Wednesday 31 July 2013

மனைவிமார்களை கணவன்மார்கள் தமது வசப்படுத்துவது எப்படி ?--விடை இதோ இப்படி உங்களுக்கு !!





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 


தமிழனாக வாழ்ந்திடுங்கள்!! 


தமிழ் பேசும் சகோதர, சகோதரிகள்   


நடுவில் உரையாடிடும் பொழுது


ஆங்கில வார்த்தைகள் கலப்பு ஏதும் 


இன்றி தனித் தமிழில் மட்டுமே 


பேசிடுங்கள் !!வாழ்ந்திடுங்கள் !!           


கடந்த 26-௦7-2௦13 அன்று உங்களது     


மதுரை T.R. பாலு உங்களிடம் ஒரு 


கேள்விக்கணை ஒன்றினை கேட்டு 


இருந்தது உங்களது நினைவினில் 


இருக்கும் என கருதுகிறேன். அந்தக் 


கேள்விக்கான விடை இதோ:-           


முதலில் கேள்வி என்ன என்று 


பார்ப்போமா நேயர்களே:-


மனைவிமார்களைகணவன்மார்கள் 


தங்களது வசப்படுத்துவது எப்படி?   


இதற்கான பதில் 3 தலைப்பினில் 


அமைந்து உள்ளது என்றாலும் அந்த 


3    விடைகளை உங்களுக்கு 


சொல்வதற்கு முன்பாக ஆண்களே 


நீங்கள் ஒரு விஷயத்தினை 


தெளிவாக புரிந்துகொள்வது மிக 


மிக அவசியம் என்று கருதுகிறேன். 


முதலில் பெண் என்பவள் இல்லை 


என்றால் வாழ்க்கை என்பதே 


ஆண்களுக்கு கிடையாது. அந்தப் 


பெண்ணை திருமணம் 


செய்துகொண்டு தனது வீட்டிற்குள் 


அழைத்து வரும்போதுதான் இந்த 


தனிக்கட்டையாக,பிரம்மச்சாரியாக 


(ஒருசிலரே)இருந்த,வளர்ந்த,


வாழ்ந்த,ஆண்மகனுக்கு ஒரு 


"குடும்பத்தலைவன்"  என்ற


சிறப்புநிலை /கௌரவம் 


இந்த பெண்ணால் மட்டுமே 


கிடைக்கிறது என்ற அடிப்படை 


உண்மையை ஆண்மகன்கள் 


புரிந்துகொண்டாலே போதுமானது. 


மனைவியைத்தனது 


வசப்படுத்துவது என்பது மிகவும் 


எளிதான காரியமாக ஆகிவிடும். 


நிலவு இல்லாமல் வானம் இல்லை. 


நீர் இல்லாமல் மழை இல்லை. அது 


போல பெண் இல்லாமல் ஆண்என்ற 


தனிநபருக்கு என்றுமே சிறப்பு 


என்பது  கிடையவே கிடையாது. 


அப்படி நமக்கு சிறப்பினைத் 


தருகின்ற அந்த பெண்ணிடம் நாம் 


எப்படி நடந்துகொள்ள வேண்டும்? 


முதலில் அவள் என்ன பேசினாலும், 


எப்படி நமக்கு ஆத்திரம் ஊட்டும் 


விதமாக நடந்து கொண்டாலும் 


ஆண் புன்முறுவலுடன் அவளிடம் 


சிரித்துக்கொண்டே அருமை!மிகமிக 


அருமை!! யம்மா !! உன்னையைத் 


தவிர வேறு யாராலும் எவராலும் 


இந்த மாதிரி பேசவும் முடியாது !!


இப்படி நடந்து கொள்ளவும்முடியாது 


என்று மட்டும் சொல்லிப்பாருங்கள்!!


அதன் பிறகு என்ன நடக்கிறதுஎன்று. 


என்னடா இது !! நாம இப்படி கோபப் 


பட்டாலும் இவர் இப்படிஅமைதியாக 


சிரித்துக்கொண்டு இருக்கிறாரே என 


உங்கள் மேல் அவளுக்கு ஒரு இனம் 


புரியாத மதிப்பு உருவாகத் 


தொடங்கிவிடும். இதுதான் நீங்கள் 


அவளை வசப்படுத்துவதற்கு முதல் 


நிலை ஆண்களே. முக்கியமாகஇந்த 


நிலைப்பாட்டை நீங்கள் 


மறந்துவிடக் கூடவே கூடாது. 


