Thursday, 18 April 2013

மனிதனின் குரங்கு மனத்தினை அடக்கிட வழியுண்டோ ?



தமிழர்களாக இருங்கள் !!

(தமிழர்களிடமாவது)

தமிழிலேயே பேசுங்கள் !!


அன்பும் பண்பும் இணைந்து நிறையப் பெற்ற எனது 

உயிரினும் மேலாக நான் போற்றி வணங்கி வரும் 

அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!  முதலில் உங்கள் 

அனைவருக்கும் என் இதயம் கனிந்த வணக்கங்கள்!!


இன்றையதினம் உங்கள்அனைவருக்கும்நான்தரும்

இனிய  கட்டுரை  "எண்ணத்தில் தோன்றியவை "

வலை தளத்தில் "மனிதனின் குரங்கு மனத்தினை 

அடக்கிட வழியுண்டோ "என்னும் தலைப்பினில்

ஒரு மாபெரும் சிந்தனை மேடை, அதில் சிந்திடும் 

தேன் துளிகள், உங்களின் அறிவுப் பசிக்கு நீவிர் 

பருகிடும் அந்த சுவைமிகு விருந்தினை யாவரும் 

உண்டு களித்திட வேண்டுமாய் அந்த மகேசன் 

எனக்கு இட்ட அந்த அறிவுக் கட்டளைதனை 

எவர்தான் மீறிட இயலும் அன்பர்களே !!


பொதுவாக மனிதனின் ஆதி வரலாறை நாம் உற்று 

கவனித்தோம் என்று சொன்னால் அங்கே நமது இன 

வரலாறு எவ்வாறு கணிக்கப் பட்டுள்ளது என்று

பார்த்திடும்போது அன்பர்களே நமது "ஆதிமூலம் " 

என்றுநம்மைநாம்எப்போதும்எண்ணுவது என்பது 

சந்தேகத்திற்கு இடமின்றி குரங்கின் இனம்தான் 

அன்பர்களே !! குரங்கு என்னும் இனத்தின் சரியான 

பரிணாம வளர்ச்சியே மனித இனம் என்பதனை 

நமக்கு பல்வேறு சரித்திர/மருத்துவ ஆய்வுகளும் 

ஆராய்ச்சிகளும் நிரூபித்து உள்ளதாக அந்தந்த 

ஆய்வாளர்களும் முனைவர்களும் பல்வேறு கால 

கட்டங்களில் அந்த உண்மைகளை நமக்கு அவர்கள் 

அறிவித்துஉள்ளார்கள்என்பதில் இரு வேறு கருத்து- 

-களுக்கு இடமில்லை அன்பர்களே !!


இதனால்தானோ என்னவோ அந்தக் காலத்தில் 

வெளிவந்த "தூக்குதூக்கி" திரைப்படத்தில் கவிஞர் 

தஞ்சை ராமையா தாஸ் எழுதிய பாடல் ஒன்றில் 

" குரங்கில்இருந்து பிறந்தவன் மனிதன்.கொம்பேறித்

தாவும் குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன்" என்ற

மிகவும் பிரபல அடைந்த பாடலின் வரிகள் நமக்கு 

அந்தக் கருத்தினைநினைவூட்டுவதாகவேஅமைந்து 

உள்ளது என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட சொல் 

அல்ல அன்பர்களே !!


ஆக நமக்கு இந்த "ஆதிமூலத்தின்" அந்த அழகிய 

அவதாரத்தின்அறிவுச்சுடர்(குரங்கின் புத்தி)பல்வேறு

கட்டங்களில் நம்மிடையே மிளிர்ந்தும் ஒளிர்ந்தும் 

காணப் படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றே 

ஆகும்.  அவை எவை எவை என்று சற்று அலசி நாம் 

ஆராய்ந்து பார்ப்போமா நேயர்களே !!


சரி !! இப்போது நாம் கட்டுரைத் தலைப்பின் உள்ளே 

செல்வோம்நேயர்களே !!அன்றாடம் நாம் சந்திக்கும்

ஒவ்வொரு நிகழ்வினிலும் நீங்கள் உற்று கவனம் 

செலுத்தினீர்கள் என்றால் அந்த ஆதிமூலவரின் 

அரும் பெரும் செயல்கள் மானிடனின் அனைத்து  

செயல்களிலும் கலந்து உள்ளதனை நான் உங்கள் 

அனைவரது சிந்தனைக்கும் கீழே குறித்துள்ளபடி 

விபரமாக விளக்கி வெளிப்படுத்தி உள்ளேன்.

