" அச்சம் என்பது மடமையடா " !!
" அஞ்சாமை திராவிடர் "
" உடமையடா " !!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
என் அன்புக்கும், பாசம் ஒன்றே
நிறைந்திருக்கும் அந்த ஒப்புயர்வு
இல்லாத தூய உணர்வுகளுக்கும்
என்றென்றும் பாத்திரம்
உள்ளவர்களாக, வாழ்ந்து வரும்
அன்புத்தமிழ் உடன்பிறப்புகளே !!
உங்கள் அனைவருக்கும் எனது
இதயம் கனிந்த வாழ்த்துக்களுடன்
இணைந்திட்ட வணக்கங்கள் !!நிற்க.
அன்பர்களே !!
இன்றைய தினம், ஒரு மிகவும்
முக்கியமான விஷயம் ஒன்றினைப்
பற்றி, இந்நாளில், இந்த
சமுதாயத்திற்கு தேவையான
நேரமதில் நான் கொடுக்க இருக்கும்
இந்த விளக்கங்கள் என்பது,
இன்றைய இளம்
தலைமுறையினருக்கு, மிக மிக
பயன் உள்ளதாகவே இருக்கும்,
என்று எண்ணி, அந்த சிந்தனையை
நான் என் அறிவினில் ஏற்றிவைத்து,
அதனை ஒரு பட்டிமன்றத்திற்குள்
கொண்டு சென்று இந்த பொருளை
ஒரு விவாதமாக ஆக்கி இதற்கு
என்ன விடை கிடைத்தது
என்பதனை இந்தக் கட்டுரையின்
வாயிலாக நாம் கண்டு,படித்து
மகிழ்வோமா ? என் அன்புத்தமிழ்
நெஞ்சங்களே !!
முத்தமிழையும் வளர்ப்பதற்காக
சங்கம் ஒன்று அமைத்துப் பெருமை
பெற்ற நகர் ஒன்று உண்டு என்றால்
அதன் பெயர்தான் மதுரை.
அந்த நகரினிலே ௨௦1௦ ம் ஆண்டு
சனவரித் திங்கள் முதல்தேதி அன்று
உருவாக்கப்பட்ட நல்லதொருசங்கம்
தான் 59 வயதுகளைக் கடந்து அன்று
வாழ்ந்து வரும் "பெருசுகளை"
தன்னகத்தே உறுப்பினர்களாகக்
கொண்டு செயல்பட்டு வரும்
"வயதுகடந்த வாலிபர்கள்
முன்னேற்றச் சங்கம் "(வ.வா.மு.ச)
என்பதாகும்.இந்த நடப்பு ஆண்டு 2௦13
ஆண்டு அந்த அமைப்பின் 3 வது
ஆண்டு விழா, சனவரித் திங்கள் 1ம்
தேதி அன்று இந்த சங்கம்
மூன்றாவது ஆண்டு நிறைவு
விழாவினை மிகச் சிறப்பாகக்
கொண்டாடி மகிழ்ந்தனர்
அப்போது அந்த அமைப்பினர் ஒரு
பெரும் " சிந்தனைப்பட்டி மன்றம் "
ஒன்றினையும் ஏற்பாடு செய்து
கொண்டாட மறந்திடவில்லை. அந்த
பட்டி மன்றத்தின் தலைப்பு இதுதான்.
"விவாகரத்து" (மன முறிவு)என்னும்
நிகழ்விற்கு அதிகம் தூண்டுதலாக
இருப்பது, கணவனா? மனைவியா?
இந்தப் பட்டி மன்றத்திற்கு அணிக்கு
இரண்டு பேச்சாளர்கள் வீதமாக
இரண்டு அணிக்குமாக மொத்தம்
நான்கு பேச்சாளர்கள் தத்தமது
பேசும் கலையில் அவரவர்கள்
பெற்றிருந்த ஆற்றலை பேசிடும்
போது வெளிக்காட்டி மகிழ்ந்தனர்.
