Friday 28 February 2014

ஆண்களில் யாரெல்லாம் மனைவிக்கு பயப்படுவதுபோல நடித்து வாழ்வபர்கள் ?





                                  அல்லாஹூ அக்பர் !!



அஸ்ஸலாமு அலேக்கும் !!  வ அலெக்கும்சலாம் 


                                                              வ  ரஹ்மத்துல்லாயு 


                                                        தாலா பரக்காத்துஹூ !!              



அன்புள்ள தோழர்களே !!



உங்கள் அனைவருக்கும் சாந்தியும் 



சமாதானமும் உண்டாகட்டும்.



எல்லாம் வல்ல இறைவன் அல்லாவினால் 



படைக்கப்பட்ட இந்த துனியாவில் அந்த நிகரற்ற 



அருளாளனும் அளவற்ற கொடையாளனும்



ஆகிய அல்லாவினால் முதன்முதலாக 



உருவாக்கப்பட்ட இந்த ஆதாம் என்கின்ற ஆண் 



இனத்தின் வம்ச வாரிசுகளாகத்தான் நாம் 



அனைவரும் ஆண்களாக இங்கே 



வாழ்ந்துவருகின்றோம் என்ற 



கருத்துக்கு, யாதொரு மாற்றுக் கருத்தும் இங்கே 



கிடையாது.



அப்படிப்பட்ட அந்த ஆண்கள் இனத்தில் 



பெண்களுக்கு (அவரவர்களது 


மனைவிகளுக்கு) பயப்பட வேண்டிய 



விஷயத்திற்கு யாவரும் பயம் 



கொள்ள வேண்டியதுதான். நான் இல்லை என்று 



சொல்ல வரவில்லை.ஆனால் எல்லா 



விஷயத்திற்கும் ஒருவன் பயந்து சாகின்றான் 



என்று சொன்னால் அவனது நடத்தை 



சந்தேகத்திற்கு இடமளிப்பதாகவே 



நாங்கள் கருதுவதற்கு இடம் இருக்கின்றது. 



அதுவே உண்மையும் ஆகும்.



எனவே இந்தபயந்தாங்கொள்ளிகள் பட்டியலில் 



யார் யார் முக்கியமாக இடம் பெறுகிறார்கள் 



என்பதை பட்டியல் இட்டுக்காட்டுவதே இந்தக் 



கட்டுரையின் முக்கிய நோக்கம் தோழர்களே !!




1) எவன் ஒருவன் தனது மனைவியை, அவள் 



முகத்துக்கு முன்னால்மட்டும், மதிப்பு தந்து பிறகு 



அவளை துச்சமாக எண்ணி மனசார அவளுக்கு 



அவமரியாதை தருகிறானோ அவன்.



2) எவன் ஒருவன் தனது மனைவிக்கு மனதார 



துரோகம் இழைக்கிறானோ அவன்.



3)  எவன் ஒருவன் தனது மனைவியை துறந்து/



மறந்து விட்டு மற்றொரு பெண்ணுடன் உடல் 



உறவு வைத்துக்கொண்டு திரிகிறானோ அவன்.



4)  எவன் ஒருவன் தனது முதல்மனைவியை 



அவள் நல்ல மன நிலையில் இருந்தும்கூட 



அவளை விவாகரத்து செய்துவிட்டு/அல்லது 



அவளைத் தள்ளி வைத்துவிட்டு இன்னொரு 



பெண்ணை மனம்செய்துகொண்டு/இல்லை 



எனில் அவன் இன்னொரு பெண்ணை தன்னுடன் 



சேர்த்துக்கொண்டு இல்வாழ்க்கையை 



நடத்திக்கொண்டு இருக்கிறானோ அவன் 



5) எவன் ஒருவன் ஓடி ஆடி உழைத்துப் பிழைக்க 



ஓராயிரம் வழிகள் இருந்தாலும் அவைகளை 



புறந்தள்ளிவிட்டு, தனது மனைவியைவிபச்சாரம் 



செய்திடச்சொல்லிவற்புறுத்தி/அவளின் முழுமன



ஒப்புதல் இல்லாமல் அவளைக் கட்டாயப்படுத்தி 



மாற்றான்களோடு உடல் உறவு செய்திடச் 



சொல்லி அதன் மூலம் வரும் ஊதியத்தின் 



மூலமாகக் குடும்பம் நடத்தி ஏச்சுப் பிழைப்பு 



நடத்திக்கொண்டு இருக்கிறானோ அவன்.




ஆக தோழர்களே !! இந்த ஐந்து வகை 



ஆண்கள்தான் எப்போதும் மனைவிக்கு 



பயப்படுவதுபோல நடித்து வாழ்ந்துகொண்டு 



இருப்பவர்கள் என்று வரலாறு நமக்கு கூறுகிறது 



என்பதை உங்கள் அனைவரின் கவனத்திற்கு 



நான் கொண்டு வருகிறேன். நிச்சயம் இவர்களை 



எல்லாம் அந்த எல்லாம் வல்ல இறைவன் 



அல்லாஹ்  ஒருபோதும் மன்னித்திடவே 



மாட்டான். இவர்கள்தான் நரகம் என்ற கொடுமை 



மட்டிலுமே நிறைந்திருக்கும் அந்த 



ஈனத்தனமான பாவ பூமிக்கு முதல் முதலாக 



சென்று நரகத்தின் கொடுமையை 



அனுபவிப்பதற்காக காத்து நிற்கும் முதல் ஐந்து 



நபர்கள் ஆவார்கள் என்றுதான் வேதநூல்கள் 



நமக்கு எடுத்துக் கூறி வருகின்றன.



இவர்கள்தான் பாவிகள்கூட்டத்தில் 



முதல்வரிசையில் நிற்கும் முன்னிலைத் 



தளபதிகள் இவர்கள் மட்டுமே !!



இவர்களின் காற்றுக்கூட நம்மீது படாமல் நாம் 



நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இது 



நம்மைப்போன்ற ஆண்கள் இனத்திற்கு 



விடப்படும் ஒரு எச்சரிக்கை. இதை நாம் மனதில் 




ஏற்று செயல்பட்டு மனைவியை மதித்து வாழ 



கற்றுக்கொண்டு அவளுக்கு பயப்பட வேண்டிய 



விஷயத்திற்கு மட்டும் பயந்து அவளோடு நாம் 



இணைந்து நல்ல வாழ்க்கை வாழ்ந்து இந்த மண் 



பயனுற நாம் அனைவரும் வாழ்ந்திடுவோம்.



நன்றி !! வணக்கம் !!




அன்புடன் மதுரை T.R.பாலு. 

No comments:

Post a Comment