உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
தமிழனாக இரு!!
தமிழர்களிடம்தமிழிலேயேபேசுக!!
இது இப்போது மிகவும் அவசியம் !!
கொள்கை எல்லாம் பணத்திற்கு
பிறகுதான் !!
அன்பிற்கு உரிய உலகம் எங்கும்
வாழ்ந்து வரும் எனது பாசத்துக்கு
உரிய தமிழ் இனப் பெருமக்களே!
முதற்கண் உங்கள் அனைவருக்கும்
வணக்கம்.
சென்ற ஆண்டு ஏப்ரல் இந்தியாவில்
மிகவும் பிசியான விஷயம்
எது என்றால் I.P.L. என்று
சொல்லப்படும் இந்தியன்
பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும்
மட்டைப் பந்து (CRICKET)
விளையாட்டுத்தான்.ஏப்ரல்மாதம்
3ம்தேதி துவங்கி மே மாதம் 26ம்தேதி
வரை முழுப் பரீட்சைக்கு
படித்துகொண்டிருக்கும்மாணவர்கள்
படிப்பில் மண் அள்ளிப்போடும்
அரசாங்கத்தின் ஏற்பாட்டுக்கு
முதலில் ஒரு கோவிந்தா போடுங்க.
அப்புறம் ஏற்கனவே போன வருஷம்
வரை இங்கே டெக்கான் சார்ஜெர்ஸ்
என்ற பெயரில் வலம் வந்த
அணி என்ன காரணத்திற்காகவோ
கோவிந்தா ஆன பிறகு இங்கே
தொலைக்காட்சி நிறுவனத்தில்
மிகப் பிரபலம் அடைந்திட்ட ஒரு
நிறுவனம் கோவிந்தா ஆகிப் போன
டெக்கான் அணியை ஏறத்தாழ
ரூபாய் 85 கோடிகளுக்கு ஏலம்
எடுத்து இப்போது அந்த
அணியும்இந்த IPL
குழுவில்இடம்பெற்று இந்தியா
எங்கும் விளையாடி வர உள்ளது.
(ஆனால் நம்மைப் போன்ற
பெரும்பான்மையான தமிழ் இன
மக்கள் தெரிந்த கோடி எல்லாம்
தெருக்கோடி மற்றும்
வேட்டி சேலையில் கோடி இதுதான்
நாம அறிந்தது.)
இந்தஅணிக்கு யார்தெரியுமா
அன்பர்களே தலைமை
தாங்கி நடத்துவது
"குமார்சங்கக்காரா " என்ற பெயர்
கொண்ட சுத்தமான
இலங்கைக்காரர். அது மட்டும்
அல்ல.அந்தஅணியில்இன்னும்ஒரு
வீரரும் உண்டு.இலங்கை நாட்டைச்
சேர்ந்த "திஸ்ஸரா பெரைரா ".
தமிழ்நாட்டில்இலங்கைத்தமிழர்
ஆதரவுபோராட்டம்
மிகத் தீவிரம் அடைந்தவுடன்
இலங்கை நாட்டைச்
சேர்ந்தவீரர்கள் யாரும் இந்த
தமிழ்நாட்டு மண்ணில்
விளையாட அனுமதி மறுக்கப்
பட்டதினால் அந்த
விளையாட்டு அட்டவணை மாற்றப்
பட்டு எல்லாம்சென்னைக்கு
வெளியில் நடத்தப் படுகிறது.
சரி இப்ப நாம தலைப்பு
விஷயத்திற்கு வருவோம்.
1952ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி
கணேசனை அறிமுகம் செய்வித்து
வெளிவந்த படம் தான் நமது
முத்தமிழ் அறிஞர் ,
தமிழ்இனக்காவலர்,முன்னாள்
முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி
அவர்களது கை வண்ணத்தில்
அவரது தீப்பொறி பறக்கும்
வசனத்தில் உருவாகி மறைந்த
கிருஷ்ணன் பஞ்சு
இரட்டை இயக்குனர்களால்
வெற்றிகரமாக இயக்கி
வெளிவந்த படம் தான் " பராசக்தி ".
அந்தப் படத்தில் சிவாஜி கணேசன்
பைத்தியம் போலதன்னை மாற்றிக்
கொண்டு நடிப்பார்.
அப்போது பாடும் பாட்டுத்தான்
தலைப்பாக இங்கே
தரப்பட்டுஉள்ளது என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே.
பாடலை முதலில் பாருங்கள்:-
" தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை
எல்லாம் காசு முன் செல்லாதடி
குதம்பாய்.
காசு முன் செல்லாதடி.
ஈசனும் ஈசனார் பூசையும்
என்றைக்கும் காசுக்குப்
பின்னாலே குதம்பாய்.
காசுக்குப் பின்னாலே.
ஆரியக் கூத்தாடினாலும்
தாண்டவக்கோனே
காசுக் காரியத்தில்கண்வையடா
தாண்டவக்கோனே
பிணத்தைக் கட்டி அழும்போதும்
தாண்டவக்கோனே
பணப் பெட்டிமேலே கண் வையடா
தாண்டவக்கோனே "
என அந்த பாடல் வரிகள் உண்மை
தத்துவத்தை
உணர்த்தும் விதமாக
அமைந்திருந்தது. அந்த
பாடலை அந்த படத்தில் வைத்து
பெருமை பெற்ற அருமை
தாத்தாவின் கொள்கையை இந்தக்
காலப்பேரப்பிள்ளைகள்எவ்வளவு
திறம்பட செயல் படுத்துகின்றனர்
பாருங்கள் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே.
ஈழத்தமிழர் வாழ்வு மட்டுமேஎங்கள்
உயிர் மூச்சு.
அவர்கள் நலம் காப்பது மட்டுமே
நாங்கள் பேசும் பேச்சு.
இது தாத்தாவின் கொள்கை.
ஆனால் பேரப்பிள்ளைகள் ஆரியக்
கூத்தாடினாலும்
தாண்டவக்கோனேகாசுகாரியத்தில்
கண் வையடா
தாண்டவக்கோனே என்ற
கொள்கையில் எவ்வளவு
உறுதியாகஇருக்கிறார்கள்என்பனை
எண்ணுகின்ற போது எனது
நெஞ்சில் மட்டுமல்ல கண்களிலும்
உதிரம் வடிகிறது அன்புத் தமிழ்
நெஞ்சங்களே.
விளையாட்டில் கூட நம் தமிழ் இன
எதிரி இங்கே
வரக் கூடாது விளையாடக் கூடாது
இது தாத்தா கொள்கை. ஆனால்
போட்ட மூலதனம் ரூபாய்
எண்பத்தி ஐந்து கோடிகளை எப்படி
இரட்டிப்பாக ஆக்குவது என்பது
பேரர்களின் கொள்கை.
இதுதான் இங்கே உண்மைத் தமிழ்
இயக்கத்தின்செயல்பாடுஅன்பர்களே.
அந்த ஆண்டவன் இவர்களை
மன்னிப்பாராக !!
நெஞ்சு பொறுக்குதில்லையே
நெஞ்சு பொறுக்குது இல்லையே
இந்தநிலை கெட்ட மனிதரை
நினைந்து விட்டால் நெஞ்சு
பொறுக்குதில்லையே என்று
மற்றும் ஒரு பாடல் அதே பராசக்தி
திரைப்படத்தில் வருகிறது அன்புத்
தமிழ் நெஞ்சங்களே.
பார்த்துக் கொள்ளுங்கள் உலகத்தை.
வாழ்க தமிழ் இனம்.வெல்க
அவர்களது தமிழ் ஈழப்
போராட்டம்.
நன்றி. வணக்கம்.
அன்புடன் மதுரை TR. பாலு.
No comments:
Post a Comment