Thursday 30 May 2013
Tuesday 28 May 2013
பணி ஓய்வு ஆட்சியரும்--அவர் வீட்டு பண்டாரியும்.(சமையல்காரர்)
உடல் மண்ணுக்கு !! உயிர் தமிழுக்கு !!
தமிழனாக வாழ்ந்திடுக !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!
ஆங்கிலமொழிகலப்புஏதுமின்றி!!
தமிழர்களோடு உரையாடும்போது!!
பணி ஓய்வு ஆட்சியரும் அவர் வீட்டு
பண்டாரியும்--சமையல்காரர்.
உலகமெங்கும் அன்புடனும் நல்ல
அறிவுடனும் வாழ்ந்துவரும்
என்னுயிரை விட நான் அதிகமாக
நேசித்து வணங்கிவரும் அனைத்து
அன்புத்தமிழ் நெஞ்சங்களே!!
உங்கள் அனைவருக்கும் எனது
நீண்டநாள் இடைவெளிக்குப் பிறகு
வரும் வாழ்த்துக்களுடன் கூடிய நல்
வணக்கங்கள் உரித்தாகுக.
உங்கள் அன்பிற்குரிய மதுரை TR
பாலு தமிழ் திரைபடத்துறையில்
முதன்முதலாக தனது வலதுகால்
பதித்து அந்தப்பணியில் தன்னை
முழுமையாக ஈடுபடுத்தி உள்ளதால்
அருள்கூர்ந்து நீங்கள் அனைவரும்
என்னை மன்னித்து அருள் புரிய
வேண்டும் இந்த இணையதள தமிழ்
பணிக்கு எனக்கு நேரம் ஒதுக்கிட
இயலவில்லை என்பதனை நான்
என் அன்பு இரசிகப் பெருமக்களுக்கு
அறிவித்திட கடமைப் பட்டுள்ளேன்.
இன்று எப்படியாவது ஒரு வெளியீடு
செய்திட வேண்டும் என்று ஆசை
பட்டேன். அந்த ஆசை இன்று நிறை-
வேறியது.அதற்கு அந்த ஆண்டவன்
(நான் இங்கே கடவுளைப் பற்றி குறிப்
-பிடவில்லை அன்பர்களே!இதற்கு
முன்இந்த தமிழ்நாட்டை ஆண்டவன்
என் தமிழ் தலைவர் திருக்குவளை
முத்துவேலர்கருணாநிதி அவர்கள்)
அவருக்கு நான் எனது நன்றியை
காணிக்கை ஆக்குகிறேன் அன்பு
தமிழ் நெஞ்சங்களே !! தமிழ் உணர்வு
எனக்குள் இந்த அளவு ஊற்று எடுத்த
தற்கு காரணம்அந்த தமிழ் செம்மலே
என்று சொன்னால் அது மிகையான
சொல் அல்ல. சரி நாம் இப்போது
கட்டுரைக்குள் செல்வோமா அன்பு
உள்ளங்களே !!
பொதுவாக நான் மலேசிய நாட்டில்
ஏறத்தாழ 5 ஆண்டுகட்குமேலாக
அங்கு ஜோதிடப் பணி செய்திடும்
வேளையில் அங்கு சமையல்கலை
நிபுணர்களை பண்டாரி என்றே
அழைப்பது வழக்கம்.பொதுவாக
உயர் அரசுப் பணியில் இருக்கும்
அலுவலர்கள் ஆளும் அரசைச்
சார்ந்தே வேலை செய்தால்தான்
அவர்கள் பிழைப்பு ஒழுங்காக
நடைபெறும் இதற்கு எந்த அரசியல்
கட்சியும் விதிவிலக்கு அல்ல.
அப்படி பணி செய்துகொண்டிருந்த
மாவட்ட ஆட்சியர்தான் திருவாளர்
மாதவன் ஆகும் அவர் மதுரை
மாவட்ட ஆட்சியராக இருந்திடும்
வேளையில் ( இங்கே கட்டுரையில்
குறிப்பிடும் கருத்து,நிகழ்வு,சம்பவம்
இவை எல்லாம் கற்பனை மட்டுமே)
அவர் மனைவியை இழந்தவர்.
