Tuesday 30 April 2013

தாலி பெண்ணுக்கு வேலியாகுமா ? இது உண்மையாகுமோ ?




தமிழர்களாக வாழ்ந்திடுக !!


தமிழில் மட்டுமே பேசிடுக !!


( தமிழர்களிடமாவது )



அன்புமிக்க பெரியோர்களே !! இன்று 


நான் உங்கள் அனைவரையும் சற்று 


மாறுபட்ட, வித்தியாசம் நிறைந்த, 


நல்லதோர் சமூக சிந்தனயுள்ள, ஒரு 


விஷயத்தினை, நம் அனைவரது   


சிந்தனைக்கும், நல்லதோர் சுவை  


மிகு விருந்தேனவே, எண்ணி நான் 


உங்களுடன் விவாதித்திடவே இங்கு


வந்திருக்கிறேன் அன்பர்களே !!



பொதுவாக திருமணத்தின்போது  


மணமகன் தனது திருக்கரங்களால் 


மணமகளுக்கு அணிவித்திடும் ஒரு 


பவித்ரமான, வாழ்க்கை பற்றிய 


நல்லதொரு அறிவிப்பினை இந்த 


உலகுக்கு அறிவித்திடும் பொருட்டு 


அந்தப் பெண்ணின் கழுத்தினில் 


மஞ்சள் கயிற்றினால் கட்டப்படும் 


ஒரு புனிதமான அணிகலனே இந்த 


தாலி என்பது !! அது போலவே பெண்


அவளது சகோதரன் (மைத்துனன்) 


அவனது மச்சானுக்கு காலில் பெரு 


விரலுக்கு அடுத்து உள்ள விரலில் 


அணிவித்திடும் வெள்ளி ஆபரணம் 


மிஞ்சி என்பது. தாலிக்கு தரும் அதே 


முக்கியத்துவம் இந்த மிஞ்சிக்கும் 


தரப்பட்ட காலங்கள் முன்பு உண்டு. 


ஆனால் இப்போது எல்லாம் தாலி  


மிஞ்சி இவை இரண்டுக்குமே அந்த  


அளவு மதிப்பு இருபாலரும் தருவது 


இல்லை. காலங்கள்எல்லாம் ரொம்ப  


மாறிப்போச்சு அன்பர்களே !!ஆகவே 


யாரும் புனிதமானதாக இரண்டு 


பொருட்களையும்தற்போதுநினைப்ப


தற்கு தற்போது இடமும் இல்லை  


அதற்கு யாருக்கும் இங்கே நேரமும் 


இல்லை. ஏதோ ஒரு தங்க சங்கிலி 


ஒரு வெள்ளி ஆபரணம் என்றே 


இங்கு அனைவரும் நினைக்க துவங்-


கிஆண்டுகள்3௦க்குமேல்ஆகிவிட்டது


அன்பர்களே !! இதுஎல்லாம் ஒன்னும் 


எங்களுக்கு வேலியும் கிடையாது. 


ஒரு மண்ணும்  கிடையாது என்று 


புரட்சிகருத்துப் பெண்கள் தற்போது 


வெளிப்படையாகவே சொல்லத்  


துவங்கியாகி விட்டது அன்பர்களே 


சரி.அப்படீன்னா எதுக்கு இந்த தாலி 


இந்த மிஞ்சி என நீங்கள் கேட்பது 


உண்மையில் சரியான கேள்வி. 


சென்னையைப்போன்ற  நாகரீகம்  


முற்றியஊர்களில் வாழும் பெண்கள்  


குல தலைவிகளில் பலர் வேலைக்கு 


சென்றிடும்போது தாம் தமது இந்தப் 


பவித்ரமான தாலியை  சட்டைக்குள் 


மறைத்து திரிபவர்களையும் நான் 


ஆங்காங்கேகண்டுசிரிப்பதும்உண்டு.


பகுத்தறிவு பூர்வமாக நீங்களே சற்று 


சிந்தித்துப் பாருங்களேன்.இந்த தாலி 


என்பது அப்படியா பெண்களை வேலி 


இட்டு காத்திடும் ? ஒரு மண்ணும் 


கிடையாது. எல்லாமே சும்மாக்காச்சு 


க்கும்என்றேஆனபின்னர் நாம் என்ன  


சொல்ல முடியும்.சொல்லுங்கள் 


அன்பர்களே !! மனசாட்ஷி மட்டுமே 


நமது கூட கடைசி வரை வரும். 


பெண் என்பவள் மனதில் நினைத்து  


துணிந்து வீதியில் இறங்கிவிட்டால் 


இந்தத் தாலியால் ஒரு முடியைக்  


கூடப்பிடுங்கிடமுடியாதுஅன்பர்கள் 


அறிவாராக. சிறையில் வைத்துப் 


பூட்டினாலும் ஆண்களால் இந்தப் 


பெண்களைஎதுவும்செய்திடஇயலா-


-து என்பது வான்புகழ் வள்ளுவனின் 


கருத்து. ஒரு குறளில் கூறுகிறார்:-


சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்?  
 
மகளிர் நிறைகாக்கும் காப்பேதலை.        

இதற்கு மேலாக யாரும் எதுவும் 


சொல்லிட இயலாது அன்பர்களே !! 


ஆனால் எனக்கு தெரிந்த ஒரே ஒரு 


கருத்தினை நான் இந்த மன்றத்தில் 


பதிவு செய்துவிட்டு எனது கட்டுரை  


தனை நான் நிறைவு செய்கிறேன் 


அன்பர்களே.  

  

பொதுவாக ஆண்கள் நிமிர்ந்த நடை 


உள்ளவர்கள். பெண்கள் குனிந்த 


தலை கொண்ட நடை கொண்டவர்  


என்பது 3௦ ஆண்டுகளுக்கு முன்பு  


வரை பொருத்தமானதாக இருந்தது 


இன்றைய நிலை பற்றி நான் பேச வர 


வில்லை அன்பர்களே. 



அப்படி  நிமிர்ந்த நடைகொண்ட 


ஆண்கள் கண்களில் இவள் 


திருமணம் ஆனவள். வேறு ஒரு 


ஆண் மகனுக்கு உடமைப் பட்டவள் 


என்பதையும் அதேபோல கால்விரல் 


மிஞ்சி கண்ட பெண்கள் இந்த 


ஆடவன் வேறு ஒரு பெண்ணுக்கு 


சொந்தக்காரன் என்பதை அறிந்திட 


மட்டுமே இந்த தாலி, மிஞ்சி இங்கே 


நமது முன்னோர்களால் அறிமுகப் 


படுத்தப்பட்டு அமல் செய்யப் பட்ட-    


தாகவே நான் கருதுகிறேன் அன்பு  


நண்பர்களே !!      

                           

 நன்றி!! வணக்கம்!!