அவளும் கோபப் பட்டு நீங்களும் 


பதிலுக்கு கோபப்பட்டால் அத்தோடு 


முடிந்தது சுமுகமான குடும்ப உறவு. 


இரண்டு கையும் தட்டினால்தானே 


ஓசை? ஒன்று தாழ்ந்து போனால் 


எப்படி ஓசை வரும். அது நாமாக 


இருப்பதினால் நமக்கு(ஆணுக்கு) 


ஒன்றும் இழுக்கு வந்துவிடப் 


போவது இல்லை. அடுத்த நிலை 


வசப்படுத்தும் கலையில் என்ன 


என்று கேட்டால் மனைவி சம்பந்தப் 


பட்ட உறவினர்களிடம் சற்று 


கூடுதலாகவே பாசம் இருப்பவர் 


போல வெளிக்காட்டிக்கொள்வது 


மிகமிக அவசியம் ஆண்களே. இதில் 


நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் 


என்று சொன்னால் நீங்கள் 


மனைவியை தம்வசப்படுத்தும் 


இலக்கினை மிக நெருங்கி 


விட்டீர்கள் என்றே பொருள்.ஆனால் 


இந்த நிலையை அடைவதற்கு சற்று 


கூடுதலாக நீங்கள் பொருள் செலவு 


செய்திட வேண்டி இருக்கும். 


பரவாயில்லை.பணம் எப்போது 


வேண்டுமானாலும் நாம் 


ஈட்டிக்கொள்ள முடியும். ஆனால் 


பாச மனையாளை நம் 


வசப்படுத்துவது என்பது அவ்வளவு 


எளிதான காரியம் அல்லவே. 


மூன்றாவது மற்றும் இறுதி 


நிலைப்பாடு அவளை தமது வசப் 


படுத்தும் கலையில் எது என்றால் 


மனைவியாகப்பட்டவள் எதாவது 


புதிதாக சமைத்திருந்தாலோ 


அல்லது புதிய ஆடை அணிந்து 


உங்களிடம்,ஏங்க எப்படி இருக்கு ?


நல்லா இருக்கா என்று கேட்கும் 


போது (அது எப்படி இருந்தாலும் ) 


ஆகா!!பேஷ்!!பேஷ்!! அருமை,மிக 


மிக அருமை!! நேற்றுகூட இப்படி 


இல்லையம்மா!!(என மனதார பொய் 


சொன்னாலும் பரவாயில்லை.அது 


மன்னிக்கப்படலாம்) இதைக்கேட்டு 


உங்கள் மனைவி முகத்தில் 


புன்னகை அரும்பிவிட்டது 


என்றுசொன்னால் போதுமானது. 


அய்யா நீர் வெற்றிக்கோட்டையின் 


கதவத் திறந்து உள்ளே சென்று 


உங்கள் மனைவியின் இதய 


சிம்மாசனத்தில் அமர்ந்துவிட்டீர்கள் 


உங்கள் மனைவியை உங்களது 


வசப்படுத்திவிட்டீர்கள் என்று 


தாராளமாகப்பொருள்கொள்ளலாம். 


மொத்தத்தில் நான் உங்களுக்கு 


இப்போது கீழே தரப்பட்டுள்ள 3 


முறைகளில் நடந்துகொள்ளுங்கள் 


நீங்கதான் ராஜா!!. உங்க மனைவி 


எப்போதும் எந்நாளும் தூக்குவாங்க 


உங்களுக்கு கூஜா!!.                                 



 1) மனைவி என்ன சொன்னாலும் 


உங்கள் பதில் இப்படி இருக்கணும்.   



       "" ஆமா !!  ஆமா !! ""                           



2) மனைவி ஏதாவது செய்து 


முடிக்கும் நிலையில் என்னங்க இது 


சரியா? என கேட்கும்போது பதில்:-       


       ""என்னம்மா !! நீ செய்யும்போது 


தவறு வருமா ? அதெல்லாம் 


சரிதான்!!""                                                         


3)  இறுதியாக இதுதான் கடைசி 


அஸ்திரம். அவளிடம் நீங்கள் 


அடிக்கடி பேச்சுக்கு நடுவில் இந்த 


வாசகத்தை உபயோகப் 


படுத்திக்கொண்டே இருக்க வேணும்.



