுற்றிலும் பத்து பேர்கள்
அவர்கள் அறிஞர் பெருமக்கள், சம்பந்தப்பட்ட
நபரிடம் அந்த பத்துப்பேரும் கேட்கின்ற
கேள்விகளை மனமதில் நன்றாக பதியம்
செய்து வைத்துக்கொண்டு வரிசைக்கிரமாமாக
எவர் ஒருவர் மிகச் சரியாக, பிழைகள்
ஏதுமின்றி பதில் தருகிறாரோ, அந்தப்
பதிலும் ஆன்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்
பட்ஷத்தில் சம்பந்தப்பட்ட பதில் சொன்ன
அந்த நபரே " தசாவதானி " என்று அழைக்கப்-
-படுகின்றார்.
அன்பர்களே இந்த விபரம் எனது 12ம் வயதில்
நான் எட்டாவது வகுப்பு பயிலும்பொழுது எனது
சரித்திர மற்றும் பூகோள வகுப்பின் ஆசிரியர்
மென்மை தங்கிய கானாடுகாத்தான் முதுகலை
பட்டம் வென்றவர் திரு மெய்யப்பன் அவர்கள்
கூறிய கருத்து இது.
இன்னும் இதுபோல பல்வேறு அறிவுபூர்வம்
நிறைந்த கருத்துக்கள், அன்பர்களே !! நமது
"எண்ணத்தில் தோன்றியவை " எனும் இந்த
வலைதலத்தினில் வெளிவரக் காத்துக்கொண்டு
இருக்கிறது. படித்து உங்களின் பொதுஅறிவினை
நீங்கள் அனைவரும் வளர்த்துக்கொள்ள
வேணுமாய் வேண்டிவிரும்பிக்
கேட்டுக்கொண்டு
விடைபெறுகின்றேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
Wednesday 26 February 2014
புராணங்கள் மக்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டதா அல்லது கெட்ட வழி செல்வதற்கா ?
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே!!
அனைவருக்கும் வணக்கம்!!
இந்து மதத்தைப்பொறுத்தவரையில்
முக்கிய புராணங்கள் என்று நாம்
கருதுவது இராமாயணம் மற்றும்
மகாபாரதம் ஆகும். இந்த இரண்டு
புராணங்களும் மக்களை நல்வழிப்
படுத்த உருவாக்கப்பட்டதா ? அல்லது
கெட்ட வழி செல்வதற்கா ? இதுதான்
இன்றைய
"எண்ணத்தில்தோன்றியவை"
கட்டுரை வலைதளத்தின் மூலம்
நாம் மக்கள் முன்பாக எழுப்பியுள்ள
கேள்வி.
இராமாயணத்தைஎடுத்துக்கொண்டால்
அது நமக்கு கூறிடும் வேதாந்தம்என்ன
என்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்று
ஸ்ரீ இராமபிரான் வாழ்ந்தார் என்பதுஓர்
புறம்இருந்தாலும்மாற்றான்இலங்கை
வேந்தன் இராவணின்சிறையில்வதை
பட்டு வந்த தன் மனையாள் சீதாதேவி
உத்தமியே என்பது தெரிந்தாலும் கூட
ஊரில் யாரோ எவரோ ஒருவர்
சொன்னார் என்பதற்காக அவளை
அந்த பத்தினித் தெய்வத்தைஊர்அறிய
உலகறிய தீக்குளிக்க வைத்த கேட்டை
நாம் என்ன சொல்வது !! இது கூட ஒரு
பெரிய விஷயம் அல்ல. மாற்றான்
ஒருவன் மனைவியை வேறு ஒரு
ஆடவன் அபகரித்துசெல்வது
என்பது எந்த வகையில் உரிய
செயலாகும் ? இது முறையா? இது
தகுமா ? இது தர்மம்தானா ? நான்
கேட்கிறேன் கேள்வி. இந்த பாலியல்
வன்முறை இன்று உலகிலே குறிப்பாக
நம் நாட்டினில் இன்று தலைவிரித்து
ஆடுவதற்கு மூல காரணம்/உரைமோர்
இந்த சம்பவம் என்று குறிப்பிடலாமா ?