அன்புடன் மதுரை T.R.பாலு.

Sunday 28 April 2013

அறிவில்லாத அரசனோடு ஒரே சிரிப்பு மழை !!




தமிழர்களாக வாழ்ந்திடுக !!

தமிழில் மட்டுமே பேசிடுக ! 

(தமிழர்களிடமாவது ) 



  சிரிப்புக் கதை !!                   

அது ஒரு விநோதமான புத்தி 

கொண்ட மக்கள்வாழ்ந்துவரும் 

வித்தியாசமான நாடு.  மக்கள் ஆட்சி 

தத்துவம்என்பதுபெயரளவில் கூட 

அந்நாட்டில்நடைமுறையில் செயல்

படவில்லை.மக்கள்எக்கேடுகெட்டா-

லும்அதைப்பற்றிஆட்சியாளர்களுக்-

கும்கவலைஇல்லை. அந்த மக்களும் 

அதைப்பற்றிகவலைப்படுவதுஇல்ல

வே இல்லை. எல்லாம் நமது தலை 

எழுத்து என்று எண்ணி வேதனைப் 

பெருமூச்சுடனேயே மக்கள் வாழ்ந்து 

வந்தனர். அந்நாட்டு அரசர், அவரும் 

சரி,ஒரு புத்தி சுவாதீனம் அற்ற மன 

நிலை சரி இல்லாதநோயாளியும் சரி

இருவரும்ஒன்றுதான்.துக்ளக் தர்பார்

ஆட்சி தான் அங்கே நடைபெற்றுக் 

கொண்டு வந்தது.  உம்! என்றால் 

சிறைச்சாலை ! ஏன் ! என்றால் வன 

வாசம்தான்.  அந்த நாட்டின் அரசர் 

ஜெயந்தன் அதைப் பற்றி எல்லாம் 

கவலைப்படுவதுஇல்லை.அவருக்கு

துதிபாடும் மந்திரிப்பிரதானிகள் ,

ஜால்ரா போடும் ஆட்சிமன்றத்தின் 

நியமன உறுப்பினர்கள். இவர்கள் 

அனைவரது வேலையும் என்ன

என்றால்அரசர்ஜெயந்தன்அவையில் 

பேச எழுந்தது முதல் பேசி அமர்வது 

வரை கைதட்டிக் கொண்டே விசில் 

அடிப்பதும் பேச்சுக்கு பேச்சு "அப்பா"

"அப்பா"என்று ஆயிரம் தடவைகள் 

அழைப்பதும்தான்.  அரசருக்கு என 

தெரிந்தது ஒன்றேஒன்றுதான். நன்கு 

உடையுடுத்தி மிடுக்காக சபைக்கு 

வரத் தெரியும். மற்றபடி ஆட்சி எப்படி 

நடத்துவது மக்களின்தேவைகள் எது 

அதைப் பூர்த்தி செய்திட என்னென்ன 

செய்வது என எதுவும் அறிந்திடாத 

பூஜ்யஅறிவுகொண்டஅரசர்ஜெயந்த

-னென்பது அந்த நாட்டு மக்கள் அறிந்

-த ஒன்றுதான். மன்னரின் முக்கிய 

பொழுதுபோக்கு என்னவென்றால் 

அவரும் அவரது நெருங்கிய தோழர்

காசிராம் இருவரும் சதா அரட்டை 

அடித்துக்கொண்டு இருப்பதுதான். 

இந்த சூழலில் ஒரு நாள் அரசர் 

அவசரமாக தனது முக்கிய மந்திரி 

சோமன் அவர்களை அழைத்து 

நான் இதுவரை பார்திடாத சுவைத்-

-திடாத கனியை எவர் ஒருவர் வரும் 

வாரத்திற்குள் என்னிடம் கொண்டு 

வந்து காண்பிக்கிறார்களோ அந்த 

நபருக்கு அரசாங்கத்தில் வேலையும் 

தங்க சொந்தவீடும் கையில்பணமாக

5 லட்சம் அமெரிக்க நாட்டு டாலரும் 

வழங்கப்படும் எனபறைஅறிவித்திட

உத்திரவு இட்டான்.ஆனால்கனி நான் 

இதுவரை பாராத,சுவைத்திராத கனி 

அதில் எவரும் மாறியோ அல்லது 

மீறியோ பார்த்த சுவைத்த கனியைக் 

கொண்டு வந்து தந்தால் அவரது 

செய்கை கண்டிக்கப்படும்.அவரின் 

தேர்வு தண்டிக்கப்படும். அவரது கை 

துண்டிக்கப்படும்.இதுஅரசின்ஆணை


போட்டிக்குஉண்டானநாளும்வந்தது

அரசர் ஜெயந்தனின் வேண்டுதலை 

ஏற்று அவரவர் அவருக்கு தெரிந்த 

கனி வகைகளை எடுத்துக்கொண்டு 

மக்களும் வரிசையாய் நின்றனர்.

அரசாங்கவேலை,5லட்சம்அமெரிக்க 

நாட்டுப் பணம் என்றால் என்ன கசக்-

-குமா?ஆனால் யாருமே போட்டியில்

வென்றிட முடியவில்லை.அவர்கள் 

கொண்டுவந்த கனிகள் எல்லாமே 

அரசர் ஜெயந்தன் அறிந்தது,தெரிந்த,

சுவைத்தது. அப்போது ஒருவர் அவர் 

பெயர்காமன்பாபு.அவர்தன் கையில் 

அன்னாசிப்பழம் கொண்டு வந்து 

அரசர் ஜெயந்தனிடம் காண்பிக்க 

மன்னர் மிகக் கோபமுற்று நான் 

என்ன இந்தக் கனி அறியாதவனா?

என ஆவேசத்துடன் கூறியதுடன் 

அவனது வாயிலேயே வைத்து அந்த 

அன்னாசிப்பழத்தைதிணிக்கசொல்-

-லி உத்தரவு இட்டார்.  காமன் பாபு 

வாயில்வைத்து பழத்தை திணித்து 

திருகத்திருக வாய் கிழிந்து உதிரம் 

ஒழுகியது. ஆனால் அந்த நிலையில

கூட காமன் பாபு சிரித்துக் கொண்டு 

இருப்பது கண்டு அரசர் ஜெயந்தன் 

காமன்பாபுவிடம்ஏன்சிரிப்பு? உனக்கு

வலிக்கவில்லையா? என கேட்க 

அதற்கு காமன் பாபு இல்லை அரசரே  

எனக்குபின்னால் எனது சகலபாடி

சாய்சங்கர் கையில் பலாப்பழம் 

வைத்துள்ளார் !! அவரது நிலையை 

எண்ணிப்பார்த்து சிரிக்கிறேன் என்று 

காமன் பாபு சொன்ன சிரிப்பு மழை 

எப்படி இருக்கு?அன்பர்களே !!        