   " நீ  சொன்ன மாதிரி !! நீ சொன்ன 


மாதிரி !! நீ சொன்ன மாதிரி !!           


 நீங்கள் உங்களது மனைவியை 


வசப் படுத்தும் கலைதனில் வெற்றி 


பெற்று விட்டீர்கள் . ஹலோ !! இந்த 


பாத்தீங்கள்ள மனைவி வசமான 


உடனே பாடம் சொல்லிக்கொடுத்த 


குருநாதரை மறந்துட்டீங்களே!! ஒரு 


வார்த்தை போயிட்டு வாரேன் 


அப்படீன்னு சொல்ல மாட்டீங்களா? 


இல்ல கேக்கிறேன். வான்புகழ் 


வள்ளுவர் என்ன சொல்லிருக்கார் 


தெரியுமா அன்பர்களே!!                   



திருக்குறள் !!                 



அதிகாரம் :-  ஊடலுவகை .                 


குறள் எண் :- 1327.



"ஊடலில் தோற்றவர் வென்றார்     


அதுமன்னும் கூடலில் காணப்படும்" 


விளக்கம் :-  கணவன் மனைவி 


இருவர் இடையில் வரும்/


உண்டாகும் ஊடலில்(மனக்கருத்து 


வேறுபாடான விஷயங்கள் 


வரும்போது)எவர் அதைப் 


பொருட்படுத்தாமல் 


விட்டுக்கொடுக்கிறாரோ (இங்கு 


அவர் தோற்றவராக கருதப் 


படுகிறார்) அவரே (இரவில்/


தனிமைசூழலில்)வெற்றி பெற்றவர் 


எனக் கருதப்படுகிறார்.எப்படி ?அந்த 


ஊடலுக்கு பிறகு (சண்டைக்குப்பின் 


வரும் சமாதானம்)வரும்  சந்திப்பில் 


விட்டுக்கொடுப்பவர் முதலில் 


இன்பத்தின் எல்லையை 


தொடுகிறார் அல்லவா? அதன் 


மூலமாக !! எனவே யார் 


விட்டுகொடுக்கிறீர்களோ அவர்கள் 


வெற்றி பெறுவார்கள். இது 


வள்ளுவர் நமக்கு அருளிய குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்!!



இத்தனை பொறுமையோடு இந்த 


மிக நீண்ட கட்டுரைதனைப் படித்த 


அன்பு உள்ளங்களுக்கு  நன்றி!!.    



பின் குறிப்பு :-


படிப்பதுடன் நின்றுவிடாமல் 


சொல்லப்பட்டுள்ள கருத்தை அதன் 


உட்பொருளை உங்கள் நெஞ்சில் 


நிறுத்தி செயல்பட்டால் உங்கள் 


வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 


நன்றி!! வணக்கம் !!                               


அன்புடன் !! மதுரை T.R. பாலு.

Friday 26 July 2013

மனைவிமார்களை கணவன்மார்கள் தமது வசப்படுத்துவது எப்படி ?--ஒரு சிறு கருத்து விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 


உலகெங்கிலும் வாழ்ந்துவரும் 


எனது உயிரினும் மேலாக நான் 


போற்றி வணங்கி வரும் எனது 


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! 


உங்கள் அனைவருக்கும் எனது சிரம் 


தாழ்ந்த கரம் குவிந்தஅன்பு நிறைந்த 


வணக்கங்கள் பல.                           



இன்றைய தினம் சற்றே மாறுபட்ட 


ஒரு கோணத்தில் தலைப்பு 


ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதில் 


எனது சிந்தனைதனை செலவு 


செய்து அதனால் சமூகத்திற்குஎன்ன 


வரவு கிடைத்துள்ளது என்று 


பார்ப்போமா நேயர்களே !!               