ஆகவே தனது உணவுத்தேவைகளை
கவனித்துக்கொள்ள சமையல்காரன்
சற்குணம் என்பவரை பணியமர்த்தி
வாழ்ந்து வந்தார்.அவர் மாதவன்
இருக்காரே ஒரு பெரும் போஜனப்
பிரியர். அதனால் தினமும் அவரின்
மத்திய உணவினில் ஒரு துவரம்,
ஒரு கூட்டு,அவியல்,பச்சடி,ஊறுகாய்
அப்பளம்,வடை,பழம்,பாயாசம்,ரசம்,
சாம்பார்,வத்தக்குழம்பு,தயிர்,இது
போல உணவு வகைகள் கட்டாயம்
இருக்க வேண்டும் என்பது ஆட்சியர்
அவர்களின் கட்டளை பண்டாரிக்கு.
அதாவது சமையல்காரருக்கு.
அவரும் நீங்கள் சொல்வதே எனது
பணி என்று அனுதினமும் செய்துவர
ஆட்சியரும் அவருக்குப்பிறகு நம்
சமையல்கலை நிபுணரும் வயிறார
சாப்பிட்டுவந்தன்ர்.இப்போதுதான்
விதி தனது விளையாட்டை துவக்கு
கிறது அன்பர்களே !! எப்படி என்று
கேட்கிறீர்களா?
பணியில் இருந்து ஆட்சியர் ஓய்வு
பெரும்வயதினை அடைந்து
விட்டார்கடந்த மாதம் 3௦ம் தேதி
அன்று பணி ஓய்வு பெற்று அந்த
பிரிவுஉபசாரவிழாவும் சிறப்பாக
நடந்தது. வீடு திரும்பிய ஆட்சியர்
மாதவன் ( பணி ஓய்வு ) தனது
சமையல்களை நிபுணரை அழைத்து
ஐயா இனிமேல் எனக்கு வரும்படி
குறைந்துவிடும்.எனவே நாம் நமது
செலவினங்களை குறைத்திட
வேண்டியது மிக மிக அவசியம்.
முக்கியமாக பணியில் இருப்பவர்
ஒருவகைக்கறி வைத்து சாப்பிட
தகுதி படைத்தவர்,அருகதை உள்ள
நபர். எனக்கு அந்த தகுதி இன்றோடு
போய் விட்டது. எனவே நீ நாளை
முதல் ஒருநாள் சாம்பார் வை.
மறுநாள் ரசம் வைக்கலாம். ஒரு
பொரியல் மட்டும் போதும் தினமும்.
மட்றபடி இந்த அவியல்,கூட்டு,பச்சடி
வடை,பாயாசம்,அப்பளம் இது
எல்லாம் எனக்கு செய்திடாதே. ஏன்
என்றால் எனக்குத்தான் வேலை
போய் விட்டதே என்று முன்னாள்
ஆட்சியர் மிகுந்த மன வருத்ததோடு
ஆதங்கத்துடன் கூறினார். உடனே
சமையல்காரரும் ஐயா நீங்க என்ன
செய்யச் சொல்றீங்களோ அதை
செய்து தருவதுதான் எனது வேலை.
எனக்கு நீங்க சொன்ன அந்த கருத்து
மிகவும் பிடிச்சிருக்கு என்றார்.
முன்னாள் ஆட்சியர் எது என கேட்க
இவர் (சமையல்காரர் ) பணி ஓய்வு
பெற்றவன் ஒருவகைக் கறி சாப்பிட
கூடாது என சொன்னதும் பணியில்
இருப்பவனுக்கே அந்த தகுதி உண்டு
எனசொன்ன அந்தக் கருத்து
உண்மையிலேயே எனக்கு ரொம்ப
பிடிச்சிருக்கு ஐயா என்றார்.
நாட்கள்சென்றனமுதலாளி சொன்ன
படியே சமையல்காரர் சமைக்க
அதை முன்னாள் ஆட்சியர்
சாப்பிட,இப்படியே பல மாதங்கள்
உருண்டு ஓடின.
ஒருநாள் ஆட்சியர் உணவு உண்ட
பின் அலுவலகம் வரை சென்று தன்
பணிஓய்வு வருமானங்கள் பெற
தேவையான அனைத்தும் செய்திட
வேண்டிசீக்கிரமேசாப்பாடு சாப்பிட்டு
விட்டு வீட்டை தாப்பாள் போட்டுக்
கொள்ள மறவாதே என சமையல்
காரர் வசம்சொல்லிவிட்டு சென்றார்.