சிரித்து வாழ வேண்டும் !! பிறர் 

சிரிக்க வாழ்ந்திடாதே !! உழைத்து 

வாழ வேண்டும் !! பிறர் உழைப்பில் 

வாழ்ந்திடாதே !!


மிக்க நன்றி. மீண்டும் சந்திப்போம்.

நன்றி.வணக்கம்.அன்புடன்.மதுரை 

T.R.பாலு.








     

Friday 26 April 2013

புலவர்கள் குணம் என்றும் இப்படித்தானோ ?




தமிழர்களாக வாழ்ந்திடுக !!

தமிழில் மட்டுமே பேசிடுக !!

            ( தமிழர்களிடமாவது)



உலகெங்கிலும் உண்மை அன்புடனும் 

நற்பண்புடனும் பாசத்தோடும் நல்ல 

நேசத்தோடும் வாழ்ந்து வரும் எனது 

அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


உங்கள் அனைவருக்கும் எனது இதயம் 

கனிந்த நல் வாழ்த்துக்களுடன் கூடிய 

வணக்கங்கள் பலபல.  


இன்றையதினம் மேலும் ஒரு உண்மை 

நிகழ்வுதனை விளக்கும் விதமாக 

தமிழ்ப் புலவர்களது குண நலன்கள் 

அந்தக் காலம் தொட்டு இன்றுவரை, 

எப்படி காலச்சக்கர பரிணாம வளர்ச்சி,

எப்படி இருந்தாலும், அவர்களது குணம் 

ஏதாகிலும் மாறிஉள்ளதா அல்லது அது 

அப்படியேதான், காலம் காலமாக எந்த 

மாற்றத்திற்கும் தன்னைஆட்கொள்ளா

மல்அப்படி உள்ளது உள்ளபடியேதான் 

வாழ்ந்துகொண்டும்வளர்ந்துகொண்டு 

ம்தான்இருக்கிறதா என்பதனை இங்கே 

பல்வேறு நிகழ்வுகள்மூலமாக உங்கள் 

அனைவரின் சிந்தனைக்கும் விருந்து 

ஒன்று  படைக்க இருக்கிறேன். பார்த்து 

படித்து இன்புற வேணுமாய்க் கேட்டுக்

கொண்டு விடைபெறுகிறேன்.



பொதுவாக புலவர்களுக்கு என்று ஒரு 

இயற்கையான தனி குணம் என்று 

ஒன்று உண்டு.  அவர்கள் எப்போதும் 

தங்களுக்கு என்று தனியாக ஒரு தனி 

உலகத்திலே நீராடி மகிழ்வதுண்டு!!

கனவுலகம்தான் அவர்கள் களித்து 

மகிழ்ந்திடும் தனி வீடு!!  உலகினில் 

யாராக இருந்தாலும் நூற்றுக்கு ஐந்து 

பேர்கள் வார்த்தைகளுக்குக்கு அர்த்தம்

பார்ப்பவர்கள் என்றால், அந்த ஐவரில் 
   
புலவர் என்பவர் தனி ரகம். எப்படி 

என்றால் இவர் ஒவ்வொரு 

எழுத்துக்கும் பொருள் பார்க்கும் குணம் 

உள்ளவர்.அவர் யார்என்றால்புலவர்

என்பவர் மட்டுமே!! அப்படி ஒரு குணம் 

இவரிடம் இருப்பதனாலேயே புலவர்

எவராக இருப்பினும் அவரது முகத்தை 

உற்று நோக்கி பாருங்கள் சராசரியான 

மனிதர்களது திருமுகத்தினை விட 

இந்த புலவர்களது முகமோ சற்று 

இறுக்கமாகவேஎன்றும் காணப்படுவது

உண்மையிலும் உண்மை.இந்தவகை 

இறுக்கத்திற்கு காரணம் தாம் கற்று 

அறிந்த " தமிழ்மொழி "  தமக்கு பக்க 

பலமாக என்றும் இருக்கும் ஆகவே 

தம்மையாராலும் அசைத்திடமுடியாது  

என தமிழ்மொழி மீது இவர்கள் 

வைத்துள்ளஆழமானமொழிப்பற்று

தான்இங்கேஉண்மைகாரணம்என்பது

இச்சிறியவன்மதுரைபாலுவின்பல்

வேறு கண்டுபிடிப்புகளில் இதுவும் 

ஒன்று அன்பர்களே !!


சரி!! அன்பர்களே !!நாம் தலைப்பிற்குள் 

இப்போது செல்வோமா ?


மாசறு தமிழ்ப்புலவர்களுள்தலையான 

-தொரு இடம்  அதனைத் தக்கவைத்த 

பெருமை என்றும் கவிச்சக்ரவர்த்தி 

கம்பர் பெருமகனுக்கே உண்டு. அவர் 

போல தமிழின் மீதும் அதன் சுவையின்

மீதும் அளவிடற்கரிய பற்று, பாசம் ,  

கண்ட நல்லதோர் புலவர் காண்பது 

என்றும் அரிதிலும்அரிது அன்பர்களே!!


அப்படிப்பட்ட ஒரு கால கட்டத்தில் 

கவிச்சக்ரவர்த்தி கம்பர் பெருமகன் 

மன்னர் ஒருவரது அரசவைக் கவி-

ஞராக பணி புரிந்துகொண்டு வரும் 

போது திடீரென்று ஒருநாள் என்ன 

நடந்ததோ எது நடந்ததோ ஒன்றும் 

புரியவில்லை. மன்னர்பிரான் நம்

கம்பரைப் பார்த்து உமது பேச்சும் 

செயலும் எமக்கு பிடிக்கவில்லை 

ஆதலால் உடனே நீர் எங்காவது 

போய்த்தொலையும் என்று வெறுத்துச்

சொன்னவுடன் கம்பரும் புன்முறுவல்

முகத்தில் அரும்ப, மன்னரைப் பார்த்து

உடனே பாடினார் பாருங்கள் ஒரு மிக

அருமையான பாடல். அட,அட, அந்தப் 

பாடலின் அருமை பெருமைதனைச் 

சொல்லிட எனக்கு இந்த ஒரு பிறவி 

போதாது அன்பர்களே.  முதலில் நாம்

பாடலைப் பார்ப்போம் !!


   "  மன்னவனும் நீயோ !!

       வள நாடும் உமதோ ?

       உம்மை அறிந்தோ யாம் 

       தமிழை ஓதினோம் !

       எமை ஏற்காத நாடும் உண்டோ ?

        உண்டோ குரங்கேற்காக் கொம்பு !!