பொதுவாக இந்த அதிவேக உலகச் 


சூழலில் கணவன்-மனைவி உறவு 


என்பது பணத்தின் அடிப்படையில் 


மட்டும் தான் நடைபெறுகின்றது 


என்பது நாம் மனவேதனையோடு 


ஒத்துக்கொள்ளவேண்டிய 


உண்மையே ஆகும். நாங்கள் 


வாழ்ந்தகாலம்என்றுசொல்லப்படும் 


சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு 


முன்புவரை அதாவது 197௦ --1975 


இவைகளுக்கு இடைப்பட்ட 


காலகட்டங்களில் கணவன்மட்டுமே 


பொருள் ஈட்டும் பணியில் இருப்பது 


வழக்கம். மனைவியாகப்பட்டவள் 


பாச உணர்வுகள் மேலோங்க 


குடும்பத்தை கட்டுச்செட்டாகவும் 


குழந்தைகளை நேச உள்ளத்தோடும் 


வளர்த்திடும் பெரும்பொறுப்பில் 


தங்களை முன்னிறுத்தி 


வாழ்ந்திருந்த காலம் அது. கணவன் 


பொருளீட்டி, அதனால்தான்குடும்பம் 


நடைபெறுகிறதுஎன்ற உள்ளுணர்வு 


மனைவிக்கு இருந்ததினால் அவள் 


எப்போதும் கணவனுக்கு 


கட்டுப்பட்டவளாக,கணவனை 


நேசிப்பவளாக, தனது இதயத்தில் 


வைத்து பூஜிப்பவளாக,மொத்தத்தில் 


கணவனே கண் கண்ட தெய்வம் 


என்று அந்தக்கால மனைவி மார்கள் 


வாழ்ந்துவந்ததினால் அவர்களை 


வசப்படுத்தவேண்டிய அவசியம் 


அந்தக்காலத்தில் வாழ்ந்துவந்த 


கணவன்மார்களுக்கு  இல்லாமல் 


இருந்தது.                         


ஆனால் இன்று நிலைமை அப்படி 


இல்லை. 


கணவனோடு மனைவியும் 


சேர்ந்து பொருள் ஈட்டினால்தான் 


குடும்பம் நடத்தமுடியும் என்ற 


நிலைமைக்கு உலகமே வந்துவிட்ட 


காரணத்தினால்பெண்கள்(மனைவி) 


ஆண்களுக்கு (கணவன்) மதிப்பு 


தருவதும் இல்லை முன்பு போல 


மரியாதையையும் 


கணவன்மார்களால் பெற முடிவது 


இல்லை. 


சரி.    இந்த   நிலைமையை 


எப்படி சமாளிப்பது? இது ஒன்று 


மட்டுமே இன்றையதினம் ஆண்கள் 


(கன்னவன்மார்கள்) முன்பு உள்ள 


பிரச்சினை. ஏறத்தாழ நாற்பது 


ஆண்டுகளாக இல்லறத்தில் 


நல்லறம் கண்டவன் என்ற 


முறையில் இன்றைய 


இளைஞர்களுக்கு 


(கணவன்மார்களுக்கு) பெண்களை 


(மனைவியை) வசப்படுத்துவது 


எப்படி என்ற இரகசியத்தை மூன்றே 


மூன்று மந்திரங்களின் மூலமாக    


உங்களுக்கு நான் தருகிறேன்.


நீங்க(கணவன்மார்கள்)மந்திரத்தை 


அவர்களை (மனைவிமார்களை) 


நோக்கி பிரயோகித்தீர்கள்  


என்றாலே போதுமானது. 


மனைவிமார்கள் கணவன்மார்கள் 


வசப்படுவது மட்டும் அல்லஅவர்கள் 


உங்களின் அடிமைகளாகஆகிவிடும் 


வாய்ப்புகள்கூட அதிகம் உண்டு!! 


அது என்ன ? விரைவில் 


விடைகளோடு உங்களை 


சந்திக்கிறேன். அதுவரை அன்பு 


வணக்கம் கூறி இந்த அளவில் 


பிரிகிறேன். மீண்டும் சந்திப்போம். 


விடைகளை நான் உங்களுக்கு 


தருகிறேன். அதன் பிறகு நீங்கள் 


சிந்திப்பீர்கள்.அதுவரைசின்னஞ்சிறு 


 **           இ   டை   வே   ளை.                 ** 


அன்புடன் மதுரை T.R. பாலு.

Thursday 25 July 2013

திரைப்பட நடிகை மஞ்சுளா மரணம்--ஒரு கருத்தாய்வு !!







உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



உலகத்தமிழர்கள் அனைவருக்கும் 


எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் 


மற்றும் அதனோடு இணைந்த நன்றி 


கலந்த வணக்கங்களும். நிற்க!     