அலுவலகம் சென்றபின்தான் அவர்
கவனித்தார்.ஒரு முக்கியமான
கடிதம் அதனை வீட்டில் வைத்து
விட்டு வந்ததை. உடனே கொண்டு
வருவதாகசொல்லிவிட்டு மிகவும்
அவசரத்துடன் வீட்டுக்கு வந்து
பார்கிறார். கதவு தாள் போடப்பட
வில்லை. பைய உள்ளே சென்று
பார்க்கிறார். சமையல் அறையில்
அவர் கண்ட காட்சி அவரை நிலை
குலைய வைத்தது. அப்படி அவர்
என்னதான் கண்டார் ? தெரிந்து
கொள்ள ஆவலாக உள்ளதா ?
சொல்கிறேன். ஆட்சியர் பணியில்
இருந்தபோது என்னென்ன ஓர்வகை
கறி செய்து சாப்பிட்டாரோ அவை
அத்தனையையும் சமையல்காரன்
தனிஒரு ஆளாக சாப்பிடுவதைக்
கண்டு அதிர்ச்சி அடைந்தார். டேய்
நான் என்ன சொன்னேன்.நீ என்ன
செய்கிறாய்? என வினவினார்.
உடனே சமையல்காரன் ஐயா நீவிர்
என்ன சொன்னீரோ அதைத்தான்
நான் செய்து உள்ளேன் என்றான்.
எப்படி? என ஆட்சியர் கேட்க அவர்
சொன்ன அதே உபதேசத்தை இப்போ
சமையல்காரன் அவருக்கே திருப்பி
உபதேசித்தான்.
ஒருவன்பணியில் இருக்கும் வரை
மட்டுமே ஒருவகை கறி உண்ண
தகுதி படைத்தவன் என்றுதானே
சொன்னீர்கள். எனக்கு சமையல்
பணி நடந்துகொண்டுதான் உள்ளது
நான் எப்போது அதில் இருந்து பணி
ஓய்வு பெருகிறேனோ அப்ப நீங்க
சாப்பிடுறமாதிரிநான் சாப்பிடுவேன்
என்று சொன்னதைகேட்டு அந்நாள்
ஆட்சியருக்கு அழுவதா சிரிப்பதா
தெரியவில்லை. உங்களுக்கு
ஏதாவது தெரிந்தா நீங்களாவது
கொஞ்சம் சொல்லுங்க தயவு செய்து
நான் போயிட்டு வருகிறேன்.நன்றி !!
வணக்கம் !! அன்புடன் மதுரை
T.R.பாலு.
Sunday 19 May 2013
சாதிகள் இல்லையடி பாப்பா !!--மீண்டும் ஒரு விளக்கம் !!
உடல் மண்ணுக்கு !!
உயிர் தமிழுக்கு !!
தமிழனாக வாழ்ந்திடுக !!
தனித்தமிழில்மட்டுமே பேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள்
நடுவினில் உரையாடிடும் பொழுது!!
(அன்பர்களே !! மீண்டும் நமது தாய் நாட்டினில் சாதிக்கலவர மேகங்கள் வானில் கரு மேகங்களாய் சுற்றிச் சுற்றி வருகிறது. அந்த பொல்லாத வலையினில் சீக்கி சீரழிந்த பெண்கள் பலர் நம்மிடையே உண்டு.மீண்டும் வன்முறை வெடித்து சிதறிடக் கூடாது என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்).
உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என்
உயிரினும் மேலான அன்புத்தமிழ்
நெஞ்சங்களே !! அனைவருக்கும்
எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
அதனுடன் கூடிய வணக்கமும்.
இன்றைய தினம் சமூகத்தில் உள்ள
மிகமிக முக்கியமான விஷயமே
இந்தஜாதி என்னும் "தீ" தான். அந்தக்
கால சங்க இலக்கியங்களில் இந்த
ஜாதி என்ற பிரச்சினைதனை ஒரு
பாடலில் மிக அழகாக கையாண்டிரு
-ப்பதை இந்த பாடலில் பாருங்கள்
அன்பர்களே !!
நீரளவே ஆகுமாம் நீராம்பல் !