அதை நீங்கள் சற்று அதிக கவனம் செலுத்தி நீங்கள் 

படித்திட வேண்டும் அன்பர்களே !!


1)   உணவகங்களில் நாம் நமக்கு தேவையான 

உணவுகளைவாங்கிஉண்ணத்துவங்கிடும்வேளை 

நமக்கு எதிர் புறம் அமர்ந்துள்ள/ அருகாமையில் 

உள்ள மேசையில் இருக்கும் மனித "ஆதிமூல " 

உறவுகள் கடைகண்ணில் நம்மை நோக்கிவீசும் 

விழிஅம்புகளில்கொம்பேறித்தாவும்அந்த இனத்தின்

தாக்கம் நம்மிடையே இருக்கிறது என்பது நமக்கு 

புலப்படுத்தும் வழிகளில் ஒன்று.


2)   வெளிஊர் நாம் பேருந்துகளில் நமது வாழ்க்கைத் 

துணை நலத்துடன் செல்லும்போது பின்புறம் உள்ள 

இருக்கையில் அமர்ந்து உள்ள அந்தநபருக்கு 

கொம்பேறித்தாவும் இனத்தின் குணம் இருப்பதன்   

விளைவுநைசாகபக்கவாட்டில்கையைஉள்ளே

விட்டு ஊராரின்உடமையில்ஆசைப்படுவதில் 

நமக்கு அந்தகுணம்இருப்பது அதனைத் 

தெரியப்படுத்தும் "நல்லவழிகளில்"மற்றொன்று.


3)   கடைவீதிகளில் பொருள் வாங்க செல்லும்போது

கடைக்காரர் அசந்து உள்ள போது அவருக்கு தெரிய 

வராமல்அவரதுபொருட்களில் எது நமது கைக்கு 

அகப்படுகிறதோ  அதனை அப்படியே சுருட்டி 

"ஆட்டையைப்" போடும் நடவடிகைகளில் நாம் 

அந்த கொம்பெறித்தாவும் வர்கத்தின் உண்மை 

வாரிசுகள் என்பது தெள்ளத்தெளிவாகதெரிய 

வரும் வழிகளில் மேலும் ஒன்று.

4)   பக்காப்படிக்கு முக்காப்படி அளப்பதிலே, மேலும் 

பல்வேறு கலப்படம் செய்து பொருள்ஈட்டும் "நல்ல"

குணத்தில் தெரியவருவது நாம் அந்த இனத்தின் 

வழித் தோன்றல்தான் என்பது முற்றிலும் உண்மை.


5)  நம்பிய நண்பனை அவன் அசந்து இருக்கும் 

வேளையில் அவனுக்குத் தெரியாமல் அவனது 

கருவறுக்கும் செயலின் இந்த மனிதன் என்னும் 

போர்வையில் வாழ்ந்திடும் அந்த "ஆதிமூலம்"

ஈடுபடும் போது சந்தேகத்திற்கு இடமின்றி அவன் 

"அவனே" என்பது நிரூபணம் ஆகிறது அன்பர்களே.


6)  அதனால் தான் மக்கள் திலகம் நடித்த ஒரு படம் 

"ரிக்ஷாக்காரன்"  அதில் கவிஞர் வாலி எழுதி மெல்-

இசைமன்னர்இசை அமைதிட்ட பாடல்  அந்த இனிய 

பாடல் திரு T.M.சவுந்திரராஜன் அவர்களால் பாடப்-

பட்டு திரைப்படத்தில் MGR அவர்களால் வாய் 

அசைக்கப்பட்ட வரிகளில் கூட இந்தக் கருத்து 

அங்கே பதிவு செய்திடப் பட்டுள்ளது அன்பர்களே.

"மனிதன் என்ற போர்வையில் மிருகம் வாழும் 

நாட்டிலே ! நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி 

வைப்பார் ஏட்டிலே" !! என அந்த பாடல் வரும்.


ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக 

சிந்தாமணி என்னும் நூலில் என்ன குறிப்பிடப்பட்டு

உள்ளது என்றால் அன்பர்களே :-


வன்மன வணிகர்தங்களைப்படைத்து "வானரங்கள்"

என்செய்திடப் படைத்தாய் ?

பெண்என்னும்இனம்தனைப்படைத்துப்பின் பேய்கள்

என் செய்திடப் படைத்தாய் ?

என்று குறிப்பிடுவதில் இருந்தே நாம் அந்த வழித் 

தோன்றலேஎன்பது இங்கே ருசுவாகப்பட்டு உள்ளது  

அன்பர்களே.  ஆகவே மனிதனின் தினசரி நடவடிக்-

கைகளில் "ஆதிமூலத்தின் பங்கு" அதன்வழி வரும் 

நிகழ்வுகள்,  இதையாராலும்  தடை  செய்திடவே 

இயலாதது என்பதில் இருவேறு கருத்துகளுக்கு 

இடமில்லை !! அன்பர்களே !!


இறுதியாக ஒரு சிந்தனை சிறுகதையுடன் எனது 

இந்த அறிவாய்ந்த கட்டுரைதனை நான் நிறைவு 

செய்திடலாம் என்றே கருதுகிறேன் !!



சிறு கதை !!


ஒரு ஊர் பஞ்சாயத்து தலைவர்.  நல்ல அறிவாளி.

பொது ஜனத்துடன்நன்கு பழகும் குணம்கொண்டவர்.

அவருக்கும்எல்லோருக்கும் இருந்ததைப் போலவே 

செல்லப் பிராணி வளர்க்கும் பழக்கமும் இருந்தது.

ஆனால் மற்றவர்களைப்போல நாயோ,பூனையோ, 

மானோஅல்லதுகிளியோஇவர் வளர்த்திடவில்லை.

இவர் ஒரு அந்த நாள்ரஜினிரசிகராகஇருந்ததினாலே 

"என் வழி தனி வழி" என்பது போல குரங்கு ஒன்று 

வளர்த்து வந்தார்.   அந்தக் குரங்கினை எப்போதும் 

தனது அருகிலேயே வைத்துக் கட்டிப்போட்டு 

வளர்த்து வரலானார்.அப்போது அவரை சந்திக்க 

அவரின் பால்ய நண்பர் பக்கிரி வந்தார். உடனே 

இவர் என்னாங்க பக்கிரி ஏது இவ்வளவு தூரம் 

என்று கேட்டிடும் போதே தனது கையில் வைத்து 

இருந்த ஒரு பிரம்பினால் அந்த குரங்கினை அதன் 

சிரசினில்  லேசாக  ஒரு  செல்லத்தட்டுதட்டினார்.

அதற்கு அவர் நண்பர் சொன்னார்.நான் 

தற்செயலாகவே வந்தேன்என பதில் சொன்னார்.

உடனே தலைவர் அப்படியா பக்கிரி  என்று பதில் 

சொல்லிடும் போதே தனது கையில்வைத்திருந்த  

பிரம்புவைத்து குரங்கின் தலையில் மேலும்  ஒரு 

அடி அடித்து  பார்த்தார். உடனே சரிங்க பக்கிரி, நம்ம 

ஊர் இப்போது எப்படி இருக்கிறது ? இப்போது அந்த 

குரங்கிற்கு மேலும் ஒரு பிரம்படி.

இந்த கேள்வி கேட்டதற்கு பக்கிரி ஊர்அதுஅப்படியே 

தான் இருக்கு என்றார்.   உடனே தலைவரும் சரி 

உன் உடன்பிறப்புக்கு இப்போது எப்படி இருக்கிறது 

வினவும்போது குரங்கிற்கு மேலும் ஒரு பிரம்பு அடி.


இது போல பலதலைப்பில் பேசிடும் ஒவ்வொரு 

அடுத்த வினாடியும் தலைவர் அவர் வளர்த்து வரும் 

அந்த குரங்கிற்கு அடிகளை தொடர்ந்து தந்த 

வண்ணம் இருந்தார்.