நேற்றுமுன்தினம்(23-௦72௦13) நடிகை 


மஞ்சுளா (நடிகர் விஜயகுமார் 


அவர்களின் இரண்டாவது மனைவி 


என்ற பொறுப்பை ஏற்று செயல் 


பட்டவரும், கடந்த   197௦-1980 ஆக 


இந்த 1௦,11 ஆண்டுகளாக தமிழ்த் 


திரை உலகை  நன்றாக "கலக்கு 


கலக்கு" என  கலக்கி   நடித்து 


வாழ்ந்தவருமான  முன்னாள் 


தமிழ்த் திரைப்பட உலகின் 


முன்னணிக்  கதாநாயகியாக வலம் 


வந்தவரும்  புரட்சி நடிகர் என்று 


தமிழ்இனத்தலைவர் திருமு.கருணா


-நிதி அவர்களால்பட்டம் பெற்ற 


M.G.R., அவர்தம்  " அன்புக்கு உரிய "


நடிகையாகவாழ்ந்திருந்த மஞ்சுளா, 


மரணத்தைத் தழுவிய துக்ககரமான 


சேதிகேட்டுஆழ்ந்த துயரம்அடைந்த 


ஆயிரம் ஆயிரம் அந்நாள் தமிழ் 


ரசிகப் பெருமக்கள் மன வருத்தம் 


அடைந்ததை என்னால் காண 


முடிந்தது என் அன்புத் தமிழ்  உடன் 


பிறப்புகளே!!



மறைந்த MGR.சிறப்பாக நடித்து 


அந்நாளில் வெளிவந்த "சிரித்து 


வாழ வேண்டும் "என்ற வண்ணத் 


தமிழ் காவியத்தில் ஒரு சிறப்பான 


பாடல், மறைந்த,  மதுரை மண் 


ஈன்றெடுத்த, தவப் புதல்வன், 


T.M.சவுந்திரராஜன், பாடலைப் பாட, 


அதற்கு மக்கள் திலகம் வாய் 


அசைக்க,கூடவே முதுபெரும் 


பாடகர் /கலைஞர் நாகூர் அனிபா 


அவர்கள், உடன் பாடிட அந்த பாடல் 


வரிகள் காணீர் :-



கண்ணை மறைத்தென்ன விதை 


போட்டாலும், போட்ட விதை 


என்னவென்று மரம் வளர்ந்து 


காட்டாதோ ?                                           


கண்ணை மறைத்தென்ன 


காரியத்தைச் செய்தாலும் 


காலக்கணக்களவன் காட்டி வைக்க 


மாட்டானோ ?                                             


என்று தனது எட்டு கட்டை உயர்ந்த 


நிலை சாரீரத்தில் (HIGH PITCH 


TONE)முதுபெரும் பாடகர்/கலைஞர், 


அந்நாளும் சரி,இந்நாளும் சரி, இனி 


வரும் என்னாளாக இருந்தாலும் சரி, 


திராவிட முன்னேற்றக் கழகம் 


ஒன்றுதான்தனதுஅரசியல்இயக்கம், 


தமிழினத்தலைவர் திருவாரூர் 


முத்துவேலர் கருணாநிதி அவர்கள் 


மட்டுமே தனது வழிகாட்டி, தலைவர்,


என்றகொள்கைமுடிவோடு  தனது9௦ 


வயதிலும் கட்டுப்பாடு நிறைந்த 


வாழ்க்கை வாழ்ந்துவரும், எந்தவித 


கெட்ட பழக்கமும் இல்லாதவரும் 


அனுதினமும் 5 வேளை தொழுகை 


செய்து அல்லாவை வணங்கி 


வருபவரும் ஆக இத்தனை நல்ல 


குணங்களை தன்னகத்தே கொண்ட 


உத்தமர்நாகூர்EM.ஹனீபா அவர்கள் 


பாட, அடுத்து T.M.S. தமது கணீர் 


குரலில் :-


ஒன்றே சொல்வான் !!


நன்றே செய்வான் !!   அவனே 


அப்துல் ரஹ்மானாம் !!   


ஆண்டான் இல்லை!! 


அடிமைகள் இல்லை !!      


எனக்கு நானே எஜமானாம் !!         


மேரா நாம் அப்துல்ரெஹ்மான் !!     


மேரா நாம் அப்துல் ரெஹ்மான் !!       


என்று அந்தப் பாடல் தொடரும்.  