என்றுசொல்லிவிட்டு துண்டை உதறித்

தோள்மேல் போட்டுக் கொண்டு அந்த

நாட்டைவிட்டுக் கிளம்பினார். பிறகு 

கம்பர் அந்த நாட்டை விட்டு விட்டு 

வேறொரு நாட்டிற்கு சென்றதால் 

இந்த நாடு நரகமாகியது.சோலைவன-

மெல்லாம் பாலைவனமாகியது.

தமிழை, தமிழனை,தமிழ்ப்புலவனைப்

பகைத்ததினால் என்னென்ன நடந்து 

உள்ளது பார்த்தீர்களா. அதுபோல 

இந்த உலகில் தமிழனை,விரட்டிய 

நாட்டுக்கும் அவனை அந்த தமிழ் 

இனத்தை அளித்த பக்ஷேக்கள் நாளை 

பகல் "பிக்ஷாந்தேகி" களாக வலம் 

வரப்போகும் நாள் வெகு தொலைவில் 

இல்லை அன்பர்களே.  


மற்றும் ஒரு உணர்ச்சிவசப்படும் தமிழ் 

புலவனைப்பற்றிய கதைஇன்றுமாலை 

இதே இடுகையில் உங்களுக்கு எனது 

"எண்ணத்தில்தோன்றியவை"இணைய 

தளத்தின் வலை பதிவில் நீங்கள் 

பார்த்து,படித்து பின் ரசித்திடுங்கள் 

அன்பர்களே !


அதுவரை பொருமை காத்துஇந்தக் 

கட்டுரைதனைப் படித்த அத்துணை 

தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது இதய 

பூர்வ நன்றிதனைக் காணிக்கை செய்து 

விடைபெருகிறேன்.


வணக்கம்.அன்புடன் மதுரை T.R.பாலு.














என்ன வித்தியாசம் இருக்குது இதிலே ?




தமிழர்களாக வாழ்ந்திடுக !!


தமிழில் மட்டுமே பேசிடுக !!


             (தமிழர்களிடமாவது)


உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் என் 

அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


உங்கள் அனைவருக்கும் பணிவான 

வணக்கம் !!


இன்றைய தினம் ஏறத்தாழ 45 ஆண்டு-

-காலத்திற்கு முன்பாக எனது சொந்த 

வாழ்வினில் நானே நேரடியாக கேட்ட 

ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் 

விவாதித்திட எனக்கு நீங்கள் யாவரும் 

எனக்கு அனுமதிதரும்படிநீதிபதிஆகிய

உங்கள்அனைவரிடமும்முன் அனுமதி 

பெற்று இப்போது உரை நிகழ்த்த துவங்

-குகிறேன்.


காலம்சென்றஎனது தந்தைஒரு பெரும் 

வணிகர். எனது 15ம் வயதுமுதல் நான் 

எனதுஉயர்நிலைபள்ளிபடிப்பு முடித்து 

அவரோடு இணைந்து அவரது வணிக 

நிறுவனத்தில் பணிசெய்திடும் வாய்ப்பு 

எல்லாம் வல்ல இறைவனது அருளால் 

எனக்கு கிடைத்தது.


அப்போது வட இந்தியாவில் இருந்து 

விற்பனைப் பிரதிநிதிகள் பலர் வந்து 

செல்வது வழக்கம்.அவர்களில் பலர் 

குடும்பஸ்தர்கள்.  ஒருசிலர் திருமணம் 

ஆகாத இளைஞர்கள். அவர்களை என் 

தந்தை பார்க்கும்போது கேட்பது என்ன 

என்றால் ஆங்கிலத்தில்:-

MAY I KNOW YOU ARE A REAL BACHELOR

                                      OR 

AN UNMARRIED MAN?  என்று கேட்பது 

வழக்கம்.ஆனால்அந்த இளைஞர்களு-

இந்தக் கேள்விக்கான உள்  அர்த்தம் 

புரியாமல்திருதிரு என முழித்து பின் 

சொல்வார்கள்ஆங்கிலமொழி தனில்:-

I DON'T   FEEL ANY DIFFERENCE ! I THINK 

BOTH ARE SAME MEANING !! 

எனது தந்தை சிரித்துக்கொண்டே பதில் 

ஏதும்சொல்லாமல்விட்டுவிடுவார்கள்.


ஆனால் எனக்கு இன்று வரை அதற்கு 

பதில் தெரியவில்லை. உங்களுக்கு 

யாருக்காவது அந்தஆங்கில வார்த்தை

-களுக்கு உண்மை உள்அர்த்தம் தெரி-

-மா ?


தெரிந்துஇருப்பின்தயவுசெய்துஎனக்கு

சொல்லுகிரீர்களா ? நன்றி!வணக்கம்!! 


அன்புடன். மதுரை T.R.பாலு.



Thursday 25 April 2013

புற்று நோய் வரவேண்டும் என்று உங்களுக்கு ஆசை உள்ளதா ?




தமிழர்களாக வாழ்ந்திடுக !!

தமிழில் மட்டுமே பேசிடுக !!

             (தமிழர்களிடமாவது)



அன்பு , பண்பு,ஆகிய நற்குணங்கள் 

அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்ற

உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் என் 

உயிரினும் மேலாக போற்றி வணங்கி 

வரும் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


முதலில்உங்கள்அனைவருக்கும்எனது

சிரம் தாழ்ந்த,கரம் குவிந்த வாழ்த்துக்-

-கள் பல நிறைந்த வணக்கம் !!


இன்றைய தினம் உங்கள் அனைவரை-

-யும் எச்சரிக்கும் வண்ணம் ஒரு புதிய

மாறுபட்ட மருத்துவ/விஞ்ஞான பூர்வ-

-மாக நிரூபிக்கப்பட்டசில உண்மைக்க-

-ருத்துக்கள் நிறைந்ததாக உள்ள இந்த 

கட்டுரைதனைஉங்களதுசீரிய பார்வை-

-க்குதருவதில்நான்மிகவும் பெருமைப்- 

-படுகிறேன்.


பொதுவாக இஸ்லாமியர்களது புனித 

நூலான குர்ஆனில் என்ன குறிப்பிடப்ப-

-ட்டுள்ளதுஎன்றால்எத்தனை நோய்கள் 

இந்ததுனியாவில் (பூமியில்)உள்ளதோ

அத்தனைக்கும்அதனைதீர்க்கும்அனை

-த்து விதமான மருந்துகளும் என்னால் 

(அல்லாஹ்) மக்களுக்கு வழங்கப்பட்டு 

உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எதற்காக அதை இங்கே நான் இப்போது 

குறிப்பிடுகிறேன் என்றால் இன்றைய 

தினம் தானாக இந்த வியாதி வந்தால் 

அது விதிவசம். ஆனால்நாமாகப்போய் 

வலிய அதனை வாங்குவது என்பதை 

நாம்முயன்றால்தடுக்கலாம் அல்லவா

அந்த ஒரு சிறு முயற்சியில் தான் நான் 

இப்போது ஈடுபட்டு உள்ளேன்.