இது போல மகாபாரதக் கதையில் ஒரு
பெண்(திரவ்பதை)ஐந்துஆண்களுக்கு
மனைவியாகச் செயல்படுவது என்பது
எப்படிநடைமுறைசாத்தியம்ஆகும்?
அப்படியே இருந்தாலும் இதுதர்மமான
செயல் ஆகுமா. நமது பண்பாடு நமது
கலாச்சாரம் நமக்குபோதித்துஇருப்பது
ஒருவனுக்கு ஒருத்திதான். இன்றுஒரு
பெண்பலஆண்களுடன்உறவுகொண்டு
அங்கொன்றும்இங்கொன்றுமாக
வாழ்ந்து
வருகிறார்கள் என்றால் இந்தவழி :-
(அந்தக்காலத்தில் சிவாஜி,பாலாஜி
நடித்து வெளிவந்த படம்தான்
படித்தால் மட்டும் போதுமா என்றபடம்
அதில் மறைந்த TMS அவர்கள்
ஒரு பாடல் பாடிடுவார்.
அண்ணன் காட்டிய வழியம்மா இது
அன்பால் விளைந்த பழியம்மா
என்று ஒரு பாடல் அந்தப்படத்தில்
இடம் பெறும். இப்போது நான்
அந்தப்பாடலை உல்ட்டா செய்து
எழுதுகிறேன். இதோ :-
திரௌபதை காட்டிய வழியம்மா !!இது
திமிரால் விளைந்த விளைவம்மா !!
பெண்மை இங்கே இல்லையம்மா இது
ஆண்களைகெடுத்திடும்முறையம்மா!!
என்று பாட்டு பாட வேண்டியதுதான்.
அட...என்னங்க...நான்...சொல்றது...?
சரிதானே!!..ஏனுங்க..நீங்க..பதில்
சொல்லுங்க ?
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
Sunday 23 February 2014
ஆண்கள் மனசே அப்படித்தான் !! அது அடிக்கடி மாறும் இப்படித்தான் !!
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
தாய்தாய்மொழியைப்பழித்தவனை
தாய் தடுத்தாலும் விடமாட்டேன்.
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
அன்புள்ள ஆண்குலத்தின் அருமை
சிங்கங்களே !! சிறுத்தைகளே !! சிறு
சிறுநரிகளே !!
உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
பொதுவாக தமிழில் ஒரு
சொல்வழக்கு ஒன்று உண்டு அது
என்ன என்றால் :-
கிளிபோல பெண்டாட்டி
இருந்தாலும் குரங்கு போல
வைப்பாட்டி வைத்துக்கொள்ளுமாம்
இந்த கேடு கெட்டஆண்கள் இனம்.
என்று சொல்வார்கள் பெரியோர்கள்.
ஆனால் ஒன்று, இந்தப் பழமொழி
எப்போது உருவானது/கண்டுபிடிக்கப்
பட்டது என்று பார்த்தோமேயானால்
அது ஆண்கள் என்று ஒரு இனம்
இந்த மண்ணில் என்று
தோன்றியதோ அன்றே இதுவும்
தோற்றுவிக்கப் பட்டது. இதுதான்
ஆண்களின் பிறவிக்குணம். நம்மில்
எத்தனைபேர் அவரவர்கள்
மனைவியுடன் வெளியில் வரும்
போது பிற பெண்களைப் பார்க்காத
இராமபிரான்களாக இருக்கிறார்கள்
சொல்லுங்கள் பார்ப்போம் !!
இங்கிருப்போர் அத்தனை பேர்களும்
கெட்ட இராவணன்களே!! (நான்
இங்கே ஏன்? எதற்காக ? கெட்ட
இராவணன்கள் என குறிப்பிட்டேன்
என்றால் புராணகால இராவணன்
சீதையின் அனுமதிக்காக காத்துக்
கிடந்தவன். ஆனால் இங்குஇருக்கும்
இராவணன்கள் எல்லாம்
எவர் அனுமதிக்கும் காத்து இருப்பது
எல்லாம் கிடையவே கிடையாது.