நான் இங்கே எதற்காக அந்தப் 


பாடலை கோடிட்டு காட்டுகிறேன் 


என்று சொன்னால் அன்பர்களே!!,   


 மறைந்த நடிகை மஞ்சுளா, அவர் 


வாழ்வில் செய்த மாபெரும் தவறு, 


மன்னிக்க முடியாத தவறு, ஒன்று 


உண்டு என்று சொன்னால், அதுதான் 


ஒரு ஜோடி நாட்டுக்குயில்களின் 


கூட்டினை  கலைத்து, அந்தக்குடும்ப 


வாழ்க்கையையே (தன் மீது விஜய 


குமார் கொண்ட மதி மயக்கத்தால், 


காதல் உணர்வுகளால்,ஆழ்ந்த காம 


வெறிகொண்ட மனத்தால் அவரது 


முதல் மனைவி மற்றும் அவரது 


குழந்தைகளிடம் இருந்து அவரைத் 


தனியே பிரித்து வந்து தன்னை 


இரண்டாவது மனைவியாக ஏற்றுக் 


கொள்ளவைத்த பாவம்) கெடுத்து 


சின்னாபின்னமாக்கி அந்த முதல் 


மனைவி, அவர் பெற்ற பிள்ளைகள், 


ஆகியோரை நடுத்தெருவில் 


கொண்டு வந்து வைத்த புண்ணிய 


காரியத்தை மறைந்த மஞ்சுளா 


செய்தார் அல்லவா !! அந்த 


செயலுக்கு, எல்லாம் வல்ல 


இறைவன் தந்த பரிசுதான் இந்த  


நடுத்தரவயதினில் அவரை இந்த 


பூவுலகிலிருந்து நோய் தாக்கி, 


மரணத்தை தழுவிடச் செய்தது 


என்று சொன்னால் அது மிகையான 


சொல் அல்ல என் அன்புத் தமிழ் 


உடன்பிறப்புகளே !! பொதுவாக 


ஒருவர் இறந்துபோனார் என்று 


சொன்னால் அவரின் கடந்தகால 


வாழ்க்கையில் அவர் ஆற்றிவந்த 


நல்ல பண்புகளைமட்டுமே 


பேசுவதுதான் நமது தமிழர் பண்பாடு 


என்பது ஒருபுறம் இருந்தாலும் கூட, 


நான் எதற்காக இந்த கட்டுரையில் 


மறைந்த நடிகை மஞ்சுளா செய்த 


தப்பான/தவறான காரியத்தை இந்த 


அளவுக்கு பட்டியல் போட்டுக் 


காட்டுகிறேன் என்று சொன்னால் 


அதற்கு முக்கியமான காரணம் நாம் 


நமது எதிர் கால வாழ்க்கையில் 


நடிகர் விஜயகுமார் செய்ததுபோன்ற 


கெட்ட காரியத்தை என் அன்புத் 


தமிழ் உடன் பிறப்புகள் யாரேனும் 


செய்துவிடக் கூடாது என்ற நல்ல 


எண்ணத்தின் அடிப்படையில் இந்த 


கட்டுரைதனை உங்கள் அனைவரின் 


சிந்தனைக்கு விருந்தாக,சீர்திருத்த 


மருந்தாக உற்றதோர் தோழனாக 


உங்களுக்கு வழங்கி உள்ளேன் என் 


அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே!! 


தொட்டுத் தாலிகட்டிய மனைவியை 


அவள் உயிரோடு இருக்கும்போது 


அவளையும் அவள் பெற்ற 


பிள்ளைகளையும் நட்டாற்றில் 


விட்டு விட்டு மற்றுமொரு 


பெண்ணோடு யாரும் தொடர்பு 


வைத்துக்கொள்ளக்கூடாது என்று 


வேண்டி விரும்பி கேட்டுக் 


கொள்கிறேன் என் அன்புத் தமிழ் 


உடன்பிறப்புகளே! அப்படி ஒரு 


பாவகரமான காரியத்தை நம்மில் 


எவர் செய்தாலும் (அடியேன் 


உட்பட)அந்த பாவத்தை கழுவ 


உலகத்தில் உள்ள அனைத்து 


புண்ணிய நதிகளிலும் நீராடி 


என்னதான் மூத்த மனைவிக்கு சட்ட 


பூர்வ நீதிமன்ற  பிரிவிற்குப் பிறகு 


வழங்கப்படும்(ஜீவனாம்சம் என்ற) 


கருணைத்தொகை தந்தாலும் கூட 


அந்தப் பாவம் நம்மை ஈரேழு 


பிறவிகளிலும் தொடரும் என்ற 


அச்சம் நிறைந்த எண்ணத்தினை 


மனதில் அனுதினமும் வளர்த்துக் 


கொள்ள வேண்டும் நேயர்களே!!         