என்னென்ன அவைகள் என்றால்:-


இப்போதுகுளிர்காலம்முற்றிலும் மாறி

வசந்தகாலம்  துவங்கிவரும் வேளை.

இப்போதுதான்மஞ்சள்நிற மாம்பழங்-

கள் நம்நாடு எங்கிலும் வீதி வீதியாக 

ஆங்காங்கே உள்ள பழக்கடைகளில்

குவியல் குவியலாக விற்பனைக்கு 

வரத்தொடங்கிவிட்டது. அந்த நிறத்தை 

பார்த்தவுடன் நமக்கு நாவினில்நீர் ஊற

ஆரம்பிப்பது என்பது இயற்கை.ஆனால் 

ஆபத்து இங்கேதான் ஆரம்பமாகிறது 

அன்பர்களே!!  ஆம் ! நான் சொல்வது

உண்மை.உண்மையைத்தவிர வேறு 

ஒன்றும் இல்லை அன்பர்களே !!


இந்தவசீகரிக்கும் மஞ்சள்நிறம் வருவ-

-து என்பது இயற்கையாக இல்லை 

என்பதை நாம் அறிந்திட வேண்டும்.

பொதுவாக மரத்தில் நன்கு விளைந்த 

மாங்காய்கள் இயற்கையாக பழுக்க 

1௦ முதல் 15 தினங்கள்வரை காலம் 

ஆகும்.  ஆனால் இந்த காலம் தாழ்த்தி 

பழுக்கும்வரை பொருத்திடாத வணிக 

சமூகத்தினர் சில குறுக்கு வழிகளில் 

இந்த கனிகளை மஞ்சள்நிற மாம்பழங்-

-களாக மாற்றிட செய்திடும் இரசாயன

குளியலில்தான் தலைப்பில் சொன்ன 

புற்றுநோய் வரும் கிருமிகளை பரப்பி-

டும் புண்ணிய முயற்சிகள் துவக்கப்ப-

டுகிறது அன்பர்களே,எல்லாம் இந்த 

பழவியாபாரிகளின் கைங்கரியம்தான்.

எண்டோ சல்ப்ஹான் என்னும் பூச்சி

கொல்லி மருந்து உள்ள இரசாயனக் 

கலவையில் முதலில் இந்த நன்கு 

விளைந்த மாங்கனிகளை ஊறவைத்து 

குளியல் செய்து அப்படியே அவைகள்

அனைத்தையும் கால்சியம் கார்பைடு

கற்களை நடு நடுவே வைத்து ஒரு சிறு 

அறைக்குள்ஒரே ஒரு இரவு வைத்தால்

போதுமானது அன்பர்களே! மறுநாள் 

காலை அவை அனைத்தும் மஞ்சள் நிற 

மாம்பழங்களாக காட்சிமட்டுமே இங்கு

நமக்கு தரும் அன்பர்களே !  இதனை 

நாம் வீதியில்இருந்துவாங்கி வீட்டுக்கு 

கொண்டு சென்று உண்டோம் என்றால் 

அது மட்டுமே போதுமானது நமக்கு 

தலைப்பினில்சொன்ன புற்றுநோய் வர 

நாம் பிள்ளையார் சுழி போட ஆரம்பித்-

-து விட்டோம் என்று பொருள்.

இதே போலத்தான் திராட்சைப் பழத்து

நிலைமையும் அன்பர்களே ! விவசாயி

என்ன செய்கிறார் என்று சொன்னால் 

திராட்சை கொடியில்  பூ பூக்க துவங்கி 

யவுடன்என்னநடக்கும்என்றுகேட்டால் 

அந்த பூக்கொத்து முழுவதையும் ஒரு 

விதமான ரசாயனக் கலவையான

காப்பர் சல்பேட் என்று சொல்லப்படும் 

மயில்துத்தகரைசலில்மூழ்கடிக்கப்

பட்டு சிறிதுநேரம் அவை ஊற வைக்கப் 

படுகிறது. இங்கேயும் கூட புற்று நோய் 

தனை நமக்கு தருவிக்கும் கிருமிகள் 

பெரும் அளவில் உருவாக்கப் படுகிறது

அன்பர்களே. ஏன் இந்தக் கரைசலில் 

அவர்கள் அந்தப் பூங்கொத்தை மூழ்க 

வைக்கிறார்கள் என்று சொன்னால் 

அப்போதுதான் பூவிட்ட அத்தனையும் 

திராட்சைப் பழங்களாக இங்கே விளை-

-ந்திட வேண்டி இந்த முயற்சி. 

இதன் பயன் அவர்களுக்கு அதிக பண 

வரவு.இந்தபழங்களைவாங்கிஉண்டோ

ம்என்று சொன்னால்நமக்குவியாதிகள் 

வரவு அன்பர்களே !!


ஆகவே நான் உங்கள் அனைவரையும் 

வேண்டி விரும்பி கேட்டுகொள்வது 

எல்லாம் இதுதான்:-

தயவுசெய்துவீதிஓரம்விற்பனை

செய்யப்படும் மஞ்சள் நிற மாம்பழங் 

களைவாங்கிவந்துஉண்ண வேண்டாம்.


இதையும் மீறி மாம்பழ ஆசையா?

உங்களுக்கு! நன்குவிளைந்த மாங்கனி

-களை வாங்கி வீட்டுக்கு கொண்டு 

சென்றுநன்குகனமாக வைக்கோல் 

போர் படுக்கைசெய்து அதன் மேல் 

இந்த பச்சை நிற மாங்கனிகளை 

வைத்து 1௦முதல் 15நாட்கள் கழித்து 

அந்தப் படுக்கையில் இருந்து எடுத்து 

நாம் சாப்பிடலாம். எந்தக் கெடுதலும் 

இல்லை அன்பர்களே !


அதுபோலவே திராட்சைப்பழங்கள் 

அது எந்த பிரிவைச் சேர்ந்தது 

என்றாலும் சரி தயவு செய்து வாங்கிட 

மறுப்பு செய்திடுங்கள் அன்பர்களே.


அவங்களுக்கு பணம் மிக முக்கியம்.

நம்மளுக்கு தேக ஆரோக்கியம் அன்பர்-

-களே !!


சிந்திப்பீர் ! செயல்படுவீர் !!

நன்றி ! வணக்கம் !!

அன்புடன் மதுரை T.R. பாலு.

மீண்டும் நாளை சந்திப்போம் 

நேயர்களே !!









Wednesday 24 April 2013

ஆணுக்கு ஒரு நீதி !! பெண்ணுக்கு ஒரு நீதியா ??




தமிழர்களாக வாழ்ந்திடுக !!