தான்கற்ற நூல்அளவே ஆகுமாம்
நுண்ணறிவு !!
மேலைத்தவத்தளவே ஆகுமாம்
தான் பெற்ற செல்வம் !!
குலத்தளவே ஆகுமாம் குணம் !!
இந்தப் பாடலில் குறிபிடப்பட்டுள்ள
குலம் என்பதற்கு ஜாதி என்ற
பொருள் என்பது கிடையவே
கிடையாது அன்பர்களே !!
இந்த ஜாதி என்னும் தீ மனிதனால்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகா
கொடுமையான ஆயுதம்தான் இது !!
அடுத்து வந்த தமிழ் மூதாட்டி என்ன
பாடினாள் என்றால் :-
ஜாதி இரண்டொழிய வேறில்லை !
சாற்றுங்கால்
மேதினியில் இட்டார் பெரியோர்
இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கியில் உள்ளபடி !!
அது என்ன பொருள் என்றால்
உலகில் இரண்டு ஜாதிகள் மட்டுமே
உண்டு. அந்த இரண்டு ஜாதிகள்
எவை என்று கேட்டால்
கஷ்டப்படுவோர் இனம் பார்த்து
அவர்களுக்கு தான தர்மம் செய்து
அவர்களை வாழ வைத்திடுவோர்
எல்லோரும் உயர்ந்த பிரிவினைச்
சேர்ந்தவர்கள் அதேநேரம் தம்மிடம்
எவ்வளவு வசதிகள் வாய்புகள்
இருந்த போதிலும் மனம் ஈகை வசம்
இல்லாத கஞ்சர்கள் இழிந்த
கீழான குலத்தினைச் சேர்ந்தவர்கள்
என்றும் அது அவரவர்கள் எண்ண-
ப்படி என்றும் தமிழ் மூதாட்டி
நம்மிடம் கூறியுள்ளதை நாம் இங்கே
நினைவில் வைத்துக் கொள்ள
வேண்டும் அன்பர்களே.
அதன் பின்னர் வந்த முண்டாசுக்கவி
என் அய்யன் பாரதி என்ன
சொன்னான் என்றால் :-
வெள்ளை நிறத்திலொரு பூனை
எமது வீட்டில் வளருது கண்டீர்!
பிள்ளைகள் பெற்றது அப்பூனை
அவை பேருக்கொர் நிறமாம் !!
சாம்பல் நிறம் ஒரு குட்டி !!-கருஞ்
சாந்து நிறம் ஒரு குட்டி !! பாலின்
நிறம் ஒரு குட்டி !! நல்ல பாம்பின்
நிறம் ஒரு குட்டி !!
எந்த நிறம் இருந்தாலும் அவை
யாவும் ஒரே தரமன்றோ ?
இந்த நிறம் சிறிதென்றும் இது
ஏற்றம் எனக் கொள்ளலாமோ ?
என மிக அருமையாக
சாதிகொடுமையை சாடி இருப்பது
கண்டும் இன்னும் இந்த மானிட
இனம் திருந்திட மறுப்பதும் ஏனோ ?
ஆனால் அன்பர்களே !! என்னை
பொறுத்தவரை இந்த அவனியில்
இருப்பது இரண்டே இரண்டு சாதிகள்
மட்டுமே.
உக்கும் !!. எங்களுக்கு என்ன இது
தெரியாதோ !! நீங்க வேற இது என்ன
புதுசா சொல்ல வந்துட்டீக.ஆண்
சாதி பெண் சாதி அதானே!!
ஐயோ.ஐயையையோ.கொஞ்சநேரம்
சும்மா இருக்க மாட்டீகளோ !! நான்
என்ன சொல்ல வரேன் என்றால்
கையிலே இருக்குற பணத்தை எப்படி
எப்படி எல்லாம் செலவு பண்ணலாம்
என்ற எண்ணத்தில் வாழ்ந்து
வருவோர் ஒரு ஜாதி !!, உலகினில்
வாழ்வதற்கு எப்படி எப்படி எல்லாம்
கஷ்டப்பட்டு பணம் ஈட்டி உயிர்
வாழ்வது என்ற என்ற மன வேதனை
எண்ணத்தில் வாழ்ந்து வருவோர்
அடுத்த ஜாதி !! ஆக இந்த இரண்டே
இரண்டு ஜாதிகள் மட்டுமே உண்டு
இந்த அவனியில்என்ற எண்ணமதை
நாம் நம் மனதில் வளர்த்துவந்தால்
இந்த நாட்டினில் இருந்து கொழுந்து
விட்டு எரியும் ஜாதி எனும் தீயை
நாம் அணைத்துவிட முடியும்.