என் பாட்டுத் தலைவன் கவியரசர் 


ஒரு பாடலில் குறிப்பிட்டு 


உள்ளதைப் போல :-



("மன்மத லீலை" என்ற படத்தில்)     


எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் 


மது அத்தனையும் சுவை ஒன்றாகும் 


சித்திரக் கிண்ணத்தில் பேதமில்லை 


உன் சிந்தையிலேதான் பேதமடா!! 


மன்மத லீலை !!மயக்குது ஆளை!!


மந்திரம் போல சுழலுது காளை!! 



என்ற பாடலின்வரிகளை எண்ணிப் 


பார்த்துக்கொள்ள வேண்டும். வான் 


புகழ் வள்ளுவர் இந்த விஷயத்தில் 


மானுடனை மிகவும் கண்டிப்பாக 


இருத்தல் அவசியம் என்று சொல்லி 


அதற்காகவே, இல்வாழ்க்கை, 


வாழ்க்கைத்துணை நலம்,பிறனில் 


விழையாமை, வரைவின் மகளிர் 


இது போன்ற மிக மிக முக்கியமான  


அத்தியாயங்களை எழுதி  நம்மை 


எச்சரித்துவிட்டுச் சென்று உள்ளார் 


என் அன்புத் தமிழ்நெஞ்சங்களே !! 



எனவே நம்மில் திருமணம் முடித்து 


மனைவி,மக்கள் என்று 


ஒற்றுமையாக வாழ்ந்துவரும் 


குடும்பஉறவுகளில்(மறைந்தநடிகை 


மஞ்சுளா போன்ற)வசந்தசேனைகள் 


குறுக்கீடு செய்திட  வருவார்கள். 


ஆண்களாகிய நாம்தான் 


அப்படிப்பட்ட பாவிகளிடம் இருந்து 


நம்மையும் நமது மனைவி மக்களை 


காப்பாற்ற வேண்டும் என்றுவேண்டி 


விரும்பி கேட்டுக்கொண்டுஇதுவரை 


எனது இந்தநீண்ட கட்டுரைதனை 


மிகமிகப் பொறுமையோடு 


படித்து உணர்ந்த என் அன்புத் தமிழ் 


உடன்பிறப்புகளுக்கு 


கோடானுகோடி வணக்கங்களை 


உங்கள் பொற்கமல பாதங்களில் 


வைத்து சமர்ப்பணம் செய்து நன்றி 


பாராட்டி அன்பு கூறி விடை 


பெறுகிறேன் நன்றி வணக்கம் 


அன்புடன் மதுரை TR. பாலு. மீண்டும் 


நாளை சந்திபோமா?

Friday 19 July 2013

கடந்த 18-07-2013 வியாழன் இயற்கையோடு கலந்து விட்ட வாலிபக் கவிஞர் வாலி கடந்து வந்த கரடு ,முரடான பாதைகள் !!




உலகம் முழுவதும் உள்ள 


உண்மைத் தமிழர்களுக்கு மதுரை 


TR.பாலுவின் வணக்கம். எமது 


வாலிபக் கவிஞர்  வாலி நேற்று 


மரணம் அடைந்ததால் மனம் 


மிகவும் வேதனைப்பட்டு கண்கள் 


குளம் ஆகி அதோடு கூட இதயம் 


கனத்து அட! என்னடா !!பொல்லாத 


வாழ்க்கை!!என்ற"தப்புத்தாளங்கள்" 


திரைப்படத்தில் மறைந்தகவியரசர் 


கண்ணதாசன் எழுதிய பாடலின் 


வரிகளுக்கு ஏற்ப வாலிபக் கவி 


வாலியின் வாழ்வும் நடந்து 


முடிந்தது. அன்னார் ஆன்மா சாந்தி 


அடைய நாம் அனைவரும் ஒருசேர 


ஒருநிமிடம் மௌன அஞ்சலி 


செலுத்தி இறைவனிடம் 


பிரார்த்திப்போம்.  மறைந்த கவிஞர் 


வாலி 1958ஆம் ஆண்டு திரைப்படத் 


துறையில் தனது கால் பதித்து 


இருந்தாலும் கூட வாலிஎன்றதொரு 


"புதுமைப்பெயர்கொண்ட கவிஞர்" 