தமிழிலேயே பேசிடுக !!

            (தமிழர்களிடமாவது)



உலகெங்கிலும் அன்பு,பாசம்,உண்மை,

நேர்மை இந்த குணங்களுடன் மட்டும் 

வாழ்ந்துவரும்எனது உயிரைவிடநான்

நேசித்திடும்நல்லதமிழ்நெஞ்சங்களே!! 


முதலில் உங்கள் அனைவருக்கும் என் 

இதயம் கனிந்த வாழ்த்துக்களுடன் 

கூடிய வணக்கம்!!


இன்றையதினம்இந்தசமூகத்தில்

உள்ள ஒரு அவல நிலைபற்றி இன்று 

எனது " எண்ணத்தில் தோன்றியவை "

வலைத்தளப் பக்கத்தில் ஒரு மிகவும் 

முக்கியமான ஒரு கருத்தினை நான் 

உங்கள் அனைவரின் சிந்தனைக்கும் 

ஏற்றவாறு அதனைப் பற்றிய ஓரு 

தெளிவானமுடிவுக்குநாம்எல்லோரும்

வந்தாக வேண்டும் என்ற காலத்தின் 

கட்டாய முடிவு எடுக்கும் விதமாக 

இப்போதுஓர்கருத்துப்போர் ஒன்றினை 

நான் உங்கள் எல்லோரின் முன்னிலை

-யிலும் துவக்கிட விழைகின்றேன்.


சமூகநீதி என்பது இன்று மட்டும் அல்ல 

என்றுமே அது இந்த ஆண் ஆதிக்க 

சாம்ராஜ்யத்தினில் அவர்களுக்கு,
  
அவர்களால் , அவர்களுக்காக மட்டுமே 

சாதகமாக  உருவாக்கப் பட்டுள்ளது 

என்றால் அதில் இருவேறு கருதுக்களு-

-க்கு இடம்இல்லை.அந்தகொடுமைகள்

காலம் காலமாகவே பெண் இனத்திற்கு 

பேராபத்து விளைவிக்கும் வண்ணம் 

இன்றுவரை நடைமுறைப் படுத்தபட்டு

வருவது என்பதுஎன்மனவேதனையின் 

வெளிப்பாடுஅதுதான்யதார்த்தம்.அது

மட்டுமே உண்மையும் கூட. சரி அப்படி 

எனில்உலகம்அழிந்திடும்வரையிலும்  

பெண்கள் வாய்மூடி மௌனிகளாகவே 

இருந்து மறைந்திட வேண்டியதுதானா 

என பெண்கள் அமைப்பினர் கேட்கும் 

கேள்விகளில் நியாயத்திற்கு புறம்பாக 

ஏதும்இருப்பதாகஎன்போன்ற சிந்தனை 

செம்மல்கள்கருதுவதற்கு இடமில்லை 

என்பதனை நான் இந்த மக்கள் மன்றம் 

முன்பாக அதில் எனது முதல் தகவல் 

அறிக்கையாகப் பதிவுசெய்கிறேன் என்

அன்பு நெஞ்சங்களே.  ஆனால்  நாம் 

இந்த தலைப்பினை அங்குலம்அங்குல-

மாக அலசி ஆராய முடிவு எடுத்தோம் 

என்றால் அதற்கு இந்த ஒரு பிறவி 

நமக்கு போதாது என்பதே எனது உள்

கருத்து.  இந்த சமூக நீதி என்ற ஒரு 

மகாமலையினில் நான் ஒரு சின்னஞ் 

சிறு கல் ஒன்றினை மட்டுமே எடுத்து 

அதனில் அதற்குள்ளாக எனது வாதப்

பிரதிவாதங்களை ஆராய்ந்து முடித்து 

ஒர்தெளிவானசிந்தனைநீரோட்டத்தை

உங்கள்  அனைவரது கருத்துப் பெட்ட-

கங்களில் கலந்து அது உங்களுக்கு மன 

நிறைவினை அளித்துவிட்டது என்று 

சொன்னால் அது ஒன்றே போதும் என் 

உயிரிலும் மேலான அன்புத்தமிழ் 

நெஞ்சங்களே நான் எடுத்த இந்த பிறவி 

அதன் முழுப் பயனையும் அடைந்ததா-

கவே நான் எண்ணிஎனது ஆயுள்காலம் 

முடியஇது மாதிரியான எழுத்துப்பணி

தனை நான் செயல்படுத்துவேன் எனது 

அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


சரி ! நாம் இப்போது தலைப்பு சம்பந்தப்-

-பட்ட விஷயத்தின் சரிபாதி முடிவுக்கு 

வந்து விட்டோம் அன்பர்களே. 

நான் அந்த மகா மலையில் இருந்து 

தேர்ந்துஎடுத்துள்ள ஒருசிறுகல்என்பது

"மறுமணம்" என்ற ஒரு விஷயம்தான் 

அன்பர்களே !!
  

அதாவது நம்மில்ஆதிக்காலம் தொட்டு 

இன்றுவரை இந்த மறுமணம் என்னும் 

விஷயத்தினில் பெண் என்பவளுக்கு 

சமூக நீதி என்பதுசரியாகக்கிடைத்திட 

வில்லை என்பதே எனது கருத்து. ஒரு 

ஆண்தனதுமனைவியைஇழந்துவிட்

டால் அவர் எத்தனை வயது உள்ளவர் 

என்றாலும் அதைப் பற்றி இந்த சமூக 

நீதி கவலைப் படுவது இல்லை.மாறாக

இந்த ஆண் இனத்திற்கு ஊக்கம் தரும் 

விஷயம் போல ஒரு பழமொழி வேறு:-


"பொண்டாட்டி செத்தா புருஷன் புது 

மாப்பிள்ளை " என்று 


அதே சமயம் மற்றும் ஒரு கருத்தும் 

ஒன்று இந்த அவனியில் இன்றுவரை 

நடைமுறையிலும்அனுபவ ரீதியிலும் 

அமுலில் இருக்கத்தான் செய்கிறது 

அன்பர்களே. அது :-


" பெத்தவ செத்துப்போய்விட்டால் அவ 

பெத்த பிள்ளைகளுக்கு அவங்களை 

பெத்த அப்பன் சித்தப்பன்" என்று 


நான் இங்கே எல்லோரையும் எல்லா 

ஆண் வர்கத்தினரையும் ஒருசேர ஒரே 

கண்ணோட்டத்தில்கூறிடவரவில்லை.