அன்பர்களே !!நேற்றைய தினம்
கிறிஸ்தவர்கள் வேதக் கோவிலின்
சுவர்களில் எழுதப்பட்ட வாசகம்
உண்மையிலேயே என்
சிந்தனையை கவர்ந்தது.
கனி தரா தனி மரம்,வற்றிய குளம்,
கற்பசு, ஈயாத மனங்கொண்ட
மனிதன்,இனம்பிரித்து(ஜாதிசொல்லி
குணம் பார்க்கும் கோரம் !!
இவைகள் போல பற்பல சமூக
நெறிதனை பறைசாற்றிடும் வாசகங்
-கள் எனது கருத்தைக்
கவர்ந்தது.இப்போது மீண்டும் இந்த
சாதிப்பிரிவு போராட்டம் தலை
தூக்கிடுவதை கண்டித்து 19-௦5-2௦13
அன்று பதிவு செய்திருந்த கட்டுரை
"சாதிகள் இல்லையடி பாப்பா" என்ற
தலைப்பினில் வெளிவந்த அதே
கட்டுரையை சற்று மாறுதல் செய்து
உங்கள் முன்னிலையில் சமர்ப்பிக்க-
முடிவு செய்தேன். அதனை இப்போது
செயல் மூலமாக அறிவிப்பதில் நான்
மிகுந்த மனமகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்கு நாம் எல்லோரும் ஒன்று
சேர பாடுபட்டு மனத்தை
செம்மையாக வைத்து வாழ்ந்து
வந்தோம் என்றால் முடியாதது
என்று இந்த உலகினில் எதுவுமே
இல்லை என்பதே எனது
"எண்ணத்தில் தோன்றிய" கருத்து.
அதனை உங்களிடம் பகிர்ந்து
கொள்வதில் நான் மிகவும் மன
மகிழ்ச்சிஅடைகிறேன் அன்பர்களே !!
மீண்டும் நாளை சந்திப்போமா?
ஜாதிகள் இல்லையடி பாப்பா !!
குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல்
பாவம் !!
நன்றி ! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
Thursday 16 May 2013
உண்மையான அர்த்தம் !!--சம்சாரம் அது மின்சாரத்திற்கு !!
தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!
(ஆங்கிலமொழிகலப்பு ஏதும் இன்றி )
(தமிழர்கள் நடுவே உரையாற்றிடும் போதாவது)
உடல் மண்ணுக்கு !உயிர் தமிழுக்கு!!
உலகெங்கிலும் வாழ்ந்துவரும்
எனது உயிரினும் மேலான அன்புத்
தமிழ் நெஞ்சங்களே !!
முதலில் உங்கள் அனைவருக்கும்
எனது பணிவான வாழ்த்துக்களுடன்
கூடிய வணக்கங்கள் பல !!
இன்றைய தினம் " எண்ணத்தில்
தோன்றியவை " வலை தளத்தில்
நான் சற்று மாறுபட்ட கோணத்தில்
உங்கள் சிந்தனைக்கு விருந்தாக நல்
சீர்திருத்த மருந்தாக ஒரு சராசரி
மனிதன் ஒவ்வொரு தினமும் நேரு-
க்குநேர் நின்று சந்திக்க உள்ள ஒரு
விஷயத்தினைப்பற்றிசற்றுவிரிவாக
அதேநேரம்சற்றுவிளக்கமாகஉங்கள்
முன் ஆராய்ச்சிசெய்துஅதன் பின்னர்
தீர்ப்பினை வழங்கிடும்நீதிபதிகளாக
நீங்கள் இருக்கிறீர்கள் என்பதனை
உங்களுக்கு தெரிவித்துக் கொள்வது
உங்கள்அன்பன் மதுரை TR.பாலு
எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
பொதுவாக இங்கே தலைப்பினில்
குறிப்பிடப்பட்டுள்ள விஷயத்திற்கு
அர்த்தம் என்ன,யாரிடமாவது நீங்கள்
இங்கே கேட்டுப்பார்த்தால் பத்து
பேரில் எட்டு பேர் தரும் விடை
தவறாகவே உள்ளது. ஆனால் நான்
உங்களுக்கு சொல்வேன் சரியான
விடை எது என்று.