தமிழ்த்  திரைபடத்துறைதனில் 


உள்ளே நுழைந்து வெற்றிக் கொடி 


பறக்கவிட ஆரம்பித்துள்ளார் என்ற 


செய்தியை அவருக்கு மனமதில் 


மகிழ்வோடு  நல்ல  பெயர் வாங்கித் 


தந்த படம்தான் கலைஞர் 


அவர்களால் புரட்சி நடிகர் என்ற 


பட்டம் பெற்ற மக்கள் திலகம் MGR 


நடித்து பேரறிஞர் அண்ணாஅவர்கள் 


கதை வசனம் எழுதி சிறப்பித்த       


"நல்லவன் வாழ்வான்" என்ற படம் 


மூலமாகத்தான். அதில் வாலி 


எழுதிய முதன்முதல் பாடல்தான் 


சிரிக்கின்றாய்!!இன்று சிரிக்கின்றாய் 


சிந்திய  கண்ணீர் மாறியதாலே !!   


என்ற பாடல் மூலமாகத்தான் அவர் 


பெயர் எங்கும் பரவக் காரணாமாக 


அமைந்திருந்தது என்று சொன்னால் 


அது மிகை அல்ல.அந்தப் பாடலை 


வாலி எழுதிமுடித்தவுடன் அதை 


இயக்குனர் அவர்கள் அந்தப் 


பாடலை படத்தின் வசனகர்த்தா 


பேரறிஞர் அண்ணாவிடம் ஒப்புதல் 


பெற வேண்டி அனுப்பினார். உடனே 


வாலி மனதில் பயம். எங்கே பாடல் 


தேர்வு செய்யப்படாமல் நிராகரிக்கப் 


பட்டுவிடுமோ என்று. அண்ணாஅந்த 


வாலி எழுதிய பாடலை கவனம் 


மிகக் கொண்டு ஆய்வு செய்து சில 


குறிப்புகளுடன் இயக்குனருக்கு 


திருப்பி அனுப்பினார். அப்போது 


இயக்குனரின் அருகினில் இருந்த 


வாலி தாம் எழுதி,அண்ணா 


திருத்தம் செய்த பாடலை, 


இயக்குனர் பார்க்கும் அந்தநேரத்தில் 


எட்டிப் பார்கிறார். சிவப்பு 


மைகொண்டு அண்ணா 


பலஇடங்களில் கோடிட்டு 


காட்டியும், பல வார்த்தைகளை 


வட்டமிட்டும் அடையாளம் செய்து 


இருந்ததைக் கண்டவுடன் பயம் 


அதிகரித்தது வாலிக்கு. பாடல் 


நிராகரிக்கப் பட்டுவிடும் என்றே 


மனதில் எண்ணிய வேளையில் 


இயக்குனர் வாலியின் கைகைளைப் 


பிடித்து, அய்யா,சிறப்பாக அமைந்து 


இருக்கிறது என்று அண்ணாவே 


தங்களை பாராட்டியதுடன் 


வட்டமிட்டுக்காட்டிய சில 


வார்த்தைகள் கண்டிப்பாக பாடலில் 


இடம்பெற்றே ஆக  வேண்டும் என்று 


சொன்னதை சுட்டிக் காட்டியவுடன் 


வாலியின் மனத்தில் பொங்கிய 


மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. 


அண்ணா சுட்டிக்காட்டிய 


வார்த்தைகள் ( உதய சூரியன்எதிரில் 


இருக்கயில் உள்ளத் தாமரை 


மலராதோ)   (எதையும் தாங்கும் 


இதயம் இருக்கையில் இருண்ட 


பொழுதும் புலராதோ)                           


கவியரசர் கண்ணதாசனிடம்  வாலி 


பரிசு பெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு 


நாளைய "எண்ணத்தில் 


தோன்றியவை" வலைதளத்தில் 


கண்டு மகிழ்வோம். ஒரு சிறிய             


                    "இடைவேளை"                   


நாளைசந்திப்போம்.           (தொடரும்)    

அன்புடன்.மதுரை T.R. பாலு.