சேற்றினில்மலர்ந்தசெந்தாமரைகளாக 

அதிலும் நான்கு ஐந்து நல்லவர்களும் 

குழந்தைகளுக்காகவே தனது எஞ்சிய 

வாழ்நாளினைச் செலவிடும் உத்தமர்

களும்இங்கேஇருக்கத்தான்செய்கிறார்-

-கள் அன்பர்களே. ஆனால் எஞ்சிய 95

ஆண்வர்கத்தின்அயோக்கியசிகாமணி-

-களைப் பற்றிஎழுதவேண்டும் என்பதற்

-காகவே இந்தபக்கத்தினைநான் இன்று 

பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன் 

அன்பர்களே.  சரி அப்படி மனைவி 

மரணித்து விடுகிறாள். பிறகு இந்த 

ஆண் மகன் மறுமணம் செய்கிறானே 

அதில்எத்தனைபேர்நிம்மதியாகஇங்கே 

வாழ்ந்திடுகிறார்கள் என்றால் அது ஒரு 

விழுக்காடு அல்லது இரண்டு அதற்கு 

மேல் ஏதும் இல்லை. எனது ஆருயிர் 

நண்பர் ஒருவர் இருந்தார் இப்போது 

என்னோடு இல்லை. காலம் அவரை

தன்வசம் அழைத்துக் கொண்டு போய்

விட்டது. அல்ஹாஜ் முகமது யூனுஸ் 

அவர் சொல்லுவார்:-


மனைவி என்றும் தாரம்என்னும்சொல்  

அதற்கு  அருகதை  நிறைந்தவள்

முதலில் வரும் மனைவி/தாரம் அவள்  

மட்டுமே. 


          முதலில் வருபவள் "தாரம்"

          அடுத்து வருபவள் " கோரம் "

          தொடர்ந்தும் வருபவள் என்றும் 

           பிறருக்கு  " உப காரம் "


என்று வேடிக்கையாக சொல்லுவார்.

தயவு செய்து இந்த செய்தி யார் 

மனதினையும் புண்படுத்தி இருந்தால் 

அதற்காக நான்மானசீகமாக அவர்களி-

மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.இந்தக் 

கருத்தினையே கவியரசர் வேறு ஒரு 

கோணத்தினில் மற்றொரு கண்ணோ-

-ட்டத்தில் அழகாக கவி புனைந்து 

இருப்பார். மனைவி இருக்க வேறு ஒரு 

பெண் தொடர்பு என்பது எப்படிப்பட்ட 

ஆபத்தினைத் தர வல்லது என்பதனை 

இந்தப் பாடல் மிக அழகுற வெளிப்ப

-டுத்தி இருக்கும் அன்பர்களே.


"நெஞ்சில் ஓர் ஆலயம் " என்ற திரைப்-

படத்தில் அந்தப் பாடல் வரும்:-


" ஒருவர் மட்டும் குடி இருந்தால் 

என்றும் துன்பம் இல்லை-ஒன்றிருக்க

ஒன்று  வந்தால்  என்றும்  அமைதி

இல்லை" 


என்று அருமையான வாழ்கையின் 

உண்மை நிகழ்வுகளை அது அவரது 

கற்பனையில் உதித்ததோ அல்லது 

அவரது சொந்த/தனிப்பட்ட வாழ்வில் 

கண்ணதாசன் பெற்ற அனுபவத்தின் 

வாயிலாகவோநான்அந்தஇடத்திற்குள்

செல்ல விரும்பவில்லை.


ஆகநாம் இப்பொது இடுகையின் இறுதி 

பகுதிக்குவந்து விட்டோம் அன்பர்களே.

பார்த்தார்கள். பெண்கள்.  இனிமேலும் 

நாம் வாய்மூடி இருந்தோமென்றால் 

இந்த ஆண் இனம் நம்மைபகடைக்காய் 

-களாக மட்டுமே பயன் படுத்தும்என்று 

முடிவெடுத்து அதன் எதிரொலியாக 

இந்த" மறுமணம் " விஷயத்தில் பலர்

துணிந்து முடிவெடுக்க ஆரம்பித்து 

விட்டார்கள்.இது தான் நான் இந்தப் 

பெண் சமூகத்தில் எதிர்பார்த்தது. அது 

இன்றைய தினம் அங்கிங்கு எனாதபடி

எங்கெங்கும் சீரோடும் சிறப்போடும் 

நடைபெறத் தொடங்கிவிட்டது எனது 

அன்புத் தமிழ் நெஞ்சங்களே !


உங்களுக்கு மட்டும்தான் மனையாள் 

இறந்துபோனாலோ அல்லது அவள் 

உயிருடன் இருக்கும்போதிலோ வேறு 

பெண்ணை மணம் செய்து கொள்ளும் 

துணிவு வரும்? 


எங்களுக்கும் அந்தத் துணிச்சல் உண்டு 

என்ற கருத்தை இங்கேமுதல்முதலாக

பதிவு செய்த பெருமை திரைப்பட 

நடிகை லெட்சுமிஅவர்களுக்கு உண்டு. 


அவரைத் தொடர்ந்து அவர்வழி வந்த 

மற்றும்ஒருசிறப்புகுணம்கொண்டவர்

தான் இயக்குனர் சிகரம் பாரதிராஜா  

அவர்களால் கண்டெடுக்கப்பட்ட 

நல்முத்துகிழக்கேபோகும் ரயில்

திருமதிராதிகா அவர்களே. இது போல் 

துணிந்து பல சம்பவங்கள் இங்கே 

தொடர்ந்து நடந்து வந்தாலே போதும்.

ஆண் இனத்தின்அந்த ஆதிக்கஎண்ணம்

என்றவழிவழிவந்தஅந்த காட்டுதர்பார்

நிகழ்வுகளுக்கு சாவுமணி ஒலிக்கத் 

துவங்கி விட்டது என்று எண்ணி நாம் 

அனைவரும்மகிழ்வுஅடைந்திடுவோம் 

என்று சொல்லி எனது இந்த மிக நீண்ட

நெடிய அறிவு சார்ந்த கட்டுரைதனை 

மிகவும் பொறுமையுடன் படித்திட்ட 

எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு 

நான் மீண்டும் எனது நன்றிதனை 

உங்களது பொற்கமல பாதங்களில் 

வைத்து வணங்கி விடை பெறுகிறேன்.


நன்றி! வணக்கம் !!அன்புடன் மதுரை 

T.R. பாலு.










Sunday 21 April 2013

நடைபயிற்சி செல்பவரா நீங்கள் ? உஷார்!!உஷார் !!பராக் !!பராக் !!



தமிழர்களாக வாழ்ந்திடுக !!

தமிழில் மட்டுமே பேசிடுக !!

           ( தமிழர்களிடமாவது )


தேவை !பாதுகாப்பு !!உஷார் !உஷார் !!

அனைவர்க்கும் எனது இதயம் கனிந்த 

வணக்கம்.


