உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம்
உலகுக்கு!!
இனம் ஒன்றாக, மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
என் உயிரினும் மேலான என்அன்புத்
தமிழ் உடன்பிறப்புகளே !!
உங்கள் அனைவருக்கும் எனது
இதயம் கனிந்த வாழ்த்துக்களுடன்
கூடிய வணக்கங்களை முதலில்
சமர்பித்துக் கொள்கின்றேன். நிற்க!!
எனது ஆருயிர் அன்பு சகோதரர்
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய
Dr. T.R.சோமசுந்தரம் M.B.,B.S.,D.A.
அவர்களின் ஒட்டுமொத்த
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய
அருந்தவப்புதல்வன்முனைவர்
S.இராமசாமி Ph.d ஐக்கிய அமெரிக்க
நாட்டின் கிளீவ்லாண்ட் மாநிலத்தில்
வசித்து வருகிறார். அவரிடம்
இருந்து பெறப்பட்ட ஒரு மின்
அஞ்சல் கடிதம் உங்களது
கவனத்திற்கு இங்கே கீழே
தரப்பட்டுள்ளது. அதைப் பார்த்து,
படித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள
தமிழ் மொழியின் சிறப்பு
இயல்புகளை நீங்களும் கண்டு
இரசித்திட வேண்டும் என்ற உயரிய
நோக்க்கத்துடன் நான் அதை
அனுப்பி உள்ளேன். கண்டுமகிழ்க !!
மனமதில் பேரானந்தம் கொள்க !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை TR.பாலு.
*********************************************************************************
அன்பார்ந்த நண்பர்களுக்கு:காலை வணக்கம்.ஒரு நல்ல குறும்படத்துடன் இன்றைய காலை இனிதே தொடங்கியது. சிறப்பான செய்தி, நாம் அனைவரும் பார்க்க வேண்டிய குறும்படம்.”செம்மொழி”http://www.youtube.com/watch?v
=ebmajdLYtT8 இல்லத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து கட்டாயம் பாருங்கள். அண்மையில் திரு.இரவிக்குமார் என்ற ஒரு நண்பரின் பதிவில் ஒரு சில அருமையான வரிகளைப் படித்தேன். நம் கூகுள் குழுமத்தின் இருக்கும் நூலைப் படி... சங்கத்தமிழ் நூலைப் படி...என இருக்கும் Email Footerஐக் காட்டிலும் தற்போது மிகத் தேவையான, நாம் அனைவரும் பின்பற்றவேண்டிய வரிகள் அவை. இனி அதையே நம் email footerஆக நாம் வைத்துக் கொள்வோம். நாம் முழுத்தமிழில் பேசினால் நம் குழந்தைகள் தானே தனித்தமிழில் பேசுவார்கள்…தவறாக மொழிக் கலப்பு செய்து தாய்த்தமிழை அழிக்காதீர்கள்… மிக்க நன்றி.என்றென்றும் அன்புடன்,இராமசாமி **********************************************************************************************
No comments:
Post a Comment