மின்சாரம் என்பது நம்மை தாக்கி
நெருங்குகின்ற பொருட்களை
தொடும் நபர்களை அதிர்வலையில்
வீழ வைத்திடும் தன்மை படைத்தது.
அதுபோலவே சம்சாரம் என்பவள்
அவளை நாம் மிக நெருங்கி தொடும்
வேளையில் நாமும் அதே அதிர்வு
அலைதனில் வீழ்ந்திட வேண்டியே
வரும் என்று பத்துப் பேரில் எட்டு
பேர் சொல்லுவார்கள் அன்பர்களே !
ஆனால்உண்மைஅர்த்தம்அது அல்ல
அன்பர்களே !!
மின்சாரத்தினைப் போலவே மிகவும்
முக்கியமானவள் சம்சாரம். எனவே
மின்சாரம் இருக்கிறவரை நாம்
அதைப்பற்றி கவலையேதும் இன்றி
வாழ்ந்துவருகிறோம்அன்பர்களே!!
அதுபோலவே சம்சாரம் என்பவள்
நமது அருகில் உள்ளவரை அவளது
முக்கியத்துவத்தினை கணவர்கள்
அனைவரும் உணராமலே வாழ்ந்து
வருகின்றோம்.
மின்சாரம் போன பிறகுதான் அந்த
மின்சாரத்தின் மகத்துவம்/தேவை
நமக்கு எல்லோருக்கும் புரியவரும்.
அதேபோலவே சம்சாரம் உயிருடன்
உள்ளவரை அவளின் மகத்துவம்
அந்த நடமாடும் தெய்வத்தின் மதிப்பு
யாருக்கும் எவருக்கும் புரிவதாக
இல்லவே இல்லை அன்பர்களே !!
சுத்தமாக மின்சாரம் போன பின்
தான் மெழுகுவர்த்தி எடு.தீப்பெட்டி
எங்கே? காற்றே இல்லையே!!
விசிறியை எங்கே ?இதுபோலபலபல
பேச்சுக்கள் நமது வாயில் தானாக
வரும் அன்பர்களே !! சிரமங்களை
நாம் அதுமுதல்தான் உணருகிறோம்.
அது போலவே தான் மனைவி உயிர்
பிரிந்த பிறகே அவள் நமக்காக, நம்
குடும்பத்திற்காக, எவ்வளவு தூரம்
உழைத்து பாடுபட்டு இருந்தாள்
என்பதை உணர்கிறோம். அப்படி
நினைக்காதவர்கள் மனிதப்
பிறவியே அல்ல அன்பர்களே !!
ஆகவே எனது அன்புத் தமிழ்
நெஞ்சங் களே !! மனைவியை
நேசியுங்கள் !!.உங்கள் இதயக்
கோவிலில் வைத்து பூஜியுங்கள் !!
அவள் மனம் நிம்மதிபெற்றால்
மட்டுமே உங்கள் வாழ்வு வளமான
வாழ்வாக மலரும். அவள் ஒரு
தியாக தீபம். நமக்கு இறைவன் தேடி
அளித்திட்ட மந்திரி.அவள் இல்லை
எனில் நாம் எல்லாம் எந்திரிக்க
வேண்டியதுதான். இதனை எல்லாம்
உங்கள் அனைவரின் மனதில் பதிய
வைத்துக்கொள்ளுங்கள் அன்பர்கள்
யாவரும்.இதுவரைஇப்படிஇல்லை
என்றாலும் இனியாகிலும் நாம்
எல்லோரும் மனைவியை மதித்து
அவளை நேசித்து பின் அவளை
பூஜித்து அவளிடம் ஒவ்வொரு
விஷயத்தையும் ஆலோசித்து நமது
வாழ்க்கைதனை வளமானதாக
மாற்றிக்கொள்வோமா அன்பர்களே?
மற்றபடி முடிவு உங்கள் கையில்.
ஏன் என்றால் நீங்களே நீதிபதிகள் !!
வாழ்க வளர்க !! நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
Subscribe to:
Posts (Atom)