இன்றையதினம் நாட்டில் நடைபெற்று

வருகின்றபல்வேறுகொலைகளில் மிக

அதிகம் நிகழ்ந்திடுவது காலை வேளை

சம்பந்தபட்ட(கொலைசெய்யப்டுபவர்)

நபர்மர்மமாககொலைசெய்யப்படுவது

அவர் காலை நடைபயிற்சி செல்லும் 

போதே குறிவைத்து தாக்கப்பட்டு பின் 

கொலைசெய்யப்படுவதுஎன்பதுஇன்று 

வழக்கமானநிகழ்வுகளில் ஒன்றாகவே

ஆகி விட்டது.  ஏன் என்றால் ஒருவரை 

ஒரு கும்பல் கொலைசெய்வது என 

தீர்மானித்துவிட்டால்,அது தனி நபரோ 

அல்லது கூலிப்படையோ அவர்களது 

முதல்வேலைகண்காணிப்பதுமட்டும்.

அப்படி கண்காணிப்பு பணி துவங்கிடும்

போது அவர்களது முதல் வேலை இந்த 

கொலை செய்யப்படுபவர் எப்போது 

எழுந்து வெளியில் வருகிறார்.அவரது 

அன்றாடநடவடிக்கைகள் என்னென்ன? 

எத்தனை மணிக்கு எங்கெங்கு 

செல்கிறார் ?எப்போது வீட்டுக்கு அவர் 

திரும்புகிறார்? இது பற்றியஒருதொடர் 

கணக்கெடுப்பு (இரகசிய சர்வே) எடுத்து 

ஒரு 1௦ நாட்கள்இந்தசர்வே நடைபெற 

அதன் பிறகே அவரை எந்த  இடத்தில 

வைத்து எப்படி "  போடுவது  "என்று  

தீர்மானிப்பார்களாம். இதனை  எனது

உதவியாளர் ஒரு கூலிப்படை தளபதி 

சொல்லியதாக மறைந்த ஒரு கூலிப் 

படை செயல்வீரர் சொன்னதாக ஒரு 

பொதுக்கருத்து இந்த நாட்டிலே 

இன்றும்அமலில் உள்ளதுநெஞ்சமே!!


அன்பர்களே  இந்த முறைப்படி இங்கே 

கொலை செய்யப்பட்டவர்கள் ஏராளம் 

ஏராளம். அந்த வரிசையில் முதலில் 

கொலை அரங்கேற்றப்பட்ட நபர்தான் 

முன்னாள் பொதுப் பணித் துறை 

அமைச்சரும் ,அந்நாள் அந்த மாவட்ட 

கழகசெயலாளருமான தா.கிருஷ்ணன் 

அவர்கள்தான்.  கடந்த 2௦௦3ம்  ஆண்டு

 "தாகியார்" காலைநடைபயிற்சிசென்ற

 போது தான்கயவர்கள் கூட்டதினரால்

கூலிப்படை அதோடு கூட ஏவல்படை 

இவர்களது துணையுடன்  " வேலை "

மிகக் கச்சிதமாக முடிக்கப் பட்டது.

உடன் பிறந்தே கொல்லும் வியாதி 

என்பார்கள் நமது முன்னோர்கள்.அது 

போல நமது உடலுக்கு ஏதாவது சீக்கு 

வந்து மனிதன் இறந்துபோகும்போது 

அவர்கள் என்னசொல்லுவார்கள்எனில் 

வெளியில் இருந்து நோய்த்  தாக்கம் 

வந்து/ஏற்பட்டு அவர் மரணம் அடைய 

வில்லை. அவரது உடலில் இருந்து 

வந்த வியாதியே அவரை கொன்று 

விட்டது என்று சொல்லுவார்கள்.


இந்த நடைபயிற்சிக் கொலையில் 

நெல்லை மாநகரில் பிரபல கல்விக் 

கட்டளை அதிபர் ஒருவர், அதுபோல 

நெல்லை மாநகரில் நடைபயிற்சியில் 

அதிகாலை வேளையில் தன்னை 

ஈடுபடுத்திக் கொண்டிருந்த ஆலடி 

அருணாஅவர்களும்இதேபோலத்தான்

மர்மக்கூலிப்படை உதவியுடன் மேலே

அனுப்பப்பட்டதாகப் பலத் தகவல்கள் 

இங்குள்ள காவல்துறை அலுவலகத்-

திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

இதே வரிசையில் தான் திருச்சி புகழ் 

முன்னாள் அமைச்சர் இந்நாள் 

மாவட்டக் கழகச் செயலாளருமான 

திருச்சி திரு K.N.நேரு அவர்களதுஉடன் 

பிறப்பு,KNநேரு அவர்களது வலது 

கரம்போல செயல்பட்டவரும்,"செயல்"

வீரருமான "இராம ஜெயம் " கயவர் 

கூட்டத்தினரால் காலைவேளை 

நடைப்பயிற்சி சென்றபோது பகல் 12 

மணிவரை வீடுவரவில்லையாதலால்

தேடிடும் போதுதான் அவர் கொலை-

செய்யப்பட்ட விபரமே வீட்டோருக்கு 

அங்கே தெரிவிக்கப்படுகிறது.இதே 

முறையிலே நேற்று நாகர் கோவிலில் 

மாநில செயற்குழுஉறுப்பினர்B.J.P.யின் 

அன்பிற்குரிய திரு M.R.காந்தி அவர்கள் 

காலைவேளை நடைபயிற்சி செல்லும் 

போது ஏவல்படையினரால் கொலை 

முயற்சி நடைபெற்ற போதிலும் கூட 

அதனின்று தப்பித்துவந்தாரையா!! 

பாவம் பல்நோக்கு மருத்துவமனை 

சென்று படுத்தாரையா !!                                             


ஆகவே நான் இறுதியாக முக்கியமான

அரசியல் தலைவர்களுக்கு சொல்ல 

விரும்புவது என்னவென்றால் நீங்கள் 

இந்த சமுதாயத்திற்கு மிகவும் 

வேண்டப்பட்டவர்கள்.     ஆகவே இனி 

முதல்கொண்டாவது காலையில் 

நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டி 

யது மிகவும் அவசியமானது 

என்றாலும் அதனை நீங்கள் வீதியில்

வைத்துகொள்ளாமல்இதே பயிற்சியை 

வீட்டு மொட்டை மாடியில் வைத்து 

செய்தீர்களேயானால் உங்கள் உடல் 

நலத்திற்கு மிகவும் நல்லது என்று 

சொல்லி தரப்பட்ட வாய்ப்புகளுக்கு 

நன்றி பாராட்டி விடை பெறுகிறேன்.


நடை பயிற்சி செல்பவரா நீங்கள் ?

அது இன்று மிகத் தொல்லைதரும் 

பயிற்சி!! ஆதலால் கவனம் அதிகம் 

தேவை ! உஷார் !!உஷார் !!