அந்தப் பட்டிமன்றத்திற்குநல்லதோர்
நடுவராக கடமையாற்றிட,
முத்தமிழ் வித்தகர், தமிழ் கற்றறிந்த
நல்ல அறிஞர், பேச்சுக் கலையில்
வல்லவர், கலைஞர், திருக்குவளை
பெற்றெடுத்த முத்தமிழ் பொருள்
உரைத்து பேசிடும் கலையில்
திறமையாளர் இப்படிப்பட்ட நல்ல
குணங்களை தன்னகத்தே பெற்ற
தென்னகத்தின் ஒரேஒரு பகுத்தறிவு
சிந்தனைமிகு சமூக சீர்திருத்தவாதி
திரு மு.கருணாநிதி அவர்களின்
மானசீகமான ஆசிகளைப் பெற்ற
இந்தத் தரணியிலேதன்னிகரில்லாத
ஒப்புயர்வற்ற கவிஞர், வசனகர்த்தா,
நடிகர்,சிந்தனையாளர்,சீர்திருத்த
எண்ணங்களை தனது முகப்
புத்தகத்தின் (FACEBOOK) வாயிலாக
இன்றைய தினம் அகில உலகம்
முழுவதும் சுமார் ஆயிரம்
பார்வையாளர்களுக்கு மேல்
பெற்றிருக்கின்ற மதுரை மாநகர்
பெற்றெடுத்த மாதவப் புதல்வன்,
தற்போது சென்னை நகரவாசியாக
இங்கே குடிஇருக்கும் ஒப்பற்ற
கவிஞர் மதுரை T.R.பாலு அவர்கள்
நடுவராகக் கடமையாற்றிட
ஒப்புக்கொள்ள, பட்டி மன்றமும்
அணிப்பேச்சாளர்கள் அனைவரும்
பேசி முடித்திட்ட நிலையினில்
நடுவர் தமது அறிமுகப் பேச்சோடு,
மேலே கட்டுரையில் குறிப்பிடப்
பட்டுள்ள தலைப்பைப் பற்றி சீரிய
தமது கருத்துக்களையெல்லாம்
அதிலே பதிய வைத்துவிட்டு, அதன்
பிறகு தனது தீர்ப்பினையும்
வழங்கிடக் காத்துக்கொண்டு
இருக்கிறார் அவர். நேயர்களே !!
உங்களைப்போலவே நானும் அந்த
அறிஞரின் உரையைப் படிக்க
ஆவலாய்க் காத்துகொண்டு
இருக்கிறேன். நன்றி !! வணக்கம் !!
இப்போது நடுவர் தமது உரையினை
ஆரம்பித்து பேசிடத் துவங்குகிறார்.
இனிமேல் அன்னார் (பேசிடத்
துவங்குவது முதல் இறுதிவரை
LIVE DOCUMENT ஆக ) உரையைக்
கேட்போமா ? மன்னிக்கவும்.
படிப்போமா ? என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !!
நடுவரின் உரை :-
பேரன்புமிக்க பெரியோர்களே, இந்த
அவைதனில் அமர்ந்திருக்கும்
ஆன்றோர் பெருமக்களே !! அன்பு
ஒன்றையே தங்களதுஅணிகலனாக
அணிந்து இங்கே அமர்ந்திருக்கும்
தாய்க்குலத்தின் பிரதிநிதிகளே !!
வருங்கால சமுதாயத்தின் ஆற்றல்
மிகுந்த தூண்களே !! இளம்
சிறார்களே !! முதற்கண் உங்கள்
அனைவருக்கும் எனது இதயம்
கனிந்த,கரம் குவிந்த, அன்புமட்டுமே
நிறைந்த வாழ்த்துக்களுடன் கூடிய
வணக்கத்தைதெரிவித்துக்கொள்ளக்
கடமைப் பட்டிருக்கிறேன் என்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
சிந்தனைநோக்கம்உள்ளநல்லஒரு
பட்டிமன்றத்தினை ஏற்பாடு
செய்திட்ட மன்றத்தின்
உறுப்பினர்களை என்னால்
பாராட்டாமல்இருக்கமுடியவில்லை
என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
(அன்பர்களே !! ஒரு சிறிய விளம்பர
இடைவேளைக்குப் பிறகு இங்கே
நடுவர் அவர்களின் வரலாற்றுச்
சிறப்பு மிக்க உரையும், விளக்கமும்,
இறுதியாக, அன்னாரது தீர்ப்பும்
வரக்காத்துக்கொண்டு இருக்கிறது.
படித்து இன்புறுக !!நன்றி.வணக்கம்!!
(தொடரும்).................
No comments:
Post a Comment