ஆகவேதான் கெட்ட இராவணன்கள்
என்றே இங்கே குறிப்பிட்டுள்ளேன்)
சரி இது ஆண்களின் நிலைமை.
அடுத்து பெண்களின் நிலையைப்
பாப்போம். ஒரு ஐம்பது
ஆண்டுகளுக்கு முன் இருந்த
தாய்க்குலம் தத்தமது கணவர்களை
பெயர் சொல்லி அழைப்பதைக்கூட
பாவமான செயலாகவே கருதி
வாழ்ந்திருந்தார்கள். ஆனால்
தற்போது நிலைமை அப்படியா
உள்ளது ? பெயரைச் சொல்வதுடன்
கூடவே ஒரு " டே " பட்டம் வேறு
அவர்கள் வழங்கியே கூப்பிடுவது
அவர்களது வழக்கமாகவே ஆகி
விட்டது அன்பர்களே. டேய் ராம்,
டேய் பாலாஜி, டேய் வேல் இப்படி
எல்லாம் அழைப்பதுதான் இங்கே
வாடிக்கையாக ஆகி விட்டது. இந்த
பழக்கம் இந்தக்கால யுவதிகள்
கிட்டத்தட்ட அனைவருமே இப்படி
தத்தமது கணவர்களை கூப்பிட்டே
பழகிவிட்டார்கள். ஆயிரத்தில்
ஒருவர் அல்லது இருவர் வேண்டும்
என்றால் என்னங்க, போங்க,வாங்க
என்ற அந்தப் பாரம்பரிய மரியாதை
உணர்வுகளை தங்களது வாய்
வழங்கு சொல்லாக
பயன்படுத்தலாம் அறையில் .
ஆனால் இப்படி மனைவிமார்கள்
அமைவது அந்த இறைவன்
கொடுத்த வரம். என்னைப்பொறுத்த
வரையில் எனக்கு திருமணம் நடந்த
(1975ம் ஆண்டு) ஒரு ஆண்டு வரை
என் மனைவிகாலையில்
தன்னுடைய படுக்கையை விட்டு
எழுந்தவுடன் எனது கால்களை
தொட்டு வணங்கிவிட்டு
அதன்பிறகே பல்தேய்க்க அவள்
கிளம்புகின்ற காட்சிகளை நான்
தூங்குவதுபோல நடித்து (என்ன ?
அப்பவே அப்பாவியாக பாலு சார்
நீங்க நடிக்க ஆரம்பிச்சுட்டீங்களா ?)-
ஓரக்கண்ணால் பார்த்து ரசித்து
நாட்களும் எனது வாழ்ந்து முடித்த
நாட்களில் அடங்கும் அன்பர்களே !!
மொத்தத்தில் ஆண்கள் அளவுக்கு
பெண்கள் பிற ஆண்களை பார்ப்பது
இல்லை. இன்னமும் சமுதாயத்தில்
உள்ள நூறு பெண்களில் இருபது
பெண்கள் கணவனைமதித்துத்தான்
இன்றளவும் நடந்து வருகிறார்கள்.
அதுதான் கணவர்கள் அவரவர்
செய்த பூர்வ புண்ணியம் என்பது.
இதைத்தான் 1976ம் ஆண்டு
வெளிவந்த " மன்மத லீலை "
படத்தில் வரும் ஒரு பாடலில்
கவியரசர் குறிப்பிட்டு இருப்பார்.
பாடல் இதோ:-
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம் !!
மனது மயங்கி என்ன உனக்கும்
வாழ்வு வரும் !!
என அந்த பாடலில் வரும் வரிகள்
ஆண்கள் இனத்திற்கு
கொடுக்கப்பட்ட சாட்டை அடி !!
கட்டுரை இத்துடன் முடிவடைகிறது
அன்பர்களே !!
ஆண்கள் மனமே அப்படித்தான் அது
அடிக்கடி மாறும் இப்படித்தான் என்ற
பாடல் யதார்த்தங்கள் நிறைந்தது.
மீண்டும் அடுத்த கட்டுரையில் நாம்
அனைவரும் சந்தித்து
மகிழ்ந்திடுவோம்
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
Subscribe to:
Posts (Atom)