பக்கிரியால் பொறுக்க முடியவில்லை.  இறுதியாக 

தலைவரிடம் ஏனுங்க அந்த குரங்கு பேசாம அது 

பாட்டுக்குத் தானேங்க இருக்கு. அதைப்போய் இப்படி 

ஓயாம அடிஅடின்னு அடிச்சுகிட்டே இருக்கீங்களே 

என்று கேட்டார் பக்கிரிதலைவரிடம்.


இதுகேட்டவுடன் தலைவர், டேய் பக்கிரி இங்கே வா. 

வந்து எனது இருக்கையில் அமர்ந்து கொள்.எதற்கும் 

ஒரு பாதுகாப்புக்கு இந்த பிரம்பை நீ கையில் 

வைத்துகொள்.நான் சற்று உள்ளே சென்று 

வருகிறேன் என்று சொல்லிவிட்டு பஞ்சாயத்து 

தலைவரும் வீட்டினுள் சென்று விட்டார். பக்கிரி 

பேசாமல் அமர்ந்து இருந்தார். உடனே அந்த குரங்கு 

மெதுவாக பக்கிரி அருகினில் வந்தது.பிறகு மீண்டும்

 அவரது வேட்டியை லேசாக இழுத்துப் பார்த்தது. 

பிறகு அவர்மீது தாவி அமர்ந்துகொண்டது. பிறகு 

அவரது காதினை பிடித்து இழுத்துப் பதம் பார்த்திடத்

 துவங்கியதும் பக்கிரி சப்தம் போட்டு கத்த 

ஆரம்பித்துவிட்டார். தலைவரே !என்னையைக்

காப்பாத்துங்க!!என்னையை காப்பாத்துங்க !!என்று 

கூறியவுடன் இப்போது சிரித்துக்கொண்டேவந்த 

தலைவர் என்னடா பக்கிரி இப்ப தெரியுதா நான் ஏன் 

அந்த குரங்கினை அடிக்கடி அடித்துக்கொண்டு 

இருந்தது காரணத்திற்காகத்தான் என்றவரலாற்று 

உண்மைதனைத்தெரிந்துகொள்ளவேண்டும் பக்கிரி 

என்றார் தலைவர் அவர்கள்.


இந்தகுரங்கின்செயல்கள்நமக்குஇரண்டுவேறுவேறு 

உண்மைகளை அங்கே புலப்படுத்துவது தெரிகிறது.

ஒன்று நமது மனகுரங்கினை நாம் அப்போதைக்கு 

அப்போது தட்டி தட்டி வைக்காமல் இருந்தோமே 

ஆனால் நம்மை பல்வேறு சிக்கல்களில் மாட்ட 

ஆரம்பித்து விடும் என்பது ஒன்று. 


மற்றொன்று அந்த குரங்கினைப் போலபெண்களும் 

அவர்களை நாம் அதேபோல அப்பப்ப தட்டி 

வைக்காமல் இருந்தோமென்றால் அதே கதைதான் 

நமக்கும் என்று அந்த பஞ்சாயத்துதலைவர் சொன்ன 

கதை இன்றும் என்றும் நம்மால் மறக்க முடியாத 

ஒன்று நண்பர்களே.


அதனால் தான் "மனம் ஒரு குரங்கு"என்னும் அந்தக் 

கால திரைப்படத்தினில் ஒரு பாடல் உண்டு. 

"மனம் ஒரு குரங்கு, மனித மனம் ஒரு குரங்கு"

"அதைத் தாவ விட்டால் தப்பி ஓட விட்டால்" 

"நம்மைப் பாவத்தில் ஏற்றிவிடும்.அது பாசத்தில்  

தள்ளிவிடும்" 

என்ற பாடலில் வரும் வரிகள் உண்மையின் 

வெளிப்பாடு. எனவே இப்போது நான் உங்களிடம் 

இருந்து விடைபெறும் வேளை வந்து விட்டது 

என்று கருதுகிறேன் அன்பர்களே.  நீங்கள் 

அனைவரும் உங்களது மனத்தினை தாவ விட்டு 

விடாமல் உங்களது மனக் கட்டுப்பாடில் வைத்துக்

கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டு நன்றி 

கூறி விடை பெறுகிறேன். உங்கள் அன்பன் மதுரை 

T.R.பாலு.வணக்கம் நேயர்களே !!









No comments:

